Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிரம்ப் பதவி நீக்க விசாரணை: ஆவேசமடைந்து இழிவான வார்த்தையை பயன்படுத்திய அமெரிக்க அதிபர்

Featured Replies

இந்த வாரம் தன் மீதான பதவி நீக்க விசாரணையில் ஆஜராக சட்ட ரீதியிலான அழைப்பாணையை வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்போவதாக தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியினர் மீது ஆவேசமடைந்து கடும் வார்த்தைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தியுள்ளார்.

தனது அரசியல் எதிராளியை வீழ்த்த வெளிநாட்டு நபர் ஒருவரிடம் உதவி கோரியதாக ஜனநாயக கட்சியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவிநீக்கம் செய்வது குறித்த விசாரணை தொடர்பாக விசாரித்து வரும் குழுக்கள் இது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளன.

இழிவான வார்த்தை ஒன்றை பயன்படுத்தி, ஜனநாயக கட்சி தலைவர்களை நேர்மையற்றவர்கள் என்று விமர்சித்த டிரம்ப், அவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தினார்.

ஆனால் இந்த விசாரணை நடப்பதை நியாயப்படுத்தியுள்ள ஜனநாயக கட்சியினர், நிச்சயம் ஒரு நேர்மையான நடைமுறையில் விசாரணை நடைபெறும் என்று நம்பிக்கை வெளிப்படுத்தியிருந்தனர்.

என்ன கூறினார் டிரம்ப்?

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய டிரம்ப், இந்த குற்றச்சாட்டில் டிரம்ப் பழிவாங்கியதாக கூறப்பட்ட முன்னாள் அமெரிக்கத் துணை அதிபரான ஜோ பிடென் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவரையும் 'முழுமையான ஊழல் பேர்வழிகள்' என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்த விசாரணை தொடர்பான புலானய்வு குழு தலைவர் ஆடம் ஸ்கிஃப் மீது தனது கோபத்தை டிரம்ப் வெளிப்படுத்தியிருந்தார்.

ஆடம் ஸ்கிஃப் மற்றும் நான்சி பெலோசி,படத்தின் காப்புரிமைREUTERS Image captionஆடம் ஸ்கிஃப் மற்றும் நான்சி பெலோசி,

மிகவும் கீழ்தரமானவர் என்றும், அவமதிப்பு நடத்தையால் தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் ஸ்கிஃப் குறித்து டிரம்ப் கூறினார்.

எந்த ஆதாரமும் இல்லாமல் புகார் அளித்தவரின் வார்த்தைகளை ஏற்று ஸ்கிஃப் இந்த விசாரணை அறிக்கையை தயாரித்ததாக டிரம்ப் குற்றம்சாட்டினார்.

 

 

டிரம்ப் மீது விசாரணை ஏன்?

அமெரிக்காவின் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், அதிபர் டிரம்ப் உக்ரேன் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசி உரையாடல் மேற்கொண்டதாக முறையாகப் புகார் வைத்ததைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்தது.

இவர்கள் இருவரும் தொலைப்பேசியில் என்ன பேசினார்கள் என்பது கூறப்படவில்லை, ஆனால் அதிபர் டிரம்ப் முன்னாள் அமெரிக்கத் துணை அதிபரான ஜோ பிடென் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவர் மீதும் உக்ரேன் விசாரணை செய்ய வேண்டும் என்றும் , அவ்வாறு செய்யவில்லையெனில் அந்நாட்டுக்கு அழைத்து வரும் ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்திவிடும் என்று அச்சுறுத்தியதாகவும் ஜனநாயக கட்சியின் குற்றம்சாட்டுகின்றனர்.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினரும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசி, அதிபர் டிரம்ப் 'இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

டிரம்ப் மீது விசாரணை ஏன்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சியினரின் முயற்சிகளை ''குப்பை'' என்று வர்ணித்துள்ளார்.

அதிபர் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஜனநாயக கட்சியினர் மத்தியில் பலத்த ஆதரவு இருந்தாலும், குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையில் இது தொடர்பாக ஒப்புதல் கிடைக்காது என்றே கூறப்படுகிறது.

கடந்த ஜுலையில் ஆப்ரிக்க - அமெரிக்க வழக்கறிஞர் குறித்து டிரம்ப் பதிவிட்ட ட்வீட் ஒன்று, ஒருவரை இன ரீதியிலாக தாக்குவது என அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி குற்றம்சாட்டினார்.

ஜனநாயக கட்சியின் பிரதிநிதியான எலிஜா க்யூமிங்க்ஸ் மற்றும் அவரின் மேரிலாண்ட் மாவட்டம் குறித்து டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டார்.

