Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் முடிவுகளும் வாழ்த்துக்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை அதிபர் தேதலில் வெற்றிபெற்ற கோத்தபாய அவர்களுக்கும் வடகிழக்கில் வெற்றிபெற்ற சம்பந்தர் ஐயாவுக்கும் என் வாழ்த்துக்கள் -
.
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய வெற்றி பெற்றிருக்கிறார். முன்னைபோலில்லாமல் சிறுபாண்மை இனங்கள் தொடர்பான - குறிப்பாக முஸ்லிம்கள் மீதான - எதிர்நிலையை கைவிட்டு- சிறுபாண்மை இனங்களின்/ தலைவர்களின் கருத்துக்களை உள்வாங்கி ஆட்ச்சி புரியவேண்டுமென்கிற வேண்டுகோளுடன் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்..
.
 
தமிழர் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றுள்ள சம்பந்தன் ஐயாவுக்கும் எனது பாராட்டுகள். உடனடியாகவே அவசர பிரச்சினையான கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் தகவல் மற்றும் நில மீட்ப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் வண்ணம் கோருகிறேன். நீண்டகால பிரச்சினையான இணைபாட்ச்சி/ சுயநிர்ணய உரிமை என்பவை நம் நிகழ்ச்சி நிரலில் எப்பவும் உள்ளது.
 
தோழர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் அணியும் கிழக்கில் வெற்றி பெற்றுள்ளது அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
முஸ்லிம் தலைவர்களுக்கும் சிங்கள ஜனநாயக சக்திகளுக்கும் உங்கள் ஆதரவு தேவை என்பதையும் வலியுறுத்தி சம்பந்தன் ஐயாவையும் வாழ்த்துகிறேன். சம்பந்தன் ஐயாவும் முஸ்லிம் மலையக தமிழர் தலைவர்களும் கூடிபேசி ஒன்றாகவே கோத்தபாயாவை சந்தித்து பேசவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நல்வாழ்த்துக்கள் சம்பந்தன் ஐயா.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

இலங்கை அதிபர் தேதலில் வெற்றிபெற்ற கோத்தபாய அவர்களுக்கும் வடகிழக்கில் வெற்றிபெற்ற சம்பந்தர் ஐயாவுக்கும் என் வாழ்த்துக்கள் -

கவிஞர் ஐயா, இப்படியான நடத்தையைத்தான் சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், பச்சோந்தித்தனம் என்று சொல்வார்கள்😂🤣

நடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை இனமக்கள் செறிவாக வாழும் தொகுதிகள் எங்கும் சஜித்துக்கு அமோக வாக்குகள் விழுந்துள்ளன. சிங்கள மக்கள் செறிந்து வாழும் தொகுதிகள் எங்கும் கோத்தபாயவுக்கு 60% அல்லது அதற்கும் மேல் வாக்குகள் விழுந்துள்ளன. இது தெளிவாக பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் இனங்களுக்கும் இடையேயான பெருத்த இடைவெளியைக் காட்டுகின்றது. சிங்கள மக்கள் வெற்றிவாத மனநிலையில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் ஒடுக்கவே நினைக்கின்றனர். 

வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும், புத்தளம் தொகுதியிலும் தமிழ், முஸ்லிம்களுக்கிடையே கசப்புக்கள் இருந்தாலும் அவர்கள் யார் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்ததனால் சஜித்துக்கு வாக்களித்துள்ளனர். இது சஜித் தமிழ், முஸ்லிம்களுக்கு நன்மை செய்வார் என்ற நம்பிக்கையினால் அல்ல. மாறாக, கோத்தா ஜனாதிபதியாக வரக்கூடாது என்ற ஒரே நோக்கத்தினால் மட்டுமே.

ஆய்வாளர் நிலாந்தன் கூறியதுபோல, தமிழ், முஸ்லிம்கள் கோத்தாவுக்கு எதிராக வாக்களித்ததனால் நன்மை அடைந்தவர்கள் நான்கு பகுதியினர்.

1. சஜித். ஐ. தே. க. தமிழர்களின் கோரிக்கைகள் எதையும் செவிமடுக்காமல் இருந்தும் அவருக்கு வாக்குகள் விழுந்தன

2. சம்பந்தர், சுமந்திரன். கூட்டமைப்பு. இவர்கள் தமிழ் மக்களை சஜித்துக்கு வாக்களிக்குமாறு கோரியதால்தான் மக்கள் வாக்களித்தனர் என்பது பெரிய நகைச்சுவை! கூட்டமைப்பின் வழிகாட்டுதல் இல்லாவிட்டாலும் தமிழ் மக்கள் சஜித்துக்கே வாக்களித்திருப்பர். சம்பந்தரின் வெற்றி நீங்கள் குறிப்பிடுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது.

