Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிஞர்கள் உதவவும்

Featured Replies

யாராவது கவிஞருக்கு சிலேடையாக கவிதை எழுதமுடியும் என்றால் தயவு செய்து பதில் அனுப்பவும்.

எனக்கு ஓரளவுக்கு Rap பாடல்கள் பாடத்தெரியும் ஆனால் கவிதை வருது இல்லை ஆகவே உங்களால் முடிந்தால் எனக்கு உதவவும் ஒரு விடயம் எனக்கு புலிகளின் வான்படை தொடர்பாக கவிதை வேண்டும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில பல சிறந்த கவிஞர்கள் இருக்கிறாங்க. உங்களுக்கு உதவி செய்வார்கள்.

தம்பி தமிழ் மாட்டுப்பையா!

இந்த இடத்தில 'கவிகளே! உதவுங்கள்." என்றால் இவ்வளவு நேரத்திற்குள்ளும் உதவி கிடைச்சிருக்கும். கவிஞர்களே! என்று நீங்கள் விளித்தவுடன் பயந்துவிட்டார்கள் போலும். ஆமா..., நீங்க உருவாக்க நினைக்கிற பாடலுக்கான கருத்தைச் சொல்லியிருக்கிறீங்க. நான் நினைக்கிறேன் நீங்க எதிர்பார்க்கிற விடயம் கவிதை வடிவம் என்பதைவிட சின்னச்சின்னச் சொற்கள் இணைந்த வசனக்கோர்வையாக இருக்கும். வேகமாகக் கூறும்பாணியைக் கொண்டதாக இருக்கும் அல்லவா...

வணக்கம் Cowboy

சிலேடை என்றால் கனக்கச் சொல்லலாம். வான் படை பற்றி பல கவிதைகள் களத்தில் இருக்கிறது. பிடித்திருந்தால் சம்பந்தப் பட்டவர்களுடன் பேசி பயன்படுத்தலாம்.

நீங்க கவிஞர்களே என்று விளித்தது தான் சரி. கவிகளே என்று ஆதிவாசி சொன்னது போல செய்திருந்தால் வேறுமாதிரிக் கூட அர்த்தம் வரும். [கவி - குரங்கு என்று பொருள் உண்டு. என் பெயரோடு குழப்பிக் கொள்ளாதீர்கள் -0) ]

கவி ரூபன்,

ஆதி சிலேடையாகச் சொன்னது உங்களுக்குப் புரியவில்லைப்போலும்.... :lol::huh::lol:

பொல்லைக் கொடுத்து அடி வாங்க முயற்சியா? (கவி)ரூபன் :P :P :P

ஆதி வாசி,

எல்லாரும் உங்கவாசி என்று நீங்க நினைத்தது எனக்குப் புரியவில்லை. சரி... சரி...

  • தொடங்கியவர்

ஆம்

எனக்கு சிங்கள அரசு அடுத்த அடி வாங்க முதல் என் பாடல் வெளி வர வேண்டும் என்று ஒரு ஆசை ஆகையால் தயவு செய்து உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

Edited by Tamilcowboy

என்னுடைய சின்ன முயற்சி

..பாருங்கள்..உதவினால் உபயோகியுங்கள்...

மற்றவர்கள் தொடருங்கள்

வானத்தில் இரண்டு வால் நட்சத்திரம்-அட

வான்புலி வந்து போனதடம்

மகிந்த பேச்சு காணாமப் போச்சு..

இன்றே துயரம் போச்சு

ஆயிரம் தீமுட்டை போட்டான்-அவன்

அரசாம் யார்தான் கேட்டார்..

கொட்டம் அடங்க

கோட்டை நடுங்க

வான்புலி தொடங்கியதே..நம்

வான்புலி முழங்கியதே..

வான்புலி தொடங்கியதே..நம்

வான்புலி முழங்கியதே..

சிங்கள ஆணவம் அடங்கியதே...

அவன் அள்ளியெறிந்தான்

ஆயிரம் குண்டை - அட

ஒன்றும் நடக்கவில்லை

புலி சொல்லியெறிவான்

ஒரேயொரு குண்டை-ஏய்

அவன் குறி பிழைக்கவில்லை

தமிழ் மக்களைக் கொல்வது உன் வேலை

புலி மக்களை தாக்குவது இல்லை இல்லை

அடி அடியெனவே அடி நடக்கும்

இடி வந்து விழுமெனத் தினம் தவிக்கும்

சிங்களதேசம் இருள்கின்றபோது

தமிழன் தேசம் விடிந்திருக்கும்

தமிழீழப்பூக்கள் மலர்ந்திருக்கும்..

