Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியா தனது வேலையை பார்க்கட்டும்இலங்கை விவகாரத்தில் தலையிடக்கூடாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா தனது வேலையை பார்க்கட்டும்இலங்கை விவகாரத்தில் தலையிடக்கூடாது

வீரகேசரி நாளேடு

ஜே.வி.பி. தெரிவிப்பு; யோசனையையும் நிராகரிக்கவேண்டும் என்கிறது பிரித்தானியா தனது வேலையை மட்டும் பார்த்துக்கொள்ளவேண்டும். இலங்கை விவகாரங்களில் தலையிடக்கூடாது. பிரித்தானியா தற்போது உலக நாடுகளை ஆட்சிசெய்யும் நாடல்ல. உலக நாடுகளில் அந்த நாடும் ஒரு அங்கமாகவே உள்ளது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தை மண்டியிடச்செய்யும் சர்வதேச சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே பிரித்தானியாவின் இலங்கைக்கான அக்கறையை நாங்கள் நோக்குகின்றோம். எமது நாட்டின் விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற பெயரில் அரசாங்கம் முன்வைத்துள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம். மஹிந்த சிந்தனையை மீறியுள்ளமையினால் நாட்டு மக்களும் அதனை நிராகரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். அரசாங்கத்தின் யோசனைகைள கண்டித்து நாடளாவிய ரீதியில் எமது கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனையை முன்வைத்து சர்வதேசத்தையும் ஜே.வி.வி.யையும் ஏமாற்றுவதற்கு முயற்சிக்கின்றது. ஆனால் இறுதியில் அரசாங்கமே ஏமாற்றமடையபோகிறது என எச்சரிக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய் திளார் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராய விசேட பிரதிநிதி ஒருவரையும் நியமிக்க அந்நாடு தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். பிரித்தானியாவுக்கு எமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு என்ன உரிமை உள்ளது? பிரித்தானியா மீண்டும் உலக நாடுகளை ஆட்சி செய்ய முயற்சிக்கின்றது போல் தெரிகின்றது. பிரித்தானியா இந்த உலகில் ஒரு அரசாங்கம் மட்டுமே என்பதனை கருத்திற்கொள்ளவேண்டும். அந்த நாடு உலகை ஆட்சிசெய்த யுகம் முடிவடைந்துவிட்டது.

இலங்கை நாட்டை பிரிப்பதற்கு சர்வதேச மட்டத்தில் சதி முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. அந்த சதி முயற்சியின் ஒரு அங்கமே பிரித்தானியாவின் நகர்வாக உள்ளது. பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர் ஆணையாளர் அண்மையில் பத்திரிகை அலுவலகமொன்றுக்கு சென்று பேசியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சு என்ன செய்கின்றது என்று தெரியவில்லை. வெளிநாடொன்று எமது நாட்டில் தேவøயில்லாமல் தலையிடும்போது அதனை வெளிவிவகார அமைச்சு தடுக்க முயற்சிக்கவேண்டும்.

இலங்கையை சர்வதேசத்தின் முன் மண்டியிடச்செய்ய சர்வதேச மட்டத்தில் முயற்சிக்கப்படுகின்றது. வெளிநாடுகளின் முகவராக செயற்படும் ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டுவர சர்வதேசம் முயற்சிக்கின்றது. இதற்காக புலிகளின் அண்மைக்கால விமானத் தாக்குதலை சர்வதேசம் சிறப்பாக பயன்படுத்திவருகின்றது.

அரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற பெயரில் இனப்பிரச்சினை தீர்வு யோசனையை முன்வைத்துள்ளது. அரசாங்கத்தின் முழுமையான யோசனையாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம். இந்த யோசனை 2005 ஆம் ஆண்டு கிடைத்த மக்கள் வரத்தை அப்பட்டமாக மீறியுள்ளது. யோசனை தயாரிக்கப்படும்போது மஹிந்த சிந்தனை கவனத்திற்கொள்ளப்படவில்லை. ஒற்றையாட்சி என்ற பதமே அரசாங்கத்தின் யோசனையில் குறிப்பிடப்படவில்லை. அதற்கு மாறாக கூட்டரசாங்கம் என்ற பதம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு கிடைத்த மக்கள் வரத்தின்படி ஒற்றையாட்சி என்ற அடிப்படையை மீறி அரசாங்கத்தால் எந்த யோசனையையும் தயாரிக்க முடியாது. எமது நாடு தற்போது குடியரசு என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் தீர்வு யோசனையில் குடியரசு என்ற விடயம் இல்லை. இதேவேளை நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமா ? இல்லையா? என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது அரசாங்கம் ஜே.வி.பி.யுடன் செய்துகொண்ட உடன்படிக்கையில் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அதனை மறந்துவிட்டது. அரசாங்கம் அனைத்து விடயங்கிளலும் ரட்டைவேடம்போட்டுக்கொண்டிரு

  • கருத்துக்கள உறவுகள்

மோனை வீரவன்ச... நீங்க உங்க வீரத்தைக் காட்டி 1948 இல பிரித்தானியாட்ட இருந்து சுதந்திரம் வாங்கல்ல. அவனாப் போட்ட பிச்சையது. குட்டையைக் குழப்பினதும் அவங்க தான் சோ தெளிய வைக்க வேண்டியவையும் அவைதான். அவைக்கு அதுக்கு தார்மீகக் கடமை இருக்குது. செய்யத்தான் வேணும்..!

