Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாயப்பெருநிலம்

Featured Replies

#மாயப்பெருநிலம் கிண்டிலின் உதவியினால் வாசித்து முடித்தாயிற்று வாசித்து முடிக்கும் வரையிலும் உண்மையில் மிக விறு விறு ப்பா இருந்தது அதுவும் அந்த போலியானவர்களின் கையில் போய்ச்சேர்ந்துவிடுமோ, இவர்களை இலகுவாக  நம்பி விட்டாரே  பேராசிரியர் ஜெயச்சந்திரன் என்ற தவிப்பு இருந்து கொண்டே வந்தது.
நம்பர் 002 உண்மையில் இருக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு அநேகமானவர்களிடம் இருப்பது போல் பேராசிரியரிடமும் இருந்ததில் வியப்பு இல்லை.

 எங்களவர்கள் எழுதும் கதைகளில் போராட்டத்தின் இழப்புகள்  சார்ந்த ஒருவித சோக இழையோடும் கதைகள் அதிகமாக வந்திருக்கின்றன அல்லது நான் படித்திருக்கிறேன் அவற்றுடன் ஒப்பிடும் போது இப்படியான கதைகள் புதிய களத்தினை திறந்து வைத்திருக்கின்றது எனலாம்..

கதாசிரியர் இடையிடையே சில வரலாற்று கதைகளையும் (கொடு/தொடு)த்திருக்கிறார் ஆபுத்திரன் கதை,நயினாதீவின் பழைய வரலாறு..பல்லவ குலத்தோன்றல் இளந்திரையன் கதை என்பன குறிப்பிடத்தக்கவை..

அவற்றில் ஒன்று 
************************"*""*******
கண்ணகியின் / கண்ணகை ( சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகையே தான்) தந்தை மாநாய்க்கன் மரக்கலம் வைத்து நெடுந்தூரம் சென்று வணிகம் செய்யும் வணிகர் குழு தலைவன். ஒருமுறை பூம்புகாரில் இருந்து விலையுயர்ந்த பொருட்களுடன் கீழ் நாடுகள் நோக்கி பயணம் மேற்கொண்டார். மரக்கலம் இரவு முழுவதும் பயணம் செய்து மறுநாள்காலை ஒரு தீவை நெருங்கியது.சிறிது இளைப்பாறிச்செல்லலாம் என கரை ஒதுங்கினர். கரை அருகே கடலுக்குள் இரண்டு பாறைகள் ஒரு பாறையில் நாகம் ஒன்று சீறிக்கொண்டிருந்தது.மற்றைய பாறையில் கருடன் ஒன்று அதை கொத்தி தின்ன தருணம் பார்த்திருந்தது.

அந்தப்பாம்பு தினமும் புளியந்தீவுப்பகுதியிலிருந்து நீந்தி வந்து இத்தீவில் உள்ள நாகர்குல பெண்தெய்வத்தை வழிபட்டு வந்தது இன்றும் அப்படி வரும்  போது தான் கருடனிடம் மாட்டி கொண்டுவிட்டது .

 அதைக்கண்ட மாநாய்க்கன் நாகதேவியை வழிபடச்செல்லும் பாம்பை கொல்ல வேண்டாம் என கருடனைக் கேட்கிறான் அப்போது கருடன் உனக்கு நாகதேவி மேல் அவ்வளவு பற்று இருக்குமானால் நீ கொண்டு வந்த பொருட்கள் எல்லவற்றையும் இந்த கோவிலுக்கு கொடுத்து விடு நான் பாம்பை விட்டு விடுகிறேன் என கூறியது.மாநாய்கனும் ஒப்பு கொண்டு அப்படியே செய்கிறான் 

அப்படி மாநாய்க்கன் கொடுத்த செல்வத்தால் கட்டபட்டது தான் நயினை நாகபூசனி அம்மன் கோவில்

மாநாய்க்கனால் கோவில் கட்டப்பட்டதாலும் அக்கோயிலில் நயினார் பட்டர் எனும் பூசாரி பூசை செய்த்தாலும் இத்தீவிற்கு நயினா தீவு என பெயர் வந்தது 
*************************************

சீமானை வஞ்சகமில்லாமல் வைச்சு செய்திருக்கிறார். ஆடிட்டர் நந்தா எனும் பாத்திரத்தில் உலவ விட்டு 😄
 முப்பாட்டன் முருகன் மாயோன் ஆகியோர் இடைக்கிடை வந்து போகின்றனர்.
 கிரண்பேடியையும் வாரி இருக்கிறார்..

