Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படை கப்பல்களில் வான் பாதுகாப்பு கருவிகளை பொருத்த வேண்டும்: கொழும்பு ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படை கப்பல்களில் வான் பாதுகாப்பு கருவிகளை பொருத்த வேண்டும்: கொழும்பு ஊடகம் [வெள்ளிக்கிழமை, 4 மே 2007, 17:28 ஈழம்] [அ.அருணாசலம்]

வான்புலிகளை எதிர்கொள்ள சிறிலங்கா கடற்படை கப்பல்களிலும் வான் பாதுகாப்பு கருவிகளை பொருத்த வேண்டும் என்று கொழும்பு ஊடகம் யோசனை தெரிவித்துள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள கட்டுரை:

பலாலி கூட்டுப்படைத் தளத்தின் மீது வான்புலிகள் நடத்திய இரண்டாவது தாக்குதல் தொடர்பாக படையினர் ஆராய்ந்து கொண்டிருந்த போது விடுதலைப் புலிகள் மூன்றாவது வெற்றிகரமான தாக்குதலையும் நடத்தி முடித்துவிட்டனர்.

விடுதலைப் புலிகளின் ஒற்றை இயந்திரத்தைக் கொண்ட Zlin-143 அல்லது செஸ்னா வகை வானூர்திகள் மிகவும் முக்கியம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் செல் எரிவாயு நிலையம் ஆகியவற்றை கடந்த சனிக்கிழமை தாக்கியுள்ளன.

புத்தளம் பகுதியில் இரு வானூர்திகளை மக்களும், படையினரும் அவதானித்ததனை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்தது.

ஏப்ரல் 29 ஆம் நாள் அதிகாலை 1.50 மணியளவில் கொழும்பு நகரத்தின் வான்பரப்பில் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் பிரவேசித்தன. அப்போது மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள பார்படோசில் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தை பெரும்பாலான மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

எனினும் மற்றைய நாட்களைப் போல அல்லாது பாதுகாப்பு தரப்பினர் வான் எதிர்ப்பு சாதனங்களை இயங்க வைத்துள்ளனர். இவை கொழும்பு துறைமுகம், கட்டுநாயக்க மற்றும் இரத்மலானை வான்படைத் தளங்கள் ஆகியவற்றில் இருந்து இயக்கப்பட்டன.

முதல் கட்ட தகவல்களின் படி விடுதலைப் புலிகளின் வானூர்திகள் பத்தலன்குண்டுவ, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, பமுன்கம ஆகிய பகுதிகளின் ஊடாக வந்துள்ளது. அவை பமுன்கம பகுதியை கடந்த போது அப்பகுதி கடலில் நின்ற டோரா பீரங்கிப் படகில் இருந்து முதலாவது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடற்பகுதியில் இருந்து வானூர்திகள் தரைப் பகுதிக்குள் நுழைந்த போது எல்லா வானூர்தி எதிர்ப்பு சாதனங்களும் இயங்க வைக்கப்பட்டன.

முதலாவது வானூர்தி ஹெரவலப்பிட்டியவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான செல் எரிவாயு நிலையத்தின் மீது இரு குண்டுகளை வீசியது. அந்த குண்டுகள் எரிவாயுக் குழாய்களை சேதமாக்கியதால் அவை தீப்பற்றிக் கொண்டன. இரண்டாவது வானூர்தி இந்திய நிறுவனத்திற்குச் சொந்தமான கொலன்னாவ எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதலை நடத்தியது. அங்கும் இரு குண்டுகள் வீசப்பட்டன அவற்றில் ஒன்று வெடிக்கவில்லை.

கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் மீது 1942 ஆம் ஆண்டு யப்பானும் குண்டு வீச்சுக்களை நடத்தியிருந்தது.

இந்த சமயத்ததில் கட்டுநாயக்கவில் இருந்து இரு எம்.ஐ-24 ரக உலங்கு வானூர்திகளும், அனுராதபுரம் மற்றும் இரத்மலானை பகுதிகளில் இருந்து கே-8 ரக பயிற்சி வானூர்திகளும் அனுப்பப்பட்டன.

விடுதலைப் புலிகளின் வானூர்திகளை அழிப்பதே அவற்றின் நோக்கம்.

இரத்மலானை, கட்டுநாயக்க தளங்களில் இருந்த ராடார்கள் வான்புலிகளின் வானூர்திகளை ஒவ்வொரு சமயமும் காட்டிக்கொண்டு இருந்தன. பிரதான ராடார் தொகுதியில் இருந்து தப்புவதற்காக அவை தாளப்பறந்து சென்றன. எனினும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் எதுவித சேதமும் இன்றி கொழும்பு வான்பரப்பில் 45 நிமிடங்கள் சுற்றித்திரிந்துள்ளன.

