Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடுமையான செய்தியுடன் கொழும்பு செல்கிறார் ரிச்சர்ட் பெளச்சர்.

Featured Replies

கடுமையான செய்தியுடன் கொழும்பு செல்கிறார் ரிச்சர்ட் பெளச்சர்.

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாக தெற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கான அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் கொழும்பிற்கு செல்லவுள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08.05.07) செல்லும் இவர், இதன் போது சிறிலங்கா அரசாங்கத்தை பேச்சு மேசைக்கு திரும்பும் படியாக கடுமையான ஒரு செய்தியை அவர் எடுத்து வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்க அதிகாரிகளை ரிச்சர்ட் பெளச்சர் சந்திப்பதுடன் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனது கடுமையான நிலைப்பாட்டையும் தெரிவிக்க உள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய நாட்களில் பல தொடர்ச்சியான உயர்மட்ட சந்திப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் யாழ். குடாநாட்டிற்கும் செல்வார் என கூறப்படுகின்றது. பௌச்சர் மீண்டும் அமெரிக்க செல்வதற்கு முன்னர் எதிர்வரும் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ளார்.

நாடு மிக மோசமான மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டுள்ள நிலையிலும். பிரித்தானியா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி சிறிலங்காவிற்கான உதவித் தொகைகளை நிறுத்தியுள்ள நிலையிலும் பௌசரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

ரிச்சர் பௌச்சரின் சிறிலங்காவிற்கான பயணத்தின் போது மாலைதீவுக்கும் செல்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க உதவிச் செயலாளர் பௌச்சர் நாளை வருகிறார்

இலங்கையில் மேற்கொள்ளப்படும் சமாதான செயற்பாடுகள் மற்றும் முயற்சிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு எப்போதும் உண்டு. 2002 ஆம் ஆண்டுமுதல் நோர்வேயின் அனுசரணையில் இடம்பெற்றுவரும் சமாதான முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்துவருகின்றது. தொடர்ந்தும் அதே ஆதரவை வழங்குமென்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த தூதரக பேச்சாளர் மேலும் கூறியதாவது ; அமெரிக்கா, பிரித்தானியாவின் சமாதான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்குமா என்பதை றிச்சர்ட் பௌச்சரிடம்தான் கேட்கவேண்டும்.

இங்கு மோதல்கள் நிறுத்தப்பட்டு அமைதி ஏற்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் றிச்சர்ட் பௌச்சர் நாளை இலங்கைக்கு வருகின்றார். இது அவரது வழமையான விஜயமாகும்.

பாகிஸ்தான், பங்களாதேஷ் ,மாலைதீவு, கஸகஸ்தான் உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய நாடுகளுக்கு மேற்கொள்ளும் விஜயத்தின் ஒரு பகுதியாகவே இலங்கைக்கும் விஜயம் செய்கின்றார். இதில் வேறு எவ்வித முக்கியத்துவமும் கிடையாது.

இங்கு வரும் பௌச்சர் அரசாங்க தலைவர்கள், அரசியல் கட்சிகள்,சிவில் சமூக பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவார்.

-வீரகேசரி

அமெரிக்க உதவி அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்

மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங் களுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க அமைச்சர் றிச்சர்ட் பௌச்சர் மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கை வருகின்றார்.

அமெரிக்க அரசின் விசேட செய்தி ஒன் றையும் அவர் எடுத்து வருகின்றார் என்று அறியப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரச அதிகாரிகளை ரிச்சர்ட் பௌச்சர் சந்திக்கவுள்ளார். இலங்கையில் இடம் பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவர் தனது கடுமையான நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளார் என்று தெரியவருகிறது.

உதவி அமைச்சர் புதன் கிழமையன்று யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் மேற்கொள் கின்றார்.

தமது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் முன்னர் வியாழனன்று அவர் கொழும் பில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத் துவார்.

உதயன்

இலங்கை, வான் புலிகளால் கையுடைந்து போயுள்ளது..

