Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது

10915304_406520089528734_276907822317737

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் வேட்பாளர் ஒருவருக்கோ அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகளையோ வாக்குச் சீட்டில் அடையாளமிட முடியும்.


குறிப்பாக வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்புவாராயின் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது X எனும் புள்ளடியை இடுவது பொருத்தமாகும். அல்லது முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் இருக்குமாயின் முதலாவது விரும்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியினுள் 1 எனவும் இரண்டாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 2 எனவும் மூன்றாவது விரும்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 3 எனவும் அடையாளமிடுவது பொருத்தமாகும்.


எவ்வாறாயினும் 1 , 2 , 3ஆம் விருப்பு வாக்குகளை வழங்கும் போது சில விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். அதாவது பிரதான வேட்பாளர்களாக கருதப்படுபர்களுக்கு 1ஆம் விருப்பை வழங்கிவிட்டு மற்றைய சாதாரண வேட்பாளர்களாக கருதப்படுபவர்களுக்கு 2 , 3ஆம் விருப்பு வாக்குகளை வழங்குவது அர்த்தமற்றதே.

அதாவது யாருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் 2ஆம் , 3ஆம் விருப்பு வாக்குகளை எண்ணும் போது அதி கூடிய வாக்குகளை பெற்றுள்ள இரண்டு வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ள 2 , 3ஆம் விருப்பு வாக்குகள் மாத்திரமே எண்ணப்படும்.

இவ்வேளையில் ஏற்கனவே பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் கிடைத்துள்ள 1ஆம் விருப்பு வாக்கு எண்ணப்பட்டிருப்பதால் அந்த வாக்கு சீட்டு மீண்டும் வாக்கு எண்ணும் போது எடுத்துக்கொள்ளப்படாது. இதன்போது அவர்கள் இருவர் தவிர்த்த மற்றைய வேட்பாளர்களுக்காக முதலாம் விருப்பு வாக்கு வழங்கப்பட்டுள்ள வாக்கு சீட்டுகளில் 2 , 3ஆம் விருப்பு வாக்குகளே எண்ணப்படும். என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

இதனால் விருப்பு வாக்குகளை வழங்க விரும்பின் சாதாரண வேட்பாளர் ஒருவருக்கு 1ஆம் விருப்பை வழங்கிய பின்னர் பிரதான வேட்பாளருக்கு 2ஆவது விருப்பை வழங்கலாம். இது பிரயோசமானதாக அமையும்.


இதேவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கொன்று அடையாளமிடப்படாத அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு X என்ற அடையாளமிடப்பட்டுள்ள அல்லது ஒரு வேட்பாளருக்கு 1 எனவும் மற்றுமொரு வேட்பாளருக்கு X என்ற அடையாளமும் இடப்பட்டுள்ள அல்லது இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்புத் தெரிவித்தல் மாத்திரம் அடையாளமிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுக்கள் செல்லுபடியற்றதானதாகும் என்பதுடன் வாக்கு எண்ணும் போது அவை நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.samakalam.com/செய்திகள்/ஜனாதிபதி-தேர்தலில்-எப்பட/

இது பற்றி பத்திரிகைகளிலும் பிரசுரிக்க வேண்டும்.

ஊரிலுள்ள பலர் பத்திரிகைகளை வாசிப்பதுண்டு. 

"இதன்போது அவர்கள் இருவர் தவிர்த்த மற்றைய வேட்பாளர்களுக்காக முதலாம் விருப்பு வாக்கு வழங்கப்பட்டுள்ள வாக்கு சீட்டுகளில் 2 , 3ஆம் விருப்பு வாக்குகளே எண்ணப்படும். என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்"

 

எனக்கு புரிந்தது, சரியோ தெரியவில்லை :

அநேகமாக ஒருவரும் 50% த்திற்கு மேலாக முதல் தெரிவில் வாக்குகளை பெற மாட்டார்கள் என்றால், மிகுதி உள்ள வாக்குகளே இங்கு முக்கியமாக்கலாம்.

