Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

October 20, 2019

Bodi.jpg?zoom=3&resize=335%2C191

 

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

46 வயதான குலாம் போடி 2 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் சூதாட்ட வழக்கில் சிக்கியமை தொடர்பிலேயே இவ்வாறு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நநடைபெற்ற உள்ளூர் போட்டியின் போது அவர் சூதாட்டத்தில் சிக்கியிருந்தமைக்காக அவருக்கு 20 வருடம் தடை விதித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இது தொடர்பான வழக்கு பிரிட்டோரியாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றில் நடைபெற்ற நிலையில் அவர் மீது 8 விதமான ஊழல் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதனையடுத்து இவ்வாறு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது #குலாம்போடி  #சிறைத்தண்டனை  #தென்னாபிரிக்க

http://globaltamilnews.net/2019/132139/

விளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம் 

IMAGE-MIX.png
 

(நெவில் அன்தனி)

விளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் மற்றும் பந்தயம் பிடித்தல் ஆகிய குற்றச் செயல்களை முற்றாக ஒழிக்கும் விளையாட்டுத்துறை சட்டமூலம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த சட்டமூலம் எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி அல்லது 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சரின் சட்ட ஆலோசகர் பண்டுக கீர்த்தினந்த தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமயில் விளையாட்டுத்துறை அமைச்சின் மினி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

slc.jpg

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சூதாட்ட நிலையங்களுடன் நேரடியாகவே மறைமுகமாகோ தொடர்புடையவர்களும் அவர்களது நெருங்கிய உறவினர்களும் விளையாட்டுத்துறை சங்கங்களில் நிர்வாக உத்தியோகர்களாக பதவி வகிக்க முடியாது என்ற சட்டமும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கபட்டுள்ள சட்டமூலத்தில் அடங்குகின்றது. 

ஆசியாவிலேயே இலங்கையில்தான் இத்தகைய சட்டம் ஒன்று முதலாவதாகக் கொண்டுவரப்படவிருக்கின்றது எனவும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

மேலும் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த விளையாட்டுத்துறை சட்டம் அமுலில் உள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சிரினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவினால் பலரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களின் பின்னர் பரிந்துரைக்கபட்ட விடயங்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அறிக்கை ஆகியவற்றை சட்டமா அதிபரின் பார்வைக்கு சமர்ப்பித்து அவரது ஆலோசனை பெற்றே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விளையாட்டுத்துறையில் ஊழல் மோசடிகள் மற்றும் பந்தயம் பிடித்தல் ஆகியவற்றுக்கு எதிராக சட்டமூலம் கொண்டுவரப்படும்போது, விளையாட்டுத்துறையை நேசிக்கின்றவர்களும் விளையாட்டுத்துறையின் புனிதத்தன்மையை பாதுகாக்க முற்படுபவர்களும் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பார் என்பதில் சந்தேம் இல்லை என்றார். 

https://www.virakesari.lk/article/67179

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.