நிலத்தில் உள்ள தமது இலக்குகளை அடையாளம் காண்பதற்காக விடுதலைப் புலிகள் நிலா வெளிச்சத்தில் தாக்குதலை தொடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வான்புலிகள் கொழும்பு வான்பரப்பில் நுழைந்த போது படைத்தரப்பினர் துடுப்பாட்டப் போட்டியை ரசித்துக் கொண்டு இருந்தனர். எனினும் அதன் பின்னர் வானூர்திகளை சுட்டு வீழ்த்துவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய, வான்படைத் தளபதி ரொசான் குணதிலக்கவை தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகளின் வானூர்திகளை அழிப்பதற்கு முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் படி பணித்திருந்தார். மேலும் பார்படோசில் இருந்த அரச தலைவருக்கும் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.

தமது சில வானூர்திகள், விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தேடி அழிப்பதற்காக வானில் எழுந்துள்ளதாக கோத்தபாயவிடம் வான்படைத் தளபதி தெரிவித்திருந்தார். ஆனால் வான்புலிகள் சேதங்கள் இன்றி கொழும்பு வான்பரப்பை விட்டு சென்றுவிட்டனர். இது அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடிகளை கொடுத்துள்ளது. இது மகிந்த அரசாங்கத்தின் செயற்திறனற்ற தன்மையை காட்டியுள்ளது.

மறுநாள் காலை முப்படைத் தளபதிகள், காவல்துறை மா அதிபர் ஆகியோரை அழைத்த கோத்தபாய, சம்பவம் தொடர்பாக விசாரித்ததுடன், பலமணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில் வான்புலிகளின் நெருக்கடிகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டதுடன், தற்போதைய வான் பாதுகாப்பு முறைகளை உடனடியாக நவீனமயப்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக ஆராய்ந்து முழு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க நிபுணர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் போரை புதிய பரிணாமத்திற்கு இட்டுச் சென்றுள்ளதுடன் மக்களிற்கு பெரும் உளவியல் தாக்கங்களையும் கொடுத்துள்ளது.

இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசாங்கம், நிபுணர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கின்றது. இது தொடர்பாக முன்னாள் படைத்துறை அதிகாரிகளின் ஆலோசனைகளை அரசாங்கம், இன்று வரை பெற முடியாது உள்ளது.

மேற்குலக நாடுகளில் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்னர் ஒரு குழுவாக பதிவு செய்து இருப்பார்கள். எனவே அந்த அரசாங்கங்கள் தேவைப்படும் போது அவர்களின் ஆலோசனைகளை பெற முடியும். அரசாங்கம், அவர்களை படையில் மீண்டும் சேர்க்கவும் முடியும்.

சிறிலங்கா அரசாங்கம், இந்த நெருக்கடிகளை தீர்ப்பதற்கு வேறுபட்ட வழியை கையாண்டுள்ளது. புதிய வான் பாதுகாப்பு சாதனங்களையும், வானூர்திகளையும் கொள்வனவு செய்ய முயன்றுள்ளது. அதே சமயம் அரசாங்கம், கடற்படை கப்பல்களிலும் வான் பாதுகாப்பு சாதனங்களை பொருத்த அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.

பெரிய கப்பல்களில் இதனை பொருத்துவதன் மூலம் அவற்றை முல்லைத்தீவு கடற்பகுதிக்கு அனுப்பி வான்புலிகளுக்கு பெரும் சேதங்களை உண்டு பண்ணலாம். ஏனெனில் கடற்படையின் முன்னைய தகவல்களின் படி முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் வானூர்திகளின் பயிற்சிகளை அவர்கள் பலமுறை அவதானித்துள்ளனர்.

தற்போது கடற்படையினரிடம் 4-க்கும் மேற்பட்ட பாரிய கப்பல்கள் உண்டு. அவை இலகு ரக உலங்குவானூர்தியின் தரிப்பிடத்தையும் கொண்டவை. கடற்படையினருக்கு வான் பாதுகாப்பு சாதனங்களை கொள்வனவு செய்ய முன்னைய அரசுகள் முயற்சித்தன. எனினும் பாதுகாப்பு படையினரிடம் நடைபெற்ற மோதல்களால் அது கைகூடவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

பெரிய கண்டுபிடிப்பு!

கடலில் பறக்கும் குருவிகளை சுட இது உதவக்கூடும். சுட்டுவீழ்த்தும் குருவிகளை பசிக்கும் நேரங்களில் சூப்பு வைத்து கடற்படையினர் உண்ண முடியும். பெரிய பறவைகளின் கால்களை பாவித்து பார்பீகியூ போடலாம். சாப்பிடுவதற்கு டேஸ்ட் ஆக இருக்கும்.

:lol:அப்படியே மகிந்தா,அமைச்சர்களின் தலையிலும் விமான எதிர்ப்பு கருவிகளை பூட்டி விட்டால் பாதுகாப்பாக இருக்கும்.. :lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கப்பலிலை மட்டுமில்லை அவங்கடை மாட்டுவண்டில்,சைக்கிள்,ஓட்டோ எல்லாத்திலையும் பாதுகாப்பு கருவியள் பூட்டவேண்டி வந்துட்டுது பாருங்கோ :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.