Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசம் தலையிடாது - பசில் நம்பிக்கை

Featured Replies

இலங்கை ஜனா­தி­பதித் தேர்­தலில் எந்த சர்­வ­தேச தரப்­பி­னரும் தலை­யிட முயற்­சிக்க மாட்­டார்கள். நெறி­மு­றைப்­படி அது அப்­ப­டித்தான் இருக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் தேசிய அமைப்­பாளர் பசில் ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யாவின் ‘ தி ஹிந்து’ பத்­தி­ரி­கைக்கு பேட்­டி­ய­ளித்­துள்ள அவர்,

” 2015 ஆம் ஆண்டில் நடந்த தேர்­தலில் இந்­தியா அல்­லது வேறு எந்த நாடும் அவர்­களை (எதிர்க்­கட்சி கூட்­ட­ணியை) ஆத­ரித்­தன என்­ப­தற்கு தனிப்­பட்ட முறையில் என்­னிடம் எந்த ஆதா­ரமும் இல்லை. ஆனால் என்ன தவறு நடந்­தது என்­பதை இப்­போது நாங்கள் நன்­றாக புரிந்து கொண்டோம். முன்­ன­தாக எங்கள் அர­சாங்­கத்தை மாற்ற யாரும் செயற்­பட்­டி­ருந்தால் நாங்கள் இப்­போது நிலை­மையை சரி­செய்­துள்ளோம்.

இந்­தியா எங்கள் முத­லிட நண்பர் மற்றும் அண்டை நாடு. எனவே அர­சியல் மற்றும் பாது­காப்பு விஷ­யங்­களில் நாங்கள் எப்­போதும் இந்­தி­யா­வுடன் செல்ல வேண்டும், ஆனால் பொரு­ளா­தார மற்றும் பிற விஷ­யங்­களில் நீங்கள் சீனாவை மறக்க முடி­யாது .

இலங்­கையில் சுமார் 15.99 மில்­லியன் பதிவு செய்­யப்­பட்ட வாக்­கா­ளர்கள் உள்­ளனர். சுமார் 80% வாக்­கெ­டுப்பு நடந்தால் சுமார் 12 மில்­லியன் செல்­லு­ப­டி­யாகும் வாக்­கு­க­ளாக கரு­தப்­படும். எங்கள் இலக்கு 6.5 மில்­லியன் வாக்­குகள். வெற்றி பெற தேவை­யான 50 வீதத்தை கடந்­தாலே போதும். ஒரு உள்­ளூ­ராட்சி மன்ற வாக்­கெ­டுப்­புக்கு 40 வீத வாக்­குகள் போது­மா­ன­தாக இருந்­தது, ஆனால் ஒரு தேசிய தேர்­த­லுக்கு அது போதாது.

தேர்­தலில் தமி­ழர்­களின் வாக்­குகள் மிக முக்­கி­ய­மா­னவை . கடந்த காலங்­களில் என்ன நடந்­தது என்­பதை தமி­ழர்­களால் மறக்க முடி­யாது. ஆனால் இரு சமூ­கத்­தி­னரும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மன்­னிக்க வேண்டும். நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவையா என்­பதை மக்கள் தீர்­மா­னிக்­கட்டும். எமது கட்சி அதி­க­பட்ச அதி­காரப் பகிர்­வுக்கு உறு­தி­பூண்­டுள்­ளது. எங்கள் வேட்­பாளர் அல்­லது ஜனா­தி­பதி யார் என்­பது முக்­கி­ய­மல்ல, எங்கள் தலைவர் [மஹிந்த ராஜ­பக்ஷ] அரசாங்கத்தின் தலைவராக இருப்பார் [பிரதமராக]. எனவே, இந்த ஏற்பாடு எங்களுக்கு நன்றாக பொருந்துகிறது. அவர் எங்கள் தலைவர், அவர் நம் நாட்டின்  தலைவர் என்று தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/66891

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

இலங்கை ஜனா­தி­பதித் தேர்­தலில் எந்த சர்­வ­தேச தரப்­பி­னரும் தலை­யிட முயற்­சிக்க மாட்­டார்கள். நெறி­மு­றைப்­படி அது அப்­ப­டித்தான் இருக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் தேசிய அமைப்­பாளர் பசில் ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யாவின் ‘ தி ஹிந்து’ பத்­தி­ரி­கைக்கு பேட்­டி­ய­ளித்­துள்ள அவர்,

வேலிக்கு ஓணான் சாட்சி. 

  • தொடங்கியவர்

தமிழர்கள் நடந்ததை மறக்க வேண்டாம் ஆனால் ஒருவருக்கொருவர் மன்னிப்பளிக்க வேண்டும் த இந்து நாளிதழிற்கு பசில் செவ்வி

நடந்தவற்றை தமிழர்கள் மறக்க வேண்டியதில்லை. ஆனால் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ.


த இந்து ஆங்கில நாளிதழிற்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இந்தியா அல்லது வேறு எந்த நாடும் பின்னணியில் இருந்தன என்பதற்கு தனிப்பட்ட முறையில் என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், அப்போது என்ன தவறு களை விட்டோம் என்பதை, இப் போது நாங்கள் நன்றாக புரிந்து கொண்டோம். முன்னர் எங்கள் அரசாங்கத்தை மாற்ற அவர்கள் செயற்பட்டிருந்தால், இப்போது நிலைமையை சரிசெய்துள்ளோம் என்றார்.

இந்தியா எங்கள் முதலிட நண்பர் மற்றும் அண்டை நாடு, எனவே அரசியல் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நெருங்கி செயற்பட வேண்டும். ஆனால் பொருளாதார மற்றும் பிற விடயங்களில் நீங்கள் சீனாவை மறக்க முடியாது, என்று அவர் கூறினார்.

தமது ஆட்சியில் அதிகாரப்பகிர் வின் மூலம் தேசிய பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார். எனினும், புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியமா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்கட்டும் என்றார்.

http://valampurii.lk/valampurii/content.php?id=19513&ctype=news

10 hours ago, ampanai said:

தமிழர்கள் நடந்ததை மறக்க வேண்டாம் ஆனால் ஒருவருக்கொருவர் மன்னிப்பளிக்க வேண்டும் த இந்து நாளிதழிற்கு பசில் செவ்வி

புலிகள் சரணடைவதற்கான பேச்சுக்களில் பசில் ராஜபக்ச ஈடுபட்டவர். சரணடைந்தவர்களுக்கு நேர்ந்த கதி பின்னர் தெரியும் தானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.