ஒப்பந்தம் புகழ் டட்லி செனநாயகா

சிங்களம் புகழ் பண்டாரநாயகா

செத்தல் மிளகாய் புகழ் சிறீமாவோ

வட்ட மேசை புகழ் ஜே ஆர் ஜெயவர்த்தனா

கில்ரன் கொட்டல் புகழ் பிரேமதாச

மரம் செடி கொடி புகழ் டி பி வியதுங்க

செம்மணிப் படுகொலை புகழ் சந்திரிக்கா

செஞ்சோலைப் படுகொலை புகழ் மகிந்த

வரைக்கும் தமிழர்களுக்கு தீர்வுப் பொதி வைக்கவும் மறக்கல்ல... அதுக்குள்ள சிங்களப் பேரினவாதப் பூதத்தை அடைக்காமலும் விடல்ல..! சோ.. முந்தி உலகம் புலிக்குத்தான் தடை போட்டுது இப்பதான் தென்னாபிரிக்கா போல சிங்கள அரசு மீதும் தடை வருகுது. இதேதான் நடந்தது தென்னாபிரிக்க வெள்ளையினர் ஆட்சிக்கும் எதிராக..! கறுப்பின மக்களின் போராட்டம் நியாயமா இருந்தும் இராணுவ இயத்திரத்தால் அடக்க ஒத்துழைத்த மேற்குலகம் தான் இன்று நெல்சன் மண்டேலாவுக்கு நோபல் பரிசு கொடுத்துக் கெளரவிச்சிருக்குது..! சும்மா இல்ல மோனை. உலகம் எல்லாம் பிச்சை எடுத்து சீவிக்கிற உங்களுக்கே இவ்வளவு வாய்க் கொழுப்புன்னா.. பிச்சை போடுறவனுக்கு எவ்வளவு இருக்கும்..! :P :blink:

Edited by nedukkalapoovan

கோமாளிகளின் ஆட்சியாலே இந்த நிலமை ஆனால் இன்று ரணில் இருந்திருந்தால் நிலமை தலைகீழாக இருந்திருக்கும் தேசியத்தலைவரின் தூர நோக்கு சிந்தனை எப்பொழுதும் 100% வெற்றியைத்தான் தருகின்றது தந்தது தரும்

மோனை வீரவன்ச... நீங்க உங்க வீரத்தைக் காட்டி 1948 இல பிரித்தானியாட்ட இருந்து சுதந்திரம் வாங்கல்ல. அவனாப் போட்ட பிச்சையது. குட்டையைக் குழப்பினதும் அவங்க தான் சோ தெளிய வைக்க வேண்டியவையும் அவைதான். அவைக்கு அதுக்கு தார்மீகக் கடமை இருக்குது. செய்யத்தான் வேணும்..!

ஒப்பந்தம் புகழ் டட்லி செனநாயகா

சிங்களம் புகழ் பண்டாரநாயகா

செத்தல் மிளகாய் புகழ் சிறீமாவோ

வட்ட மேசை புகழ் ஜே ஆர் ஜெயவர்த்தனா

கில்ரன் கொட்டல் புகழ் பிரேமதாச

மரம் செடி கொடி புகழ் டி பி வியதுங்க

செம்மணிப் படுகொலை புகழ் சந்திரிக்கா

செஞ்சோலைப் படுகொலை புகழ் மகிந்த

வரைக்கும் தமிழர்களுக்கு தீர்வுப் பொதி வைக்கவும் மறக்கல்ல... அதுக்குள்ள சிங்களப் பேரினவாதப் பூதத்தை அடைக்காமலும் விடல்ல..! சோ.. முந்தி உலகம் புலிக்குத்தான் தடை போட்டுது இப்பதான் தென்னாபிரிக்கா போல சிங்கள அரசு மீதும் தடை வருகுது. இதேதான் நடந்தது தென்னாபிரிக்க வெள்ளையினர் ஆட்சிக்கும் எதிராக..! கறுப்பின மக்களின் போராட்டம் நியாயமா இருந்தும் இராணுவ இயத்திரத்தால் அடக்க ஒத்துழைத்த மேற்குலகம் தான் இன்று நெல்சன் மண்டேலாவுக்கு நோபல் பரிசு கொடுத்துக் கெளரவிச்சிருக்குது..! சும்மா இல்ல மோனை. உலகம் எல்லாம் பிச்சை எடுத்து சீவிக்கிற உங்களுக்கே இவ்வளவு வாய்க் கொழுப்புன்னா.. பிச்சை போடுறவனுக்கு எவ்வளவு இருக்கும்..! :P :lol:

சரியாக சொன்னீர்கள். விமல் வீரவன்ச போன்ற கோமாளிகள் அரசியலில் இருப்பது தமிழர்களின் அதிர்ஷ்டம் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.