Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆவிகள் பற்றி கவியரசு

Featured Replies

ஆவிகள் பற்றிக் கண்ணதாசன்

உலவும் ஆவிகள் பற்றி அர்த்தமுள்ள இந்துமதம் முதல் பாகத்தில், நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்த வகை ஆவிகளே ‘குட்டிச் சாத்தான்’ போன்றவை.

ஆசை நிறைவேறாமல் இறந்க உயிர்களும், தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்ட உயிர்களும் குட்டிச் சாத்தான்களாகின்றன என்பது என் கருத்து.

ஒரு சில சாத்தான்கள் நல்லது செய்கின்றன.

பலவந்தமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் பழி வாங்குகின்றன.

சத்திய சாயிபாபா என்பவசைப் பற்றிக் கூறப்படும் தகவல்கள், அவர் பல குட்டிச் சாத்தான்களை ஏவலுக்கு அமர்த்திக் கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

அவரது தலைமயிர் திடீரென்று இரும்புபோல் இருக்குமாம்;;; யாராவது அதைத் தொட்டால் கையெல்லாம் ரத்தமாகிவிடுமாம்.

திடீரெண்டுஅவர் விபூதி கொடுப்பாராம்;;;;;;;;, வெறும் கையிலேயே விபூதி வருமாம்

குட்டிச் சாத்தான்கள் மூலமாகவே அப்படி ஊடுருவ முடிகிறது என்று நான் நம்புகிறேன்.

என்னுடைய கனவிலும் அவர் இரண்டு முறை ஊடுருவினார்.

முதல் முறை வந்த கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்திருக்கிறார், நான் கைகளால் ஊர்ந்து அவர் அருகே செல்கிறேன்.

இரண்டாவது கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்கிருக்கும் கட்டத்துக்குள் ஒரு கரண்ட் என்னை இழுக்கிறது, நான் அதை எதிர்த்துப் போராடுகிறேன். ‘கிருஷ்ணா !; ‘கிருஷ்ணா !; என்று சத்தமிடுகிறேன். அந்தக் கரண்ட் என்னை விட்டுவிடுகிறது.

சத்திய சாயிபாபா செய்வதாகச் சொல்லப்படும் காரியங்கள் அனைத்துமே, சித்து வேலையாகவே எனக்குத் தோன்றுகின்றன.

இதே போல் பன்றிமலை சவாமிகளைப் பற்றியும் ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன.

அவசை ஒரு நாள் பார்க்கப் போனேன்.

அங்கிருந்த ஒரு மலர் மாலையிலிருந்து ஏழு எட்டு மலர்களை உருவிக் கைக்குள் தேய்த்தார். உடனே அனைத்தும் திருப்பதி அட்சதைகளாக மாறின.

அவர் பாம்பு என்று ஒரு காகிதத்தில் எழுதி வைக்கிறார். அதை நீங்கள் விரலால் தொட்டால் விஷம் ஏறுகின்றது.

நெருப்பு என்று எழுதி வைக்கின்றார், தொட்டால் சுடுகிறது.

சந்தனம் என்று எழுதி வைக்கின்றார், தொட்டால் மணக்கின்றது.

ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் அளவு அவர் வல்லுநர் அல்ல.

நீங்கள் ஏதாவது விஷயம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதித் தரும்படி அவரிடம் கேட்டால் அவர் ‘முருகா’ என்பார். எங்பிருந்தோ டைப் அடிக்கப்பட்ட காகிதங்கள் வந்துவிடுகின்றன.

திட்டவட்டமாகக் குட்டிச் சாத்தான் ஏவல் கொண்டவர் என்றே நான் கருதுகிறேன்.

கோவை ஜெயில் ரேடில் 1950 ம் ஆண்டில் நான் கங்கியிருந்தபோது, என்னிடம் ஒரு சாமியார் வந்தர். அவர் இரண்டு ரூபாய்கள்தாம் என்னிடம் கேட்டார், கொடுத்தேன். அவர் ஒரு தாயத்துக் கொடுத்தார். அவர் காகிதத்தில் ‘கெட்டது நடக்கும்’ என்றும், ஒரு காகிதத்தில் ‘நல்லது நடக்கும்’ என்றும் எழுதித் தூரத்தில் வைத்தார். நாலடி தூரத்தில் தாயத்தை வைத்தார். தாயத்து ஊர்ந்து சென்று ‘நல்லது நடக்கும’ என்ற காகிதத்தில் ஏறிற்று.

ஏதோ ஒரு ஆவியை அடக்கி வைத்திருப்பவர் போலிருந்தது அவர் செய்கை.

வீதியிலே வித்தை காட்டுகிறவன். உரு துணிப் பொம்மையின் தலையில் அடித்தால், பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருடைய தலையிலும் அடி விழுகிறது. மேலும் அவன் செய்யும் குட்டிச் சாக்கான் வித்தைகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்.

மாஜிக் நிபுணர்களும் குட்டிச் சாத்தான்களை அடக்கியாள்பவர்களே.

இந்தச் சாத்தான்களை எதிரியின் மேல் ஏவ முடியும் என்கிறார்கள் சிலர்.

எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

‘சோற்றிலே மலம் வந்து விழுந்தது, வீட்டிலே கல் வீழுந்தது., எல்லாம் குட்டிச் சாத்தான் வேலை’ என்று சொல்வோர் உண்டு. இவை எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது.

ஆனால், ஆவிகள் உலவுவதும், அவையே குட்டிச் சாத்தான்கள் என்று அழைக்கப்படுவதும், அசைக்க முடியாத உண்மை.

இந்த ஆவிகளை எப்படிச் சிலர் அடக்கியாளுகின்றனர் என்ற வித்தைதான் எனக்குத் தெரியவில்லை.

குட்டிச் சாத்தான்கள் நல்லவர்களுக்கு வழித் துணையாக விளங்குகின்றன.

கீயவர்களுக்குத் தீங்கு செய்கின்றன.

இந்தச் சாத்தான்கள் வயல்களைக் காவல் செய்கின்றன.

இறைவனிடமும் மனிதனிடமும் பேசுகின்றன.

இரு குறிப்பிட்ட காலத்தில், இவை மீண்டும் பிறக்கின்றன.

மனிதர்களாகவோ, மிருகங்கடாகவோ தோன்றுகின்றன.

ஏழைகளுக்கு உணவு வழங்குகிறவாகள் வீட்டையும், பிறர் கஷ்டத்தில் உதவுகின்றவர்கள் வீட்டையும், இவை காவல் காக்கின்றன.

உண்மையில், இவை மொபைல் கோட் நீதிபதிகளாகவே விளங்குகின்றன.

மூலம் : கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்

Edited by வானவில்

வான்வில் பேய் எல்லாம் உண்மையா இப்ப எனக்கு நடுசாமம் 12 மணி இதை வாசித்துவிட்டு நான் எப்படி நித்தா கொள்ளுறது

  • தொடங்கியவர்

எனக்கும் முன்னர் நம்பிக்கை இல்லை இந்த றோயல் பமிலி புலநாய்களைப் பார்த்த பின்னர் நம்புகிறேன்

எனக்கும் முன்னர் நம்பிக்கை இல்லை இந்த றோயல் பமிலி புலநாய்களைப் பார்த்த பின்னர் நம்புகிறேன்

:lol::D

நான் ஆவி ஒன்றை நேரில் கண்டுள்ளேன்...

அது நீராவி... எச்.டூ.ஓ

ஆவிகளை பார்ப்பதைவிட ஆவிகளைப் பற்றி எழுதுபவர்களை பார்க்கவே நமக்கு பயமாக இருக்கின்றது.

ஆவிகள் இருக்கின்றதா என தெரியவில்லை ஆனால் எனக்கு கண்ணதாசனின்

படைப்புக்கள் வாசிக்க விருப்பம் ஆனால் இங்கு புத்தகம் கிடைப்பதில்லை

இணையத்தளங்களில் தேடினேன் சரியான இணையத்தளம் தெரியவில்லை

தெரித்தால் எனக்கு உதவிசெய்யமுடியுமா?

இந்தாருங்கள் கஜந்தி...தாராளமாக போய் படியுங்கள்...

எனக்கு சொல்லுங்கள் படித்ததை...

http://www.udumalai.com/books/kannadhasan.htm

http://www.tamilnation.org/books/index.htm

http://tfmpage.com/forum/5180.07.11.34.html

http://members.tripod.com/~kkalyan/kanpub.html

http://www.thanjavur.com/tamil.htm

Edited by vanni mainthan

இந்தாருங்கள் கஜந்தி...தாராளமாக போய் படியுங்கள்...

எனக்கு சொல்லுங்கள் படித்ததை...

http://www.udumalai.com/books/kannadhasan.htm

http://www.tamilnation.org/books/index.htm

http://tfmpage.com/forum/5180.07.11.34.html

http://members.tripod.com/~kkalyan/kanpub.html

http://www.thanjavur.com/tamil.htm

நன்றிகள்பல என் நிண்ட நாள் ஆசைதனை உடனே செய்தமைக்கு

மேலும் நன்றிகள்

நான் ஆவி ஒன்றை நேரில் கண்டுள்ளேன்...

அது நீராவி... எச்.டூ.ஓ

அட மாப்பி ஜோக் சொல்லிட்டார் எல்லோரும் ஒருக்கா சிரியுங்கோ பார்போம்,அது சரி மாப்பி நானும் ஒரு ஆவி கண்டு இருக்கிறேன் கொட்டாவி

:P

ஆவியைப் பார்க்க எனக்கும் ஆசை தான். ஆனால் பார்க்க முடியாமல் இருக்கு ....... :lol: ;)

  • தொடங்கியவர்

ஆவியைப் பார்க்க எனக்கும் ஆசை தான். ஆனால் பார்க்க முடியாமல் இருக்கு ....... :lol: ;)

ஏன் பாக்க முடியாமல் இருக்கு றோயல் பமில்யிலருந்து யாராவந்து வருவாங்க அவங்களைப்பார்த்தா ஆவியப் பாத்தது போல உங்க பாசமலர் சாமியாரப் பார்த்தா ஆவியப் பாக்கவே தேவையில்லை 7ஜென்மத்துக்கு :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.