Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து வெள்ளை அறிக்கை

Featured Replies

image_00eb8dbf11.jpg

மலேசியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்வதா என்பதை உள்துறை அமைச்சு மற்றும் அமைச்சரவையிடம் விட்டுவிடுவதாக பி.கே.ஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சு மற்றும் அமைச்சரவையின் நடவடிக்கை இருந்தால் மாத்திரமே நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என அன்வார் கூறியுள்ளார்.

ஆனால், தனிப்பட்ட முறையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் தமக்கு இணக்கபாடு இல்லையென்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் மீதான முழு விசாரணையையும் நடத்தும் பொறுப்பு பொலிஸாரிடம் விட்டுவிட வேண்டும். 

போலி நெருக்குதல் அளிக்கக் கூடாது. பொலிஸாரிடம் விசாரணை நடைமுறை குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை” என்றார்.

அத்துடன், தமிழீழ  விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்ப்பு கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் விவகாரம் குறித்து தற்காப்பு மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய வேண்டுமென முன்மொழியப்பட்ட ஆலோசனையை அவர் நிராகரித்துள்ளார்.

-மலேசிய ஊடகங்கள்

http://www.tamilmirror.lk/செய்திகள்/தமழழ-வடதலப-பலகள-கறதத-வளள-அறகக/175-240033

  • தொடங்கியவர்

இலங்கை அரசாங்கத்திற்கும்  விடுதலைப்புலிகளிற்கும் இடையில் 2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் தமிழர்கள் தொடர்பில் பாரிய  பயங்கரவாத சம்பவங்கள் எதுவும் இடம்பெறாத போதிலும் தேர்தல்களிற்கு முன்னர் சிங்கள பெரும்பான்மையின அரசியல் கட்சிகள்  விடுதலைப்புலிகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவது வழக்காமாக காணப்படுகின்றது.

தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிப்பது போன்று- பாதுகாப்பு என்ற விடயத்தை அடிப்படையாக கொண்டு தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வெற்றிவாய்ப்பை அதிகரிக்ககூடிய இரண்டு கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் முன்னாள் போராளியொருவரின் கைதும் மலேசியாவில் இடம்பெற்ற கைதுகளுமே அவை.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழர்கள் அதிகமாக வாழும் நகரில் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் புதைத்த நிலக்கண்ணிவெடிகள் இன்னமும் அகற்றப்படாததால் அப்பகுதியில் கண்ணிவெடிகள் மீட்கப்படுவது வழமையாக உள்ளது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மலேசியாவில் இடம்பெற்றுள்ள கைதுகள்  இலங்கை செய்தித்தாள்களில் முதல்பக்க செய்திகளாக இடம்பெற்றுள்ளன.

இந்த செய்திகள் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோத்தாபயவை விட வேறு எவருக்கும் அதிகமாக உதவப்போவதில்லை. அவரரே தேர்தலில் முன்னிலையில் நிற்கின்றார்.

 

========  

ஆர்கே ராதகிருஸ்ணன்

புரொன்ட் லைன்

தமிழில் ரஜீபன்

https://www.virakesari.lk/article/67031

 

 

மலேசியாவில் இடம்பெற்ற கைதுகளைப் பொறுத்தவரை, பயங்கரவாத பணக்கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு பின்னரே நபர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். கைதுகளையும்  அவற்றுக்கு கொடுமையான 2012 ஆம் ஆண்டின் பாதுகாப்பு குற்றங்கள் ( விசேட ஏற்பாடுகள் சட்டம் ( சொஸ்மா ) பயன்படுத்தப்பட்டதையும் மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது திங்கட்கிழமை நியாயப்படுத்தினார்." பொலிசார் எனக்கு நிலைவரத்தை விளக்கிக்கூறினார்கள். அந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவர்களுக்கு காரணங்கள்  இருக்கின்றன.பொலிசாரின் விளக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன்" என்று பிரதமர் ஊடகங்களுக்கு கூறினார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் ஆளும் நான்கு கட்சி பகதான் ஹரபான் கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக நடவடிக்கை கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதால், இந்த விவகாரத்தில் உள்ளக இயக்கவிசையொன்றும் செயற்படுகிறது என்று தோன்றுகிறது.இது தவிரவும், விசாரணைகள் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்ட நேரம் தேர்தல் போட்டியில் முன்னணியில் நிற்கும்  கோதாபயவைத் தவிர வேறு எந்த வேட்பாளருக்கும் உதவவில்லை.

https://www.virakesari.lk/article/66967

  • தொடங்கியவர்
1 hour ago, ampanai said:

மலேசியாவில் இடம்பெற்றுள்ள கைதுகள்  இலங்கை செய்தித்தாள்களில் முதல்பக்க செய்திகளாக இடம்பெற்றுள்ளன.

இந்த செய்திகள் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோத்தாபயவை விட வேறு எவருக்கும் அதிகமாக உதவப்போவதில்லை. அவரரே தேர்தலில் முன்னிலையில் நிற்கின்றார்.

அடிக்கடி 'வைத்தியம்' என்ற பெயரில் சிங்கையூர் சென்றுவரும் கோத்தாதான் இதன் சூத்திரதாரியோ தெரியவில்லை.

சஜித்தும் சரத்தும் இது பற்றி ஆராயவேண்டும்😎
 

11 hours ago, ampanai said:

அடிக்கடி 'வைத்தியம்' என்ற பெயரில் சிங்கையூர் சென்றுவரும் கோத்தாதான் இதன் சூத்திரதாரியோ தெரியவில்லை.

கோத்தபாயாவுக்கும் முஸ்லீம் பயங்கரவாதக் குழுக்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கிறது ஏற்கனவே தெரிஞ்சது தானே!

சஹ்ரான் கோஷ்டியை சேர்ந்த 100 பேருக்கு மேல கோத்தபாயா பாதுகாப்பு அமைச்சு நிதியில இருந்து நிறைய காலம் சம்பளம் வழங்கினது இப்ப பழைய செய்தி.

இன்னொரு பக்கம் முஸ்லிம்களுக்கு எதிரா 5, 6 பௌத்த மதவெறிக் குழுக்களையும் கோத்தபாயா உருவாக்கியிருக்கார்.

எனவே, முஸ்லிம்களை அழிகிறதுக்கான ஒரு திட்டத்தை கோத்தபாயா உருவாக்கியிருக்கார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.