"திராவிடத்தால்விழுந்தோம்"  "இலவசத்தால் விழுந்தோம்" எனும் வாக்கியங்கள் மீது உள்ள வெறுப்பையும்
காட்டி செல்கிறார்

கதை சுருக்கம்

போராட்டத்தின் இறுதி காலங்களில் 40கிலோ தங்கம் தமிழகத்திற்கு கடத்தப்பட்டு அங்கு விற்கப்பட்டு அங்கிருந்து பணம் அப்போதைய பொறுப்பானவருக்கு மாற்றப்படுகிறது அவர் அந்த பணத்தினை பிட் கொயினாக மாற்றி இரகசிய கணக்கில் வைத்திருக்கிறார் அவற்றின் மதிப்பு 21000 கோடி ரூபாக்கள் அந்த இரகசிய கணக்கினை திறப்பதற்கான குறிச்சொல்  குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தெரியும் அவர்களில் ஒருவர் பேராசிரியர் ஜெயச்சந்திரன்  

அவரை நம்ப வைத்து அவரிடமிருந்து அவற்றை திருட ஒரு சிலர் திட்டம் போடுகிறார்கள்.. பேராசிரியர் ஏமாந்தாரா அந்தப்பணம் என்னவானது படியுங்கள் 

கிண்டிலி்ல் 0.99$

  • கருத்துக்கள உறவுகள்

கிண்டிலில் தேட வேறு எதோ வருகிறது முகவரி கிடைக்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்

 

12 minutes ago, பெருமாள் said:

கிண்டிலில் தேட வேறு எதோ வருகிறது முகவரி கிடைக்குமா ?

E2272-A13-386-F-4704-A614-705-D1-BE41037

  • கருத்துக்கள உறவுகள்

நான் kindleல் தேடும் போது மேற்கூறியவாறு வந்தது.. அத்துடன் புத்தகத்தைப்பற்றிய வாசகர் ஒருவரின் கருத்தும் அபராஜிதன் கூறிய கதாபாத்திரங்களுடன் ஒத்துவந்தமையால் இங்கே இணைத்துள்ளேன்..

  • தொடங்கியவர்
36 minutes ago, பெருமாள் said:

கிண்டிலில் தேட வேறு எதோ வருகிறது முகவரி கிடைக்குமா ?

 

7 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் kindleல் தேடும் போது மேற்கூறியவாறு வந்தது.. அத்துடன் புத்தகத்தைப்பற்றிய வாசகர் ஒருவரின் கருத்தும் அபராஜிதன் கூறிய கதாபாத்திரங்களுடன் ஒத்துவந்தமையால் இங்கே இணைத்துள்ளேன்..

ஆம் சரியானதே நீங்கள் இணைத்தது 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அபராஜிதன்😀

மாயப் பெருநிலம் -  சென் பாலன்

கிண்டிலில் தரவிறக்கியுள்ளேன். நன்றாக இருந்தால் துப்புறியும் தொடரில் இருக்கும் மற்றைய இரு நூல்களையும் வாங்கலாம் என்று நினைக்கின்றேன். 

Kindle 
https://www.amazon.co.uk/மாயப்-பெருநிலம்-Maaya-perunilam-கார்த்திக்-ebook/dp/B07ZMZ4XWG/ref=sr_1_2?keywords=Sen+Balan&qid=1574284081&s=digital-text&sr=1-2

  • தொடங்கியவர்
2 hours ago, கிருபன் said:

நன்றி அபராஜிதன்😀

மாயப் பெருநிலம் -  சென் பாலன்

கிண்டிலில் தரவிறக்கியுள்ளேன். நன்றாக இருந்தால் துப்புறியும் தொடரில் இருக்கும் மற்றைய இரு நூல்களையும் வாங்கலாம் என்று நினைக்கின்றேன். 

Kindle 
https://www.amazon.co.uk/மாயப்-பெருநிலம்-Maaya-perunilam-கார்த்திக்-ebook/dp/B07ZMZ4XWG/ref=sr_1_2?keywords=Sen+Balan&qid=1574284081&s=digital-text&sr=1-2

புத்தகம் பற்றிய உங்கள் பார்வையை யும் எழுங்கள்

ஆகா ஓகோ என்று இல்லை ஆனால் எங்களின் பிரச்சினையை வேறு ஒரு பார்வையில் எடுத்து சென்றிருக்கார்..

  • கருத்துக்கள உறவுகள்

கிரிப்டோ கரன்சி டார்க் வெப்  நல்ல சரடு கதை நல்லகதைதான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.