Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“அமை­தி­யான தேர்­த­லா­யினும் சகல தரப்­பையும் அர­வ­ணைக்கும் போக்கு இல்­லாமை விச­னத்­துக்­கு­ரி­யது”

Featured Replies

நா.தனுஜா)

இலங்­கையின் ஜனா­தி­பதித் தேர்தல் பெரு­ம­ள­விற்கு அமை­தி­யா­ன­தா­கவும், நம்­ப­கத்­தன்மை மிகுந்­த­தா­கவும் இருந்த அதே­வேளை இலங்கை சமூ­கத்தில் ஒன்­றி­ணைவும், சகல தரப்­பி­ன­ரையும் அர­வ­ணைக்கும் போக்கும் இல்­லாமை விச­னத்­துக்கு­ரி­ய­தாக இருக்­கின்­றது என்று ஜனா­தி­பதித் தேர்­தலைக் கண்­கா­ணிப்­ப­தற்கு வந்­தி­ருந்த பொது­ந­ல­வாய கண்­கா­ணிப்­பாளர் குழுவின் தலைவர் புரொஸ்பர் பாணி தெரி­வித்­தி­ருக்­கிறார்.

 

election-2.jpg

 

கானா நாட்டின் முன்னாள் உள்­துறை அமைச்­ச­ரான பாணி தலை­மை­யி­லான கண்­கா­ணிப்புக் குழுவின் உறுப்­பி­னர்கள் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை கொழும்பு தாஜ்­ச­முத்ரா ஹோட்­டலில் செய்­தி­யாளர் மாநா­டொன்றை நடத்தி, தங்­க­ளது பூர்­வாங்க அறிக்­கையை வெளி­யிட்டனர்.

இறு­தி­ய­றிக்கை பொது­ந­ல­வாய செய­லாளர் நாய­கத்­திடம் சமர்ப்­பிக்­கப்­படும் என்றும், இலங்கை அர­சாங்கம், அர­சியல் கட்­சிகள், தேர்­தல்கள் ஆணைக்­குழு மற்றும் மக்­க­ளுக்கு அந்த அறிக்கை கிடைக்கச் செய்­யப்­படும் என்றும் அவர் அறி­வித்தார்.

பூர்­வாங்க அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் முக்­கிய அம்­சங்கள் வரு­மாறு:

இலங்­கையின் தேர்­தல்கள் ஆணைக்­குழு நாடு பூரா­கவும் தேர்தல் செயன்­மு­றை­களை மிகவும் நேர்த்­தி­யான முறை­யிலும், செயற்­றி­ற­னு­டனும் முன்­னெ­டுத்­தி­ருந்­தது. சிறந்த முறையில் நிர்­வ­கிக்­கப்­பட்ட தேர்தல் செயன்­மு­றைகள் மூலம் தேர்­தல்­களை முறை­யாக நடத்­து­வதில் இலங்­கையில் காணப்­படும் நீண்­ட­காலப் பாரம்­ப­ரியம் வெளிப்­ப­டை­யாகத் தெரிந்­தது. வாக்­கா­ளர்­களில் 84 சத­வீ­த­மா­ன­வர்கள் தேர்­தலில் பங்­கேற்­றார்கள். இது மிகவும் கவ­னத்தைத் தூண்­டு­வ­தாக இருக்­கின்­றது. இலங்­கையின் பிர­ஜைகள் ஜன­நா­யகம் மற்றும் பொது­ந­ல­வா­யத்தின் அடிப்­படை விழு­மி­யங்கள் தொடர்பில் தெளி­வா­ன­தொரு நிலைப்­பாட்டை எடுத்­தி­ருக்­கி­றார்கள்.

என்­றாலும் இந்தத் தேர்தல் தீர்வு காணப்­ப­ட­வேண்­டிய சில முக்­கிய பிரச்­சி­னை­க­ளையும் கிளப்­பி­யி­ருக்­கி­றது.

ஒரு நம்­ப­க­மான ஜன­நா­யக செயன்­முறை என்­பது இலங்­கையின் ஒவ்­வொரு பிர­ஜைக்கும் சுதந்­தி­ர­மா­கவும், பத்­தி­ர­மா­கவும் வாக்­க­ளிப்பில் பங்­கேற்­ப­தற்­கான உரி­மையை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­து­கின்ற, சக­ல­ருக்கும் இடம்­த­ரு­கின்ற ஒன்­றாக இருக்­க­ வேண்டும். எதிர்­கா­லத்தில் இலங்கை சமூ­கத்தின் சகல பிரி­வி­ன­ரையும் அர­வ­ணைக்­கக்­கூ­டிய முறையில் தேர்­தல்­களை நடத்­தக்­கூ­டி­ய­தாக மேம்­பா­டு­களைச் செய்­ய­ வேண்டும் என்று இலங்கை மக்­க­ளையும், அர­சியல் தலை­வர்­க­ளையும் கேட்­டுக்­கொள்­கிறோம்.

