Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று

 

z_jun-p08-Sri-Lanka02

சர்வதேச ரீதியில் சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காக கோண்டு 14.12.1954 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய உலக சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்று தொடங்கி இன்று வரை உலகம் முழுவதிலும் அக்டோபர் 01 ஆம் திகதி சிறுவர்களுக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது.

எனினும் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு தினங்களில் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது. 20.11.1989 அன்று சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரகடனம் நிறைவேற்றப்பட்டமைக்கு அமைவாக 18 வயதிற்குக் குறைந்த அனைத்துப் பிரஜைகளும் சிறுவர்களாகக் கருதப்படுகின்றனர்.

இன்றைய சிறுவர்கள் எதிர்கால உலகின் அடித்தளமாவர். அவர்களது எதிர்காலத்தை திட்டமிட்டு நெறிப்படுத்தி சமுதாயத்திற்கு பலன் தரக்கூடியவர்களாக மாற்றியமைப்பது வளர்ந்தோர் ஒவ்வொருவரினதும் கடமையாகும். தெற்காசியாவில் சிசு மரண விகிதம் குறைந்த நாடு இலங்கையாக காணப்படுகின்றது.

அத்துடன் இன்று உலக முதியோர் தினமும் கொண்டாடப்படுகிறது.

1990ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இந்தத் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதியோர்களாக கருதப்படுகின்றனர்.

முதியோர்களும் தமது காலத்தில் குழந்தைகள் சிறுவர்கள் போல் உள்ளதாலோ என்னவோ இந்த இரு தினங்களும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக சிறுவர் தின தேசிய வைபவம் மாத்தளை எட்வேர்ட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொள்வார்.

உலக சிறுவர் மற்றும் வயோதிபர் தினத்தை முன்னிட்டு றுஹூணு சேவை ஒழுங்கு செய்துள்ள இசை நிகழ்ச்சி இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணி முதல் இடம்பெறும்.

தெற்கு, ஊவா, மற்றும் சப்ரகமுவ மாகாண சிறுவர்களுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. தென் மாகாண ஆளுனர் ஹேமால் குணசேகரவின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது

http://www.dailyceylon.com/190128/

இன்று சர்வதேச சிறுவர்கள் தினம்
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்

சரணடைய சொன்னார்கள்
சரணடைந்தேன்
பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள்
உட்கார்ந்தேன்
சாப்பிட பிஸ்கட் தந்தார்கள்
சாப்பிட்டேன்
அப்புறம் பார்த்தா சுட்டுக் கொன்றார்கள்
இறந்துவிட்டேன்.
பரவாயில்லை. ஆனால் ஒரு கேள்வி
என்னை ஏன் சுட்டுக் கொன்றார்கள் ?
ஏனென்றால் என் அப்பா பயங்கரவாதியாம்.
எனவே நானும் பயங்கரவாதி என்கிறார்கள்
சரி. அப்படியென்றால்
ஜேவிபி விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்றீர்கள்
ஆனால் அவர் பிள்ளைகளை பயங்கரவாதி என்று ஏன் கொல்லவில்லை?
ஏனென்றால் அவர் சிங்களவர்
இப்போது புரிகிறதா ?
நடந்தது போர்க்குற்றம் இல்லை இனப்படுகொலை என்று!

குறிப்பு - இவ்வாறு இனப்படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்குரிய நீதியை எப்போது, எப்படி பெற்றுக் கொடுக்கப் போகிறோம்?

மூலம் : முகநூல் 

கோண்டாவிலில் மூத்தோர்கள் கெளரவிப்பு

 

-செல்வநாயகம் ரவிசாந்

கோண்டாவில் சி.சி.த.க பாடசாலையின் ஏற்பாட்டில், சிறுவர், முதியோர் தின விழா, இன்று (01) முற்பகல் பாடசாலையின் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

image_85a2830cd3.jpg

பாடசாலையின் அதிபர் திருமதி சி.நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை ஆசிரியரும் சமூக சேவகருமான தேசகீர்த்தி ஞான திருக்கேதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த விழாவில், மாணவர்களின் சிறுவர், முதியோர் தொடர்பான பேச்சுக்கள், கவிதை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மூத்தோர் சிலர் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டும், சிறப்புப் பரிசில்கள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கோண்டாவிலில்-மூத்தோர்கள்-கெளரவிப்பு/71-239456

 

சிறுவர் தின நிகழ்வுகள்

 

-செல்வநாயகம் ரவிசாந்

சுன்னாகம் - கலைவாணி முன்பள்ளிச் சிறார்கள் யாழ். சுன்னாகம் பொதுநூலகத்தில், இன்று (01) சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.

image_381cc5ca92.jpg

இன்றுக் காலை 09.30 மணி முதல் சுன்னாகம் பொதுநூலக சிறுவர் பகுதியில் சுன்னாகம் பொதுநூலக பிரதம நூலகர்  திருமதி ஜெயலட்சுமி சுதர்சன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. 

சிறுவர் பகுதியிலுள்ள நூல்களை வாசித்தல், ஆக்கச் செயற்பாடுகளில் சிறார்கள் கலந்துகொண்டதுடன்,  சிறார்களின் குழுப்பாடல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.

தொடர்ந்து மேற்படி நிகழ்வில் கலந்துகொண்ட சிறார்கள அனைவருக்கும்  சுன்னாகம் பொதுநூலகத்தினரால் சிறப்புப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சிறுவர்-தின-நிகழ்வுகள்/71-239439

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.