3. மேற்கு நாடுகள். இவர்களுக்கு தங்களுக்கு அணுக்கமான சஜித் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற தேவை இருந்தது. இப்போது கோத்தா ஜனாதிபதியாக வந்துள்ளதால் அவருடன் எப்படி ஒத்துப் போகலாம் என்று யோசிப்பார்கள்.

4. இந்தியா. சீனாவுடன் கோத்தா நெருக்கமாக இருப்பதால் இந்தியாவுக்கும் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் சஜித் ஜனாதிபதியாக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் கோத்தாவின் வெற்றி உறுதியானவுடன் மோடி உடனடியாகவே வாழ்த்தை (உங்களைப் போலவே) அனுப்பிவிட்டார்😁

கோத்தாவின் வெற்றியால் நன்மை எதையும் அடையாத தமிழ்மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைமூலம் காட்டிய உள்ளக்கிடக்கையை, நீங்கள் கோத்தாவுக்கும், எதையுமே உருப்படியாகச் செய்யாத சம்பந்தனுக்கும் உடனடியாகவே வாழ்த்துத் தெரிவித்து கேவலப்படுத்தியுள்ளீர்கள். 😡

நிலாந்தனின் ஆய்வுக் கட்டுரை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய கிருபன், உங்கள் நாகரீகமற்ற வார்த்தைகள் நோக வைக்குது.  கிருபன் முதலில் அரசியல் நாகரீகம் தெரிந்த மனிதனாக வார்தைகளை அழந்து எழுதுங்கள்.  யாழ் இணையத்தில் பொறுப்புள்ள முன்னணி உறுப்பினர் நீங்கள் என்பதை நினைவுகூருமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு அரசியல் நிகழ்வை வெற்றியை தற்செயல் நிகழ்வு வளமையான நிகழ்வு என் ஒத்துகொள்வதில் எந்த அரசியலும் இல்லை. அதனை அமைப்பு ரீதியாக உரிமை கோராமல் அரசியல் லாபம் பெற முடியாது. வடகிழக்கு வாக்களிப்பின் கனிகளை ஒருபோதும் சஜித்துக்கு கொடுக்க உடன்பாடில்லை. கூட்டமைப்பு என்கிற கையில் இருக்கிற ஒரே ஒரு  கூடையில்தான் அந்த கனிகளை அடுக்க வேண்டும்.    

சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், பச்சோந்தித்தனம் என்கிற வார்த்தைகள் என்னை என் வரலாற்றை உங்களுக்கு தெரியாது என்பதையே காட்டுகிறது. என் ராஜதந்திரப் பணிக்கான வெளியை புலிகள்கூட மதித்தார்கள்.  ஒருபோதும் அநாகரீகமாக கொச்சைப்படுத்தியதில்லை. இதற்க்குமேல் எழுதி உறவை முறிக்க விருப்பமில்லை. நல் வாழ்த்துக்கள். உங்கள் பதிவும் என்பதிலும் நீக்கபடுவதே முறையாகும். 

Edited by poet

8 hours ago, poet said:
 
தமிழர் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றுள்ள சம்பந்தன் ஐயாவுக்கும் எனது பாராட்டுகள். உடனடியாகவே அவசர பிரச்சினையான கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் தகவல் மற்றும் நில மீட்ப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் வண்ணம் கோருகிறேன். நீண்டகால பிரச்சினையான இணைபாட்ச்சி/ சுயநிர்ணய உரிமை என்பவை நம் நிகழ்ச்சி நிரலில் எப்பவும் உள்ளது.
 
தோழர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் அணியும் கிழக்கில் வெற்றி பெற்றுள்ளது அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
முஸ்லிம் தலைவர்களுக்கும் சிங்கள ஜனநாயக சக்திகளுக்கும் உங்கள் ஆதரவு தேவை என்பதையும் வலியுறுத்தி சம்பந்தன் ஐயாவையும் வாழ்த்துகிறேன். சம்பந்தன் ஐயாவும் முஸ்லிம் மலையக தமிழர் தலைவர்களும் கூடிபேசி ஒன்றாகவே கோத்தபாயாவை சந்தித்து பேசவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நல்வாழ்த்துக்கள் சம்பந்தன் ஐயா.

கோத்தா அண்ட் கோ ஒரு "ஸ்டேட்ஸ்மன்" மாதிரி நடப்பார்களாயின் சம்பந்தராலும் ஹக்கீமாலும் தமது மக்களுக்கு ஒரு அரசியல் உரிமையை வெல்ல முடியும். 