தமிழீழப்பூக்கள் மலர்ந்திருக்கும்..

தமிழீழப்பூக்கள் மலர்ந்திருக்கும்..

  • தொடங்கியவர்

கவிதை நல்லா இருக்கு நான் எதிர் பார்த்த விடயங்கள் உள்ளே இருக்கு. ஆனா இது போதாது ஆகையால் யாராவது இதனை தொடரவும்.

காத்தில பறக்குது

கருத்துக்க நிறையுது

அரைமைல் உயரத்தில்

அதிசயம் புரியுது.

ராத்திரித் தூக்கத்தை

ரம்பு தொலைக்க,

ராணுவத் தலைகள்

ராட்டினம் ஆட,

ஆத்திரம் ஏற,

அச்சங்கள் பிறக்க,

காத்தில பறக்குது

கருத்துக்க நிறையுது

அரைமைல் உயரத்தில்

அதிசயம் புரியுது.

மாளிகைக் கிடங்கில்

மகிந்த முடங்க,

பாலித புலம்பலில்

பயம் இழையோட,

அவசர இலக்கம்

ஒன்றொன்றாறு

அலறி அடிக்கும்

அவசர நூறா..

காத்தில பறக்குது

கருத்துக்க நிறையுது

அரைமைல் உயரத்தில்

அதிசயம் புரியுது.

அவ்ரோ, கிபீர்

அடுக்கடுக்கா....

அள்ளிப் போட்டது

ஆர் கணக்கு?

ஐயோ… கேந்திரம்

பார்த்தடிக்கும்..

அதுதான்டா எங்க

புலிக் கணக்கு

கொட்டிப் போட்டது

ஒரு காலம்

கொட்டியா போடுது

இக்காலம்

காத்தில பறக்குது

கருத்துக்க நிறையுது

அரைமைல் உயரத்தில்

அதிசயம் புரியுது.

இந்த மெட்டு சரியாக இருக்குமா தமிழ் மாட்டுப்பையா? :lol:

Edited by ஆதிவாசி

வாவ் கொட்டிப் போட்டது ஒரு காலம்

கொட்டியா கோட்டது இக்காலம்..

நல்லாயிருக்கு ஆதி

வானில் பறக்குதடா புலி

தம்பி

வந்து பாரடா

பகைவன் மனசில் கிலி

காகம் பறந்தாலும்

துவக்கு தூக்கிறான்டா

கட கட ரெயின்

போனாலும்

வானைப் பார்கிறான்டா

அட தம்பியோ தம்பி

வானில் பறக்குதடா புலி

தம்பி

வந்து பாரடா

பகைவன் மனசில் கிலி

வந்து வந்து

குண்டு போட்டானே

எங்கள் முற்றத்தில்

வடிவான பிஞ்சுகளை

கொண்டு போட்டானே

அன்னை பக்கத்தில்

ஓடி ஓடிப் போகிறான்டா

இப்போ அச்சத்தில்

இனி

ஆடி ஆடிப் பறக்குமடா

புலிக் கொடி உச்சத்தில்

..

...

....

.............

..................

(பிடிச்சிருந்தா சொல்லுங்க தொடர்ந்து எழுதுவம். உங்களிடம் ஏதாவது மெட்டு இருந்தால் சொல்லுங்க மெட்டுக்கு பாட்டு எழுதுவம் <_< )

தொல்லை தர வந்த எதிரியிங்கே ஓடுகின்றான்-புலி

இல்லை நிகரென்றே தமிழ் மானம் காத்து நின்றார்.

