Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் அச்சப்பட்ட வெள்ளை வேன் குறித்து பதறவைக்கும் தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

வெளிவரும் ராஜபக்ச கொடூரங்கள் | ஒப்புக்கொள்ளும் வெள்ளை வான் சாரதி!

கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் முதலைகளுக்கு இரையாக வீசப்படும்
Minister Rajitha Senaratne with the ‘White Van’ drivers at the press conference yesterday.Picture by Kelum Liyanage.
வெள்ளை வான் சாரதி மற்றும் கடத்தப்பட்டுத் தப்பியவருடன் அமைச்சர் ராஜித சேனாரத்ன – பட்ம்: கெலும் லியனகே / டெய்லி மெயில்

ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் கட்சி அலுவலகத்தில் அவசரமாகக் கூட்டப்பட்ட ஊடக மாநாட்டில் ராஜபக்ச காலத்தில் கடத்தலுக்குப் பாவித்ததாகக் கருதப்படும் வெள்ளை வான் சாரதி ஒருவரும் கடத்தல் முயற்சியிலிருந்து தப்பியோடிய ஒருவரும் பல திடுக்கிடும் தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கினர்.

கடத்தப்பட்டவர்கள் நாட்டின் பல இடங்களிலும் இருந்த சித்திரவதைக் கூடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பலவகையான துன்புறுத்தல்களுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவர்கள் உடல்கள் மொனராகலவிலுள்ள முதலைகள் வாழும் குளம் ஒன்றினுள் வீசப்படும்

அந்தோனி பெர்ணாண்டோ

ராஜபக்ச காலத்தில் நடைபெற்ற பல ஆட்கடத்தல்கள், கொலைகள் என்பனவற்றைச் செய்தவர் எனக் கருதப்படும் வெள்ளை வான் சாரதியென, அந்தோனி பெர்ணாண்டோ என்பவரையும், வெள்ளை வானில் கடத்தப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டவர் என, அத்துள மதநாயக்கா என்பவரையும் அமைச்சர் இம் மாநாட்டில் அறிமுகப்படுத்தினார்.

ராஜபக்ச காலத்தில் நடைபெற்ற அத்தனை கடத்தல்களும், கொலைகளும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோதபாய ராஜபக்சவின் நேரடி உத்தரவின் பேரிலேயே நடைபெற்றதாக பெர்ணாண்டோ தெரிவித்தார்.

கடத்தப்பட்டவர்கள் நாட்டின் பல இடங்களிலும் இருந்த சித்திரவதைக் கூடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பலவகையான துன்புறுத்தல்களுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்ட பின்னர் கொல்லப்படுவர் என்றும் பெர்ணாண்டோ தெரிவித்தார். மொனராகலவிலுள்ள இப்படியொரு சித்திரவதை கூடத்திற்கு அருகிலிருந்த, முதலைகள் வாழும் குளம் ஒன்றினுள் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் வீசப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இக் குளத்தின் சரியான இடத்தைத் தன்னால் தற்போது அடையாளம் காட்ட இயலவில்லை எனவும் கூறினார்.

இராணுவத்தின் ஒரு பிரிகேடியரும், ஒரு மேஜரும் இக் குற்றங்களோடு தொடர்புபட்டிருக்கிறார்கள் என அறியப்படுகிறது.

மதநாயக்கா ஊடகங்களுக்குக் கூறுகையில், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பஸ் ஒன்றில் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட தங்கம், பணம் போன்றவற்றைக் களவெடுத்ததற்காகத், தான் அக்டோபர் 2013 இல் ராகம பகுதியில் வைத்துக் கடத்தப்பட்டதாகவும், “பிரபாகரனுக்குச் சொந்தமான அத் தங்கமும், 8 மில்லியன் யூரோக்களும் கோதபாய ராஜபக்சவுக்காகக் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டன” எனத் தனக்குக் கூறப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தாங்கள் கூறிய இவ்விடயங்களுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முடியுமென இவ்விருவரும் கூறினார்கள்.

அமிச்சர் சேனாரத்ன பேசுகையில், விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 7000 மெட்றிக் தொன் தங்கத்துக்கு என்ன நடந்தது எனத் தெரியாது எனவும் இது பற்றிய விசாரணைகள் உடனே ஆரம்பிக்கப்படுமெனவும், அதுவே இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

 

https://marumoli.com/வெளிவரும்-ராஜபக்ச-கொடூரங/?fbclid=IwAR2UEV6BwrpOFu5R8OvxZ0FW2M-4iKpuPmU4gwRpHRDpXD7v8u-mKTRhbjk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் அச்சப்பட்ட வெள்ளை வேன் குறித்து பதறவைக்கும் தகவல்கள் 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.