அவர்களை   ஒரு "ஸ்டேட்ஸ்மன்" மாதிரி நடக்க வைக்க யாராலும் முடியாது. அவர்களாக விரும்பினால், அவர்களால் மட்டுமே அது சாத்தியம். அவர்களுக்கு மட்டுமே பௌத்த சிங்கள இனவாதிகளை மீறி ஒரு தீர்வை வைக்கும் பலமும் உள்ளது. 

ஆனால், என்ன செய்வார்கள், தீர்வை தருவார்களா? இல்லை இனவழிப்பை தொடருவார்களா? என்பதற்கு காலம் தான் பதில்.  

18 hours ago, poet said:
இலங்கை அதிபர் தேதலில் வெற்றிபெற்ற கோத்தபாய அவர்களுக்கும் வடகிழக்கில் வெற்றிபெற்ற சம்பந்தர் ஐயாவுக்கும் என் வாழ்த்துக்கள் -
.
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய வெற்றி பெற்றிருக்கிறார். முன்னைபோலில்லாமல் சிறுபாண்மை இனங்கள் தொடர்பான - குறிப்பாக முஸ்லிம்கள் மீதான - எதிர்நிலையை கைவிட்டு- சிறுபாண்மை இனங்களின்/ தலைவர்களின் கருத்துக்களை உள்வாங்கி ஆட்ச்சி புரியவேண்டுமென்கிற வேண்டுகோளுடன் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்..
.
 
தமிழர் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றுள்ள சம்பந்தன் ஐயாவுக்கும் எனது பாராட்டுகள். உடனடியாகவே அவசர பிரச்சினையான கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் தகவல் மற்றும் நில மீட்ப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் வண்ணம் கோருகிறேன். நீண்டகால பிரச்சினையான இணைபாட்ச்சி/ சுயநிர்ணய உரிமை என்பவை நம் நிகழ்ச்சி நிரலில் எப்பவும் உள்ளது.
 
தோழர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் அணியும் கிழக்கில் வெற்றி பெற்றுள்ளது அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
முஸ்லிம் தலைவர்களுக்கும் சிங்கள ஜனநாயக சக்திகளுக்கும் உங்கள் ஆதரவு தேவை என்பதையும் வலியுறுத்தி சம்பந்தன் ஐயாவையும் வாழ்த்துகிறேன். சம்பந்தன் ஐயாவும் முஸ்லிம் மலையக தமிழர் தலைவர்களும் கூடிபேசி ஒன்றாகவே கோத்தபாயாவை சந்தித்து பேசவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நல்வாழ்த்துக்கள் சம்பந்தன் ஐயா.

 

வணக்கம் ஐயா,
இந்த களம் தமிழர்கள் தம் தாயகம் மற்றும் மொழி, கலாச்சாரம், தமிழகம், புலம்பெயர் வாழ்வு என பல அம்சங்களை தந்து, இணைத்து வளர்த்து வருகின்றது. 

குறிப்பாக, இன்றைய தாயக மக்கள் சார்ந்து பலரும் பல வேறு கருத்துக்களை முன்வைக்கும் உரிமை இந்த களத்தில் உள்ளது. அத்துடன்  நாணயமாகவும், பண்பாகவும் கருத்தாடல் செய்யவும் உடன்படவும், எதிர்படவும் உரிமையை இந்த களம் தந்து நிற்கின்றது. அதனால், அதன் நிர்வாகிகள் மதிக்கவும் பாரட்டவும் பட வேண்டியவர்கள். ஆனால், அதற்காக சக உறவுகள் கருத்தாடலில் அவர்களின் உடன்படாமல் இருக்கும் தனித்துவமும், எந்த தயக்கமும் இன்றி எதிர்கருத்துக்களை முன்வைக்கவும் உரிமை உண்டு. அதனால் தான் இது வளர்ந்து செல்கின்றது. 

எனவே, இணைந்திருங்கள். தொடர்ந்தும் தயக்கம் இல்லாமல் எழுதுங்கள். அதுதான் சிறந்த வழிகளை ; தெரிவுகளை எமக்கு முன்னால் கொண்டுவரும். அதுதான் சனநாயகம்.

