Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலாவதியான மருந்துகள் எரியூட்டம்: அசௌகரியத்துக்கு உள்ளாகினர் பொதுமக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

medicine-.jpg

காலாவதியான மருந்துகள் எரியூட்டம்: அசௌகரியத்துக்கு உள்ளாகினர் பொதுமக்கள்

பொறுப்பற்ற வகையில் உரிய பொறிமுறைகள் இன்றி காலாவதியான மருந்துகள் வட.மாகாண சுகாதார அமைச்சின் வளாகத்தில் தீ மூட்டி அழிக்க முற்பட்டமையால் அயலில் இருந்த பொதுமக்கள் ஓவ்வாமைக்கு உட்பட்டதுடன் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

யாழ்.பண்ணை பகுதியில் அமைந்துள்ள வட.மாகாண சுகாதார அமைச்சின் அலுவலக வளாகத்தில் காலவதியான மருந்து பொருட்களை பிளாஸ்டிக் போத்தல்களுடன் பாரிய குழி தோண்டி அதனுள் போட்டு நேற்று ( திங்கட்கிழமை) இரவு தீ மூட்டியுள்ளனர்.

அதனால் பிளாஸ்டிக் போத்தல்கள் எரிந்தும், மருந்துகள் எரிந்தும் ஏற்பட்ட புகை மூட்டத்தால் தூர்நாற்றம் வீசியதுடன் அயலவர்களுக்கு ஒவ்வாமையும் ஏற்பட்டு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டனர்.

அதனை தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக யாழ்.மாநகர சபையின்,  தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்டது.

குறித்த தகவலுக்கமைய தீயணைப்பு படையினர் தீயினை அணைக்க முற்பட்டபோது, அவர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டது. அதன் மத்தியிலும்  தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக வட.மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் கூறுகையில்,  “வளாகத்தில் மருந்து பொருட்களை எரியூட்டி அழிக்க அனுமதிக்கவில்லை.

அவற்றை உரிய முறையில் எரியூட்டி அழிக்க உரிய இடத்திற்கு அனுப்பி வைக்குமாறே பணிக்கப்பட்டது. அந்த நிலையில் மருந்தாளர் ஒருவரின் எதேச்சைகரமான முடிவினால் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

அதேவேளை சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பிராந்திய வைத்திய அதிகாரிகளிற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவர்கள் நிலைமை  குறித்து அவதானித்தத்துடன், உரிய விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தனர்.

http://athavannews.com/காலாவதியான-மருந்துகள்-எர/

  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தான மருந்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டமை தொடர்பாக விசாரணை…

November 2, 2019

Inquiry1.jpg?resize=796%2C585

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வளாகமான சுகாதாரக் கிராமத்தில் பெரும் குழி அமைக்கப்பட்டு அதனுள் ஆபத்தான மருந்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டை விசாரித்து விளக்கமளிக்குமாறு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு மாகாண பிரதம செயளாலர் அ.பத்திநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வளாகத்தில் இரகசியமான முறையில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் எனத் தெரிந்துகொண்டே மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டது என்று அந்தப் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். தாம் வாழ்வதற்கான பாதுகாப்பை வழங்கக் கோரி மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் நேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது, சுகாதாரக் கிராமத்தில் அமைக்கப்பட்ட குழியினுள் பல ஆயிரம் மருத்து டப்பாக்கள் திறக்கப்படாத நிலையில் அரைகுறையாக எரிந்த நிலையில் காணப்பட்டன.

இது தொடர்பில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் ஊடாக பிராந்திய மருத்துவ அதிகாரி பணிமனைக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து சுற்றுச்சூழல் பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையிலேயே இந்த விடயம் தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சு உடன் விளக்கமளிக்குமாறு பிரதம செயலாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் கடிதத்தின் பிரதி, வடக்கு மாகாண ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/2019/132667/

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற செயல் – அயலவர்கள் கடும் பாதிப்பு

November 4, 2019

 

wel-i.jpg?resize=385%2C252

(file photo)

வடமாகாண சுகாதார அமைச்சின் வளாகத்தினுள் உள்ள கிணற்று நீரில் மருந்து வாடை வீசியதனை அடுத்து கிணறு இறைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பண்ணை பகுதியில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலக வளாகத்தினுள் காணப்பட்ட கிணற்று நீரில் இருந்து மருந்து வாடை வீசியதனை அடுத்து அது தொடர்பில் சுகாதார திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதனை அடுத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கிணறு இறைத்து சுத்தம் செய்யப்பட்டது.

குறித்த கிணற்றுக்கு அருகில் காலாவதியான குளுக்கோஸ் (சேலைன்) உள்ளிட்ட திரவ மருந்துவகைகள் அதிகளவில் நிலத்தில் ஊற்றப்பட்டு அவை அதனருகில் வைத்தே தீ மூட்டப்பட்டமையால் கிணற்று நீர் மாசடைந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேவேளை யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சுதர்சன் சுகாதார அமைச்சின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அப்பகுதி கிணற்று நீரினை பார்வையிட்ட போது அயல் கிணறுகளில் அவ்வாறான நிலைமையை அவதானிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து அங்குள்ள மக்களுடன் நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

கடந்த வாரம் குறித்த சுகாதார அமைச்சின் அலுவலக வளாகத்தினுள் காலாவதியான மருந்து பொருட்களை பிளாஸ்ரிக் போத்தல்களுடன் எரியூட்டியமையால் அயலில் வசிப்பவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதனை அடுத்து யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினர் தீயினை கடுமையான போராட்டத்தின் மத்தியில் அணைத்திருந்தார்கள்.

அவ்வாறு மருந்து பொருட்கள் எரியூட்டப்பட்டமை தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுத்து வரும் நிலையில் , வாளகத்தில் உள்ள கிணற்றுக்கு அருகிலும் காலாவதியான மருந்துகளை நிலத்தில் ஊற்றப்பட்டமையால் கிணற்று நீர் மாசடைந்துள்ளது.

வடமாகாண சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற செயல் காரணமாக அயலவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களின் பொறுப்பற்ற செயல் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #வடமாகாண  #சுகாதாரஅமைச்சின்  #பொறுப்பற்றசெயல் #பாதிப்பு
 

http://globaltamilnews.net/2019/132746/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.