எல்லையற்ற வான்பறந்து வாகையிங்கே சூடுகின்றார்-அவர்

எதிரியவன் முற்றத்திலே குண்டுமழை தூவுகின்றார்

சோழகக் காற்றிடையே பட்டம் விடும் காலம் அது-இன்று

ஈழத்தின் வான்படையாய் புலி வட்டமிடும் வானம் இது

நீலக் கடல்போலே தமிழீழ காற்றுவெளி-அதில்

உயரப் பறந்து வரும் வான்புலியோ பேரழகு

ஆண்டுகள் கழிந்தனவே ஆயிரம் ஆயிரமாய்-இங்கு

ஆணழகன் தமிழ் தலைவன் ஓடிவந்து நீ பிறந்தாய்

ஆண்டிருந்த மக்கள் நாம் அழுதிருந்த காலம் போய்

பூண்டோடு பகையழிக்க வான்படையை படைத்தாயோ

கொட்டம் அடக்க வந்தார் வானோடி நம் புலிகள்-அவர்

குண்டுகளைப் பார்த்தடித்தார் அழிந்தனவே உன் கெலிகள்

நாம் விட்டதோ கட்டு நாயக்கா மீதொரு வெள்ளோட்டம்-உன்

கை சுட்டதோ பட்டு பாரப்பா அது நமக்கெல்லாம் கொண்டாட்டம்

  • தொடங்கியவர்

வானில் பறக்குதடா புலி

தம்பி

வந்து பாரடா

பகைவன் மனசில் கிலி

காகம் பறந்தாலும்

துவக்கு தூக்கிறான்டா

கட கட ரெயின்

போனாலும்

வானைப் பார்கிறான்டா

அட தம்பியோ தம்பி

வானில் பறக்குதடா புலி

தம்பி

வந்து பாரடா

பகைவன் மனசில் கிலி

வந்து வந்து

குண்டு போட்டானே

எங்கள் முற்றத்தில்

வடிவான பிஞ்சுகளை

கொண்டு போட்டானே

அன்னை பக்கத்தில்

ஓடி ஓடிப் போகிறான்டா

இப்போ அச்சத்தில்

இனி

ஆடி ஆடிப் பறக்குமடா

புலிக் கொடி உச்சத்தில்

..

...

....

.............

..................

(பிடிச்சிருந்தா சொல்லுங்க தொடர்ந்து எழுதுவம். உங்களிடம் ஏதாவது மெட்டு இருந்தால் சொல்லுங்க மெட்டுக்கு பாட்டு எழுதுவம் :rolleyes: )

சூப்பரா இருக்கு உங்கள் கவிதை தொடருங்கள்

காகம் பறந்தாலும்

துவக்கு தூக்கிறான்டா

கட கட ரெயின்

போனாலும்

வானைப் பார்கிறான்டா

இது தான் இதுல Super

நான் விரைவில் இதனை கொஞ்சம் Rap பண்னிக்கட்டுறன் அதர்க்கு ஏத்தாற்போல் நீங்கள் எழுதுங்கள்.

நன்றி Tamilcowboy (இதை எழுதச் சொல்லி ஊக்கப்படுத்திய கஜந்திக்கும் நன்றிகள்),

தொடர்ந்து எழுதுவம் ... இசையோட வாங்க....

யாராவது கவிஞருக்கு சிலேடையாக கவிதை எழுதமுடியும் என்றால் தயவு செய்து பதில் அனுப்பவும்.

எனக்கு ஓரளவுக்கு Rap பாடல்கள் பாடத்தெரியும் ஆனால் கவிதை வருது இல்லை ஆகவே உங்களால் முடிந்தால் எனக்கு உதவவும் ஒரு விடயம் எனக்கு புலிகளின் வான்படை தொடர்பாக கவிதை வேண்டும் :lol:

எதோ நல்ல கவிதையா இருக்கும் என்று படிக்க ஓடோடி வந்தேன், ஓடோடி வந்த என்னை உதவி கேட்டு ஏமாற்றி விட்டீர்களே :unsure: சாரி எனக்கு சம்பந்தமில்லை போய்ட்டு வாரேன் :rolleyes:

நன்றி Tamilcowboy (இதை எழுதச் சொல்லி ஊக்கப்படுத்திய கஜந்திக்கும் நன்றிகள்),

தொடர்ந்து எழுதுவம் ... இசையோட வாங்க....

என் இனிய சகோதரனே இது உன்திறமை இதில் என்பங்கு எதுகுமில்லை

பாடலாக வெளிவர வாழ்ந்துக்கள்

திறமை இருப்பவர்கள் முயற்ச்சி செய்யாது இருப்பதுதான் தவறு அதைதான்

சுட்டிக்காட்டினேன்

...

இது தான் இதுல Super

நான் விரைவில் இதனை கொஞ்சம் Rap பண்னிக்கட்டுறன் அதர்க்கு ஏத்தாற்போல் நீங்கள் எழுதுங்கள்.

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

பாடலைத் தயாரித்து முடித்தவுடன் எங்களுக்கு இணைப்பைத் தர மறந்து விடாதீர்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • 4 months later...

எங்கேப்பா பாடல் இன்னும் தயாரிப்பிலா?????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.