நன்றிகள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ampanai,

யாழ்குடும்பத்தினதும் கிருபனதும் உங்களதும் நட்ப்பு எனக்கு பலம். அது எப்பவும் நிலைக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளிடம் ஒரு நாகரிம் இருந்தது. அவர்கள் ஒரு தலைவரை சர்வாதிகாரி.. போர்க்குற்றவாளி.. இனப்படுகொலையாளி.. ஏன் பயங்கரவாதி என்று அடையாளப்படுத்தி விட்டால்.. அதில் இருந்து இலகுவில் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

அந்த வரிசையில்.. எமது தேசிய தலைவரை பயங்கரவாதி என்றார்கள்.. அழியும் வரை உறுதியாக நின்று அழித்தார்கள். எமது தேசிய தலைவைரை எந்தச் சிங்களவனும் என்றும் வாழ்த்தியது கிடையாது. 

அதேபோல் எமது தேசிய தலைவரும்.. தனது மண்ணுக்கும் மக்களுக்கு எதிரானவர்களை நோக்கி எச்சந்தர்ப்பதிலும் போலி வாழ்த்துக்களை வழங்கியதாகத் தெரியவில்லை.

அதேபோல்...  சாதாரண தமிழ் மக்களிடமும் திடமான சில நிலைப்பாடுகள் இருக்கின்றன. அதனை அவர்களுக்கும் காலத்துக்கு காலம் வாக்குச் சீட்டுக்களால் காட்டியே வருகின்றனர்.

எமது தேசிய தலைவர் மீதான ஆதரவாக இருக்கட்டும்.. சிங்கள தேசம் மீதான எதிர்ப்பாக இருக்கட்டும்.. ஹிந்திய ஆக்கிரமிப்பு மீதான வெறுப்பாக இருக்கட்டும்.. எம் மக்கள் வாக்குச் சீட்டுக்களால் துணிந்து வெளிப்படுத்தியே வந்துள்ளனர்.  அது1977 இல் இருந்து தெளிவாகவே நிகழ்ந்து வருகிறது.

சும்மா வாழ்த்துவது என்பது அரசியல் நாகரிகம் என்று சொல்லக் கூடாது.

ஒரு போர்க்குற்றவாளியை.. ஒரு இனத்தை அழித்தவனை.. மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்தவனை.. பல ஆயிரம் பேரின் காணாமல் போவதற்கு உடந்தையானவனை.. அரசுக் கட்டில் ஏற்றி வைத்து வாழ்த்துவதென்பது.. மனித இனத்துக்கு எதிரான ஒரு செயலும் கூட.

ஒரு சாதாரண மனிதனைக் கொன்ற கொலைஞனை.. நாம் வாழ்த்த நமக்கு மனம் வருமாக. ஆனால்.. இந்த நிலையில்லாக் கொள்கைக் கும்பல்கள்.. வாழ்த்தும் போல் தெரிகிறதே. அதுவும்... பலரைக் கொன்றவனையே... வாழ்த்தும்.. வரவேற்கும்.

எமது தேசிய தலைவரை எந்தச் சிங்களவனும் வாழ்த்தியதாக வரலாறு கிடையாது. ஆனால்.. எம் மக்களையும் மண்ணையும் தலைமையையும் அழித்தவன் அவன் சிங்களவனாக இருக்கலாம்.. ஹிந்தியனாக இருக்கலாம்.. எம்மவர்களின் சிலர் ஒரு தெளிவான கொள்கை நிலைப்பாடு இன்றி.. கொலைஞர்களை வாழ்த்தி வரவேற்பதென்பது.. இவர்களின் பலவீனத்தையும் அவர்களின் அராஜகத்தையும் அங்கீகரிப்பது போன்றதே ஆகும்.

இந்த அரசியல் நாகரிகம் எமக்குத் தேவை தானா..?! அதிலும் மெளனம் மேலானது. 

ஒரு தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றவாளியை.. மனித இனத்தை அழித்தவனை..  ஒரு தரப்பு தமக்கான தலைவன் ஆக்குகிறது என்பதற்காக.. நாமும் ஆக்க வேண்டும்.. வாழ்த்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நாம் அந்தக் குற்றவாளி தண்டனை அனுபவிக்கும் வரை அவனை நோக்கி நீதியை நிலைநாட்ட தான் முயல வேண்டும். மாறாக வாழ்த்தி வரவேற்பது என்பது.. எமது பலவீனத்தையே காட்டி நிற்கும். அவனின் அராஜகத்தை சர்வாதிகாரத்தை நாமே அங்கீகரித்து அடங்கிப் போவதாகவே இருக்கும்.

இது அல்ல எமது மக்களின் எதிர்பார்ப்பு..என்பதை வாக்குச் சீட்டுக்களால்... அவர்கள் பேசிய விதம் வெளிக்காட்டிய பின்னும்.. இப்படி வாழ்த்துவது கேவலத்திலும் கேவலம் ஆகும். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.