இதற்கு முறிவு தறிவு செய்து மேலும் இலங்கையுடன் defence ஒப்பந்தங்கள் எழுதி வழமையான

முட்டுக்கொடுப்பு அத்துடன் germany british தடைவிதிக்கப்பட்ட நிதிகளை சரிப்படுத்தல்..... :P

Edited by KUGGOO

இது ஒரு கண்துடைப்பு அறிக்கைகள், இலங்கை வான் புலிகளால் கையுடைந்து போயுள்ளது..

இதற்கு முறிவு தறிவு செய்து மேலும் இலங்கையுடன் அடிமை ஒப்பந்தங்கள் எழுதி வழமையான

முட்டுக்கொடுப்பு சுற்றுலா.. அத்துடன் தடைவிதிக்கப்பட்ட நிதிகளை சரிப்படுத்தல்..... :P

:lol:

ஓ கடுமையான செய்திகளுடன் போகின்றாரா?

ஐயோ இதைவாசிக்க எனக்கே பயமாய் இருக்கு.. கீபோர்ட்டில் டைப் அடிக்க கைநடுங்கிது ஆஆஆஆஆ....

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 08-05-2007 15:33 மணி தமிழீழம் [மயூரன்]

ரிச்சாட் பெளச்சர் கொழும்பை வந்தடைந்துள்ளார்

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர்கொழும்பை வந்தடைந்துள்ளார். சிறீலங்காவில் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க செனட் சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் அழுத்தம் காரணமாக கொழும்பை வந்தடைந்த ரிச்சாட் பெளச்சர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அரச அதிபர்கள், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளார். அத்துடன் எதிர்வரும் 10ம் நாள் ஊடகவியலாளர் சந்திப்பையும் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கையின் கிழக்குப் பகுதிகளுக்கு வெளிநாட்டு தூதர்கள் செல்ல இருந்த தடையை நீக்கியது அரசு

இலங்கையின் மீது அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், தற்போது இலங்கையில் நிலவி வரும் மனித உரிமைகள், மனிதாபிமான நிலைமைகள், கிழக்கு இலங்கையில் அரசு மேற்கொண்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அரசியல் தீர்வுத் திட்டங்கள் உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித போகல்லாகம அவர்கள், அண்மைக் காலமாக கிழக்கு மாகாணத்திற்கு வெளிநாட்டு தூதர்களும், இராஜதந்திரிகளும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் செல்வதற்கு, வெளியுறவு அமைச்சகத்தால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு, நேற்று திங்கட்கிழமையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

அவர்கள் வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியின்றியே, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களின் சகல பகுதிகளுக்கும் செல்லலாம் என்று அவர் கூறியுள்ளார். பாதுகாப்பு படையினரால் அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை அடுத்து, அந்தப் பகுதிகள் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளன எனவும், அங்கு மீள் குடியேற்ற நடவடிக்கைகளும், புணர்நிர்மாணப் பணிகளும் நடைபெற்று வருகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் பௌச்சர் மூன்று நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். தமது பயணத்தின் போது இலங்கையின் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர், இராணுவத் தளபதிகள் உட்பட பலதரப்பினரைச் சந்தித்து உரையாடவுள்ளார்.

தனது பயணத்தின் போது யாழ்குடாப் பகுதிக்கும் சென்று அங்குள்ள நிலமைகளை நேரில் ரிச்சர்ட் பௌச்சர் கண்டறியவுள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/

கடுமையான செய்தி கொட்னு போட்டு கடைசியில் புலிகள் வன்முறைய கைவிடவேண்டும்

என்று சொல்லி போட்டு வருவார்

அதோடு சொல்லுவார் புலிகளின் தனி நாட்டு கொள்கையை எதிர்க்க்கவில்லை ஆனா அவர்கள் கையில் எடுத்த வன்முறையை தான் எற்று கொள்ளவில்லை என்று............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.