உதாரணத்திற்கு முதலாவதாக வந்தவருக்கு 47%
இரண்டாவதாக வனத்தாருக்கு 43% வாக்குகள் என்றால்    
மொத்தம் 90% வாக்குகள்; மிகுதி 10% வாக்குகள்.

யாருமே 50% பெறாதமையால், மிகுதி 10% வாக்குகள் பார்க்கப்படும் ( அதிலும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் இருக்கும்) ; 
அதில் யாருக்கு அதிகம் 2 , 3ஆம் விருப்பு வாக்குகளே எண்ணப்படும்.  

10 minutes ago, ampanai said:

எனக்கு புரிந்தது, சரியோ தெரியவில்லை :

அநேகமாக ஒருவரும் 50% த்திற்கு மேலாக முதல் தெரிவில் வாக்குகளை பெற மாட்டார்கள் என்றால், மிகுதி உள்ள வாக்குகளே இங்கு முக்கியமாக்கலாம்.

உதாரணத்திற்கு முதலாவதாக வந்தவருக்கு 47%
இரண்டாவதாக வனத்தாருக்கு 43% வாக்குகள் என்றால்    
மொத்தம் 90% வாக்குகள்; மிகுதி 10% வாக்குகள்.

யாருமே 50% பெறாதமையால், மிகுதி 10% வாக்குகள் பார்க்கப்படும் ( அதிலும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் இருக்கும்) ; 
அதில் யாருக்கு அதிகம் 2 , 3ஆம் விருப்பு வாக்குகளே எண்ணப்படும்.  

இன்னொரு திரியில் நான் எழுதியது.

யாரும் 50% வாக்குகளுக்கு மேல் பெறாவிட்டால் கூடிய வாக்குகளை பெற்ற முதல் இரு வேட்பாளர்களை தவிர ஏனையோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளில் இரண்டாம் விருப்பத்தெரிவில் இவ் இரு வேட்பாளர்களில் ஒருவர் பெயர் இருந்தால் அதை சேர்ப்பார்கள், இரண்டாம் விருப்ப தெரிவில் நீக்கப்பட்ட வேறு யாரினதும் பெயரை ஏதும் வாக்காளர்கள் இட்டிருந்தால் அவர்களது மூன்றாம் விருப்ப தெரிவில் இவ்விரு வேட்பாளர்களில் ஒருவரின் பெயர் இருந்தால் அதை சேர்ப்பார்கள். அதன் மூலம் இறுதி முடிவெடுக்கப்படும்.”

 

3 hours ago, ampanai said:

 

இதில் இறுதியில் கூறப்படும் சில விடயங்கள் சாதாரண நடைமுறைகளே தவிர இத்தேர்தலில் இந்நடைமுறை பின்பற்றப்படாது.

நான் ஏற்கனவே தந்த விளக்கம் போல் தான் இரண்டாம் சுற்றில் வாக்குகள் சேர்க்கப்படும்.

அதன்படி A, B பெறும் மொத்த வாக்குகளை செல்லுபடியான வாக்குகளாக கொண்டு அதில் அரைவாசிக்கு மேல் (50% இற்கு மேல்) பெறுபவர் வெற்றியாளர் என அறிவிப்பார்கள்.

மகிந்த தேசப்பிரிய முன்னர் இவ்வாறு தான் கூறியிருந்தார்.

Edited by Lara

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை நேர காலத்துடன் வாக்களிக்க செல்லுங்கள் : வாக்காளர்களுக்கு அறிவிப்பு

நாளை நேர காலத்துடன் வாக்களிக்க செல்லுங்கள் : வாக்காளர்களுக்கு அறிவிப்பு

நாளைய தினத்தில் நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு அனைத்து வாக்காளர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாக்களிப்பு நேரத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலைமைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையிலேயே நேரகாலத்துடன் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிப்புகள் நடக்கவுள்ளன. -(3)

http://www.samakalam.com/uncategorized/நாளை-நேர-காலத்துடன்-வாக்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.