கறுப்பின மக்களை அதிகமாக கொண்ட க்யூமிங்க்ஸின் பால்டிமோர் மாவட்டத்தை எலிகள் மிகுந்த அழுக்கான ஒரு பகுதி என டிரம்ப் கூறினார்.

அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் குடியேறிகளை நடத்தும் விதம் குறித்து விமர்சித்திருந்த க்யூமிங்க்ஸ் பிறரை `கொடுமைப்படுத்துபவர்` என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க மக்கள் கணக்கெடுப்புப்படி, 50 சதவீதத்துக்கும் அதிகமான கறுப்பின மக்கள் வாழும் மாவட்டம் குறித்து டிரம்ப் பேசியது இன ரீதியிலான தாக்குதல் என சபாநாயகர் நான்சி பெலோசி குற்றம் சுமத்தினார்.

https://www.bbc.com/tamil/global-49915961

  • தொடங்கியவர்

இன்று, சீன நாடும் முன்னைய அமெரிக்க உப அதிபர் மற்றும் அவரின் மகன் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ட்ரம்ப் கேட்டுள்ளார். 

இது மீண்டும் சர்ச்சையை பூதாகரமான நிலைக்கு கொண்டு செல்லலாம். 

அதேவேளை அமெரிக்க வெளிவிவகார செயலர் மைக் போம்போய் இத்தாலியில் இருந்து தான் இந்த உக்ரேன் - ட்ரம்ப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாக கூறியுள்ளார். இவர் இவ்வளவு நாளும் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை. 

அமெரிக்காவின் பிரபல இராணுவ பள்ளிக்கூடமான வேஸ்ட் பெயிண்ட் சென்றவர் இவ்வாறு உண்மையை ஒளிப்பது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. 

அத்துடன் இவர் பிரபல ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டபடிப்பும் கற்றவர் ஆவார். 

  • தொடங்கியவர்

முன்னாள் துணை அதிபர் பைடன், அவரது மகன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க டிரம்ப் வலியுறுத்தல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடவுள்ள முன்னாள் துணை அதிபர் பைடன் மற்றும் அவரது மகன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்படி சீனா மற்றும் உக்ரைன் நாடுகளை அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவரை எதிர்த்து முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. ஜோ பைடனின் மகன் ஹண்டர், உக்ரைன் நாட்டில் தொழில் செய்தபோது, ஊழலில் ஈடுபட்டதாகவும்,

கடந்த 2014ம் ஆண்டு அதுதொடர்பான விசாரணையை உக்ரைன் தொடங்கியபோது, அப்போதைய துணை அதிபராக இருந்த பைடன் விசாரணையை தனது செல்வாக்கை பயன்படுத்தி தடுத்தாகவும் சொல்லப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை பைடன் மறுத்து வரும் நிலையில், பைடன் மற்றும் அவரது மகன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்படி உக்ரைன் அதிபர் செலன்சிக்கு அதிபர் டிரம்ப், உக்ரைனுக்கான முன்னாள் தூதவர் குர்ட் வோல்கர் மூலம் அழுத்தம் கொடுத்ததாக அண்மையில் தகவல் கசிந்தது.

குர்ட் வோல்கரிடம் நடத்திய விசாரணை மூலம் அந்நாட்டு நாடாளுமன்றம் அத்தகவலை உறுதி செய்துள்ள நிலையில், பதவியை தவறாகப் பயன்படுத்தி, அந்நிய நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக கூறி, நாடாளுமன்றத்தில் டிரம்பை பதவி நீக்கம் செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்ற அதிபர் டிரம்ப், ஜோ பைடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் செய்த தொழில் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உக்ரைன் விசாரணை நடத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார். உக்ரைனில் செய்ததைப் போன்ற ஊழலையே சீனாவிலும் ஜோ பிடனும், அவரது மகனும் செய்துள்ளதாக கூறிய அவர், இதுதொடர்பாக சீனாவும் விசாரணை நடத்த வேண்டும் என கூறினார்.

https://www.polimernews.com/dnews/83268/முன்னாள்-துணை-அதிபர்-பைடன்,அவரது-மகன்-மீதான-ஊழல்குற்றச்சாட்டுகளைவிசாரிக்க-டிரம்ப்வலியுறுத்தல்

  • தொடங்கியவர்

அமெரிக்க மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையான தொடரும் சர்ச்சையில் சம்பந்தப்பட்ட குறுஞ்செய்தி வெளியாகியுள்ளது. 

 

Image result for us text to ukraine

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.