Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு அதற்கான கருமங்கள் தொடர்கின்றன… இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு அதற்கான கருமங்கள் தொடர்கின்றன… இரா.சம்பந்தன்

October 27, 2019

sambanthan.jpg?resize=660%2C371

எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிப்பதற்கான கால அவகாசத்தினை வழங்கும் வகையில் தமது முடிவினை உரிய நேரத்தில் அறிவிக்க உள்ளதாக  என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலும் அதற்கான தபால் மூலமான வாக்களிப்பு 31ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் எத்தகைய முடிவினை அறிவிக்கவுள்ளது என்பது தொடர்பில் எழுந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது  சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் கூட்டமைப்பானது சரியான முடிவினை நிச்சயமாக அறிவிக்கும். அதற்கான கருமங்கள் நடைபெற்றவண்ணமுள்ள நிலையில் இந்த விடயத்தில்  நிதானமாக செயற்படுவதற்கு தாம்  தலைப்பட்டுள்ளதாக குறிப்பி்டுள்ளார்.

பிரதானமாக உள்ள மூன்று கட்சிகளில் இரண்டு வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டுள்ளார்கள். ஏனைய தரப்பினரும் அடுத்துவரும் நாட்களில் விஞ்ஞாபனத்தினை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஆழமாக கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதனையடுத்தே  தீர்க்கமான அறிவிப்பு வெளியிடப்படும். தமிழ் மக்களின் எதிர்காலத்தினையும், பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டதாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என வலியுறுத்தி உள்ளார்.

இதேவேளை  ஐந்து கட்சிகள் கூட்டாக இணைந்து தமிழ் மக்கள் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். அதுதொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான கருமங்களை முன்னெடுப்பது என்பது தொடர்ந்து அந்தக்கட்சிகள் யாழ்ப்பாணத்தில் 30ஆம் திகதி கூடி ஆராய்ந்து தீர்மானிக்கவுள்ளன. அந்த விடயங்கள் தொடர்பிலும் கூட்டமைப்பு அவதானத்துடன் இருப்பதாகவும்  இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2019/132383/

கூட்டமைப்பின் தீர்மானம் 31ஆம் திகதி

image_2c023bcf62.jpgஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கப்படும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஐந்து முறைகள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன், பிரதான இரண்டு வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுடைய பதிலை பெற்றுக்கொடுப்பதற்கு கால அவகாசம் கோரப்பட்டமையால்,  தமது தீர்மானத்தை வெளிப்படுத்துவது தாமதப்படுத்தப்படுவதாக கூட்டமைப்பு கூறியுள்ளது.

பிரதான இரண்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன்  பேசிய பின்னர் வடக்கு தமிழ் கட்சிகளுடன் அது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகம் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கடடமபபன-தரமனம-31ஆம-தகத/175-240463

கூட்டமைப்பின் தீர்மானம் 31ஆம் திகதி: முன்னால் உள்ள தெரிவு இந்த இரண்டும் மட்டுமே என  தெரிகின்றது: 

தெரிவு #1: சஜித்திற்கு ஆதரவு 
தெரிவு #2: தேர்தல் புறக்கணிப்பு 

இதில் #1 இனை கூட்டமைப்பு தெரிவு செய்யும் 😎

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு யாருக்கு வேண்டும் என்றாலும், ஆதரவு கொடுக்கட்டும்.
கொடுக்கின்ற ஆதரவை... முன்பே கொடுக்காமல், 
ஏன்... இழுத்தடிக்கின்றார்கள்?

On 10/27/2019 at 2:28 PM, கிருபன் said:

அதற்கான கருமங்கள் நடைபெற்றவண்ணமுள்ள நிலையில்

கூட்டமைப்பின் செத்தவீட்டு கருமங்கள் நடக்கிறமாதிரி சொல்றார் சம்பந்தன்!

13 hours ago, தமிழ் சிறி said:

கொடுக்கின்ற ஆதரவை... முன்பே கொடுக்காமல், 
ஏன்... இழுத்தடிக்கின்றார்கள்?

எல்லாம் பின்னால செய்த பழக்கதோஷம் தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.