Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறைவடைந்தது ! பிரதமர் ரணிலுடனான கலந்துரையாடல் குறித்து சஜித் கூறுவது !

Featured Replies

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் காண முடியுமென அமைச்சரும்  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்காக இன்று இரவு அமைச்சரும் அக்கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச  அலரி மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அலரிமாளிகையில் குறித்த கலந்துரையாடல் நிறைவுற்ற நிலையில் அலரிமாளிகைக்கு வெளியில் நின்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

கலந்துரையாடல் மிகவும் சுமுகமாக இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி குறித்தே இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.

அதோபோன்று எதிர்கால சவால்கள் குறித்தும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கொள்கின்ற சவால்கள் குறித்தும் இன்றைய கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான விடயங்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்தும் எதிர்காலத்தில் அறிவிப்போம்.

ஒட்டுமொத்தமாக இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாகவும் ஆரோக்கியமானதாகவும் இடம்பெற்றது.

இதேவேளை, இன்றைய கலந்துரையாடலின் பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் காணமுடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, கபிர் ஹசிம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்க மூன்று நிபந்தனையுடன் ரணில் சம்மதிப்பதாக தகவல்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ களமிறங்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொள்கையளவில் இணங்கியுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
எனினும், சில நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக சஜித் வாக்குறுதியளிக்கும் பட்சத்திலேயே அதற்கான இணக்கத்தை ரணில் வெளிப்படுத்துவார் என ரணில் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இன்று காலை சஜித்துடனான சந்திப்பில் இந்த நிபந்தனைகளை ரணில் வெளிப்படுத் துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
  • கருத்துக்கள உறவுகள்

ரணில் - சஜித் பேச்சுவார்த்தை தோல்வி

ரணில் - சஜித் பேச்சுவார்த்தை தோல்வி

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கமின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தை நேற்றிரவு (11) 9.30 மணிக்கு அலரி மாளிகையில் ஆரம்பமான நிலையில் இரவு 11.30 வரை இடம்பெற்றிருந்தது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் நபரை தெரிவு செய்வதற்வதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.

இந்த பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட இருந்த நிலையில், நேற்று வரையில் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தை வெற்றி – பங்காளிகளுடன் கலந்துரையாடி வேட்பாளர் தெரிவாவார்…

September 11, 2019

sajith-ranil.jpg?resize=800%2C466

பேச்சுவார்த்தை வெற்றி…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தையின் பலன்களை எதிர்வரும் சில நாட்களில் கண்டுகொள்ள முடியும் என, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்றிரவு (10.09.19) 9.30 மணிக்கு அலரி மாளிகையில் ஆரம்பமான பேச்சுவார்த்தை இரவு 11.30 வரை இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் தொடர்ந்தும் இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறுமெனவும் தனக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடியே வேட்பாளர் தெரிவு…

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி ஐ.தே.க தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் இன்னும் சில நாட்களில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், அதற்கான நாள் இதுவரை இறுதிச்செய்யப்படவில்லை என, அறியமுடிகின்றது.

 

http://globaltamilnews.net/2019/130289/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.