Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப் பிரச்சினையில் - மேல்சாதியினரின் மிரட்டல்!

Featured Replies

ஈழப் பிரச்சினையில் - மேல்சாதியினரின் மிரட்டல்!

இராணுவத்தின் முப்படைகளையும் - தமிழர்கள் மீது ஏவி, அவர்களைப் படுகொலைக்கு உள்ளாக்கி, வாழ்வுரிமையைப் பறித்து வரும் சிறீலங்கா அரசிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உரிமைகளை மீட்டெடுக்கவும், ஈழத் தமிழ் மக்கள் உருவாக்கியுள்ள ராணுவம் தான் விடுதலைப் புலிகள் இயக்கம்.

ஈழத் தமிழர்களின் குடும்பத்திலிருந்து ஆண்களும், பெண்களும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, தங்களின் விடுதலைக்காக, உயிர்த் தியாகம் செய்து வருவதை உலகமே பார்த்து நிற்கிறது.

ஆனால் - இந்தியாவில் மட்டும் மேல்சாதிய சக்திகள் தங்களின் ஊடக வலிமையைப் பயன்படுத்தி, தமிழ் மக்கள் உருவாக்கிய விடுதலை இயக்கத்தை பயங்கரவாதியாக சித்தரித்து, பொய்யானப் பிரச்சாரத்தைத் தீவிரமாகப் பரப்பி வருகின்றன.

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், ஈழத் தமிழர் உணர்வுகள் முற்றாக நசுக்கப்பட்டு, ‘பொடா’ அடக்குமுறைச் சட்டங்களை தமிழின உணர்வாளர்கள் மீது ஏவினார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், ஓரளவு சுதந்திரக் காற்று வீசத் தொடங்கியது. மேல்சாதியினரின் இறுக்கம் சற்று தளருவது போன்ற தோற்றம் உருவானது. திரைப்படக் கலைஞர்கள், கவிஞர்கள் கூட - ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வெளியே வந்தனர். செஞ்சோலை எனும் குழந்தைகள் காப்பகத்தில், 63 பச்சிளங் குழந்தைகள், சிங்கள விமான குண்டு வீச்சுக்குப் பலியாகி, பிணமாகக் கருகியதைப் பார்த்து, மனித நேயம் கொண்டோர் கண்ணீர் விட்டனர். தமிழக சட்டமன்றம் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது. மேல்சாதியினர்களுக்கு இது பொறுக்கவில்லை.

1. ஜெயலலிதா

2. ‘இந்து’ ராம்

3. ‘துக்ளக்’ சோ

4. தினமலர்

5. சுப்ரமணிய சாமி.

- என்ற மேல்சாதியினரின் அணி - எங்கே தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் ஆதரவு அலை உருவாகிவிடுமோ என்று பதை பதைத்தது.

தமிழர்களின் ராணுவமான விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் - குண்டுவீசி, ராணுவம் ஆக்கிரமித்தபோது - கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து யாழ்ப்பாணத் தமிழர்களை வெளி உலகோடு இணைக்கும் ஒரே சாலை வழி பாதையை மூடி மக்களை யாழ்ப்பாணத்துக்குள்ளே இலங்கை அரசு சிறை வைத்தபோது - ஒவ்வொரு நாளும் தமிழ் மக்கள் குடியிருப்புகள் மீது ராணுவம் குண்டு வீசி கொன்று குவித்தபோது - பல்லாயிரக்கணக்கில் உயிரைப் பணயம் வைத்து, தமிழ்நாட்டை நோக்கி தமிழர்கள் அடைக்கலம் தேடி அகதிகளாக ஓடி போன போது (இப்போதும் போகிறார்கள்), இந்தப் மேல்சாதி ஏடுகள், இலங்கை ராணுவத் தாக்குதலைக் கண்டித்தனவா? இலங்கை அரசு ராணுவத்தைப் பயன்படுத்துவதை எதிர்த்தனவா? ஆனால் இதை எதிர்க் கொள்வதற்கு வேறுவழியின்றி, ராணுவத் தாக்குதலில் விடுதலைப்புலிகள் இறங்கினால் - பயங்கரவாதம் தலைதூக்குகிறது என்று, ஓலமிடத் தொடங்கிவிடுகிறார்கள்

நன்றி:அறிவானந்தா

இவர்கள் ஏன் விடுதலைபுலிகலை எதிர்க்கிறார்கள்

Edited by rmsachitha

இவர்கள் ஏன் விடுதலைபுலிகலை எதிர்க்கிறார்கள்

ஏன் என்றால் அவர்கள் 'விடுதலை' புலிகளாக இருபதால் அடிமை புலிகளாக இருக்க மாட்டார்கள்

இந்த பிரமன்ஸ் கூட்டம் இருக்கு தானே இதுகளுக்கு அமெரிக்கா போல தான் கலியானவீடு என்றாலும் அங்கும் தான் தான் மாப்பிள்ளையாக் இருக்கனும் செந்த வீட்டு என்றாலும் தான் தான் பிணமாக இருக்கனும் என்று ஆசை அது சும்மா அடங்காது உலக தமிழர்( யார் உலக தமிழர்) எல்லோரும் ஒன்று பட்டாம் என்றால் யூதர் என்ன யூதர் தமிழர் என்றாலே உலகம் பெருமையாக பார்க்கும்.

( ஈழத்து பிரமண்ஸ் ஒரளவு போராட்டத்தின் தேவை அறிந்தவர்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

( ஈழத்து பிரமண்ஸ் ஒரளவு போராட்டத்தின் தேவை அறிந்தவர்கள்)

அவர்களில் பலர் போராளிகளாகவும் மாவீரர்களாகவும் இருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rmsachitha நிஙகள் சாணக்கியண்தாணே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழப் போராட்டத்தில் துரோகக் கும்பல்களாக டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, சித்தாத்தன், கருணா, சுபத்திரன், மாணீக்கதாசன், போன்ற இன்னுனொரன்ன ஆட்கள் எல்லாம் பிராமணர்கள் இல்லையே? இவர்கள் என்ன சாதிகள் என்று அடையாளப்படுத்தவோ, அல்லது அது பற்றி அறியவோ நான் விரும்பவில்லை. ஆனால் இவர்கள் பிராமணர்கள் இல்லை என்று தெரியும்.

இப்படிப் பார்க்கப் போனால், இந்த அறிவானந்தா சொல்வது போன்று, ஈழப் பிரச்சினையில் - கீழ்ச்சாதியினரின் மிரட்டல்! என்று தலைப்பு ஆரம்பிக்கலாமா?

தமிழீழப் போராட்டத்தைத் உங்களின் சாதிச் சண்டைக்குப் பாவிக்க வேண்டாம் அறிவானந்தா அவர்களே. இது அனைத்து மக்களுக்குமான போரட்டமே, தவிர எந்த சாதி ஆதரவு தருகின்றது, தரவில்லை என்று தமிழ் மக்களுக்குள் சண்டை மூட்டுகின்ற வேலையாக அமையக்கூடாது.

நான் அவ(ர்)ன் இல்லை

rmsachitha நிஙகள் சாணக்கியண்தாணே

நான் அவ(ர்)ன் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.