Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் 5 பேர் மலேசியாவில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் 5 பேர் மலேசியாவில் கைது

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் மேலும் ஐந்து பேர் மலேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஐவரும் மலாக்கா பேன்னெங், மற்றும் சிலாங்கூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் இரண்டு அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த வியாழக்கிழமை  அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தை தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இலங்கை துணைத்தூதர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களும் தற்போது கைதாகி இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை இவர்களது கைதுதொடர்பில் கூறிய, மலேசிய பொலிஸ் துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைமை துணை ஆணையர் டத்தோ அயோப் கான், கைதானவர்கள் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, நிதி திரட்டியதாக நம்புவதாகத் தெரிவித்தார்.

 

https://www.virakesari.lk/article/66755

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிப்பதற்காக பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் - மலேசிய அதிகாரி

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர்  அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாரியளவு பணப்பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள மலேசிய அதிகாரிகள் அது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

மலேசிய காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி டட்டுக் அயோப்கான் மைடின் பிச்சை இதனை தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வங்கிகணக்குகளை ஆராய்ந்தவேளை இந்த விபரங்கள் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர்களின் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் மூலமும் அவர்களது கைத்தொலைபேசிகளை ஆராய்ந்ததன் மூலமும்  காவல்துறையினர் விடுதலைப்புலிகளின் கொடிகள் அந்த அமைப்பின் தலைவரின் படங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதுடன் பெருமளவு பணப்பரிமாற்றம் இடம்பெற்றதையும் கண்டுபிடித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள்,மலேசியாவில் ஆட்சேர்;ப்பு அணி திரட்டல் நடவடிக்கைகளிற்காக இந்த நிதியை பயன்படுத்ததிட்டமிட்டிருக்கலாம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளிற்கு புத்துயிர் அளிப்பதற்கு அமைப்பொன்று முயற்சிகளை மேற்கொள்கின்றது இதன் காரணமாகவே இந்த கைதுகளை மேற்கொண்டுள்ளோம் என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவில் தனிநபர் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தில் இருவரை கைதுசெய்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறைகளை ஆதரித்ததன் காரணமாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்,எந்த கட்சியை சேர்ந்தவர்களாகயிருந்தாலும் காவல்துறையினர் சகித்துக்கொள்ளமாட்டார்கள் என தெரிவித்துள்ள அந்த அதிகாரி விடுதலைப்புலிகளிற்கு ஆதரவளிப்பவர்களையும் நிதி உதவி அளிப்பவர்களையும்; உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் நிலைமை குறித்து அனுதாபம் கொண்டிருப்பது பிழையில்லை ஆனால் விடுதலைப்புலிகளை ஆதரிப்பது தவறு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/66800

16 minutes ago, ampanai said:

மலேசிய காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி டட்டுக் அயோப்கான் மைடின் பிச்சை இதனை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு பெயர்போன மலேசியாவில் திடீரென நடக்கும் சம்பவங்கள் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையில் தேர்தல் காலத்தில் சிங்கள-பௌத்தர்களின் இனமதவெறியை தூண்டி வெற்றி பெற மகிந்த-கோட்டாபய போன்ற சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளிடம் பெருமளவு கையூட்டைப் பெற்றே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. இதற்கு கொலைகார மகிந்த அரசின் காலத்தில் ஏற்படுத்திய தொடர்புகள் காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது.  

மிலேச்ச பயங்கரவாதியான கோட்டாபயவின் ஊழியர்களாக சஹரான் கும்பல் குண்டு வெடிப்புகளை நடத்தியதன் பின்னணியில் மகிந்த-கோட்டாபய போன்ற சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் இருப்பதாக நம்பப்படும் நிலையில் முஸ்லிம் நாடான மலேசிய கைது நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.

அண்மைக் காலமாக வடக்கு-கிழக்கில் சோதனைச் சாவடிகளை அமைத்து ஆயுதங்களை கைப்பற்றும் நாடகத்தை இலங்கை பாதுகாப்புத்துறைப் பயங்கரவாதிகள் அரங்கேற்றி வருகின்றனர் என்று சிங்கள பத்திரிகைகளே செய்திகள் வெளியிட்டு வரும் நிலையில்,  மிலேச்ச பயங்கரவாதியான கோட்டாபய மருத்துவ காரணங்களைக் காட்டி அடிக்கடி சிங்கப்பூர் செல்வது இது போன்ற சதித்திட்டங்களுக்கான பணப் பரிமாற்றத்துக்காகவே என நம்பப்படுகிறது. 

https://yarl.com/forum3/topic/232979-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.