இலங்­கையின் செழிப்­பான கலா­சார மற்றும் பன்­மைத்­துவம் மதிக்­கப்­பட வேண்டும். கொண்­டா­டப்­பட வேண்டும். சமூக ஒன்­றி­ணை­விற்கும், சகல தரப்­பி­ன­ரையும் அர­வ­ணைக்கும் போக்­கிற்கும் முன்­னு­ரிமை அளிக்­கு­மாறு சகல அர­சியல் தலை­வர்­க­ளையும் வலி­யு­றுத்திக் கேட்­டுக்­கொள்­கின்றோம்.

தேர்­த­லுக்கு முன்­ன­ரான நாட்­களில் இன மற்றும் மத பதற்ற ­நி­லையை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது. சில குழுக்கள் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­ன­தையும் நாங்கள் அவ­தா­னித்தோம். ஐக்­கி­யத்­துக்கு முன்­னு­ரிமை கொடுக்­கு­மாறும், அர­சியல் வாழ்வில் மதிப்பு மற்றும் சகிப்­புத்­தன்மை பண்­பு­களை வெளிக்­காட்­டு­மாறும் அர­சியல் மற்றும் சிவில் சமூ­கத்­ த­லை­வர்­க­ளையும், சகல பிர­ஜை­க­ளையும் கோரு­கின்றோம்.

தனியார் ஊட­கங்கள் ஊடா­கவும், சமூக ஊட­கத்­த­ளங்கள் மூலமும் வெறுப்புப் பேச்­சுகள் ஊக்­கப்­ப­டுத்­தப்­பட்­டமை விச­னத்­திற்­கு­ரிய மற்­றொரு அம்­ச­மாகும். பிர­சா­ரங்கள் முடி­வ­டைந்த பின்­ன­ரான 48 மணித்­தி­யால நேரத்­திற்­குள்ளும் கூட இந்த வெறுப்­பு­ணர்வுப் பிர­சா­ரங்கள் தொடர்ந்­ததைக் காண­ மு­டிந்­தது.

ஒரு தொகுதி ஊடக வழி­காட்­டல்கள் ஊடாக அர­சாங்க ஊட­கங்­களை ஒழுங்­க­மைப்­ப­தற்­கான அதி­கா­ரத்தை தேர்­தல்கள் ஆணைக்­குழு கொண்­டுள்­ளது. ஆனால் தனியார் ஊட­கங்கள் பெரு­ம­ள­விற்கு ஒழுங்­க­மைக்­கப்­ப­டா­தி­ருப்­ப­தா­கவே தோன்­று­கின்­றது. அடுத்த தேர்­த­லுக்கு முன்­ன­தாக ஒரு சட்­ட­ரீ­தி­யான கட்­ட­மைப்பின் ஊடாக தனியார் மற்றும் அர­சாங்க ஊட­கங்கள் சுயா­தீ­ன­மாக ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட வேண்டும். இது ­கு­றித்து எமது இறுதி அறிக்­கையில் விரி­வாகக் கூறுவோம்.

இலங்­கையின் அர­சி­யலில் பெண்­களின் பங்­கேற்பு குறை­வாக இருப்­பது மற்­றொரு குறிப்­பி­டத்­தக்க அம்­ச­மாகும். இந்த ஜனா­தி ­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட 35 வேட்­பா­ளர்­களில் ஒருவர் மாத்­தி­ரமே பெண் வேட்­பா­ள­ராவார். உள்­ளூ­ராட்சி மட்­டத்தில் பெண்­க­ளுக்கு 25 சத­வீத இட ­ஒ­துக்­கீட்டை அறி­மு­கப்­ப­டுத்­தி­யதன் மூலம் அர­சி­யலில் பெண்­களின் பங்­கேற்பு விட­யத்தில் இலங்கை ஏற்கனவே குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. தேசிய மட்டத்தில் அரசியலில் பெண்களின் பங்கேற்பையும், பிரதிநிதித்துவத்தையும் அதிகரிப்பதை உறுதிப்படுத்துவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலிக்கப்பட வேண்டும்.

இந்தத் தேர்தலின் ஊடாக இலங்கை மக்கள் மீண்டும் ஒருமுறை பொதுநலவாயத்தின் அடிப்படை ஜனநாயகப் பண்புகள் மீதான தங்களது பற்றுறுதியை வெளிக்காட்டியிருக்கிறார்கள். இந்தப் பண்புகளை சகல பிரஜைகளுக்குமாக மேலும் மேம்படுத்திப் பாதுகாக்குமாறு நாம் இலங்கையின் புதிய தலைமைத்துவத்தை வலியுறுத்திக் கேட்கின்றோம்.

https://www.virakesari.lk/article/69302

  • தொடங்கியவர்

காமன்வெல்த்த்தை மகிந்த ஜனாதிபதியாக இருந்த பொழுது புறக்கணித்த கனேடிய முன்னாள் பிரதமர்.

Dr. S. JaishankarVerified account @DrSJaishankar 21h21 hours ago

An interesting conversation with @stephenharper, former PM of Canada and a close friend of India. Thank him for his commitment to the @raisinadialogue. Look forward to welcoming him for the next one in January.pic.twitter.com/SnKJdsVQ4a
EJ1H_CcWsAAdGqz.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.