Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்­கள பெளத்த அரசு உரு­வானால் சிறு­பான்மை மக்­களை பாதிக்கும்: ஜே.வி.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்­கள பெளத்த அரசு உரு­வானால் சிறு­பான்மை மக்­களை பாதிக்கும்: ஜே.வி.பி.

(ஆர்.யசி)

சிங்­கள பெளத்த அர­சாங்கம் ஒன்­றினை அமைக்கும் நோக்­கத்தில் ராஜபக் ஷக்கள் செயற்­பட்டால் தமிழ் முஸ்லிம்  மக்­க­ளுக்கே அதிக தாக்­கத்தை செலுத்தும். ஜனா­தி­பதி கோத்­த­பாய தான் சிங்­கள பெளத்த வாக்­கு­களில் வெற்றி பெற்­றவன் என்ற அடை­யா­ளத்தை காட்டி சிறு­பான்மை மக்­களை அச்­சப்­ப­டுத்­தி­யுள்ளார். இந்த அர­சாங்­கத்தின் நோக்­கங்கள் தவ­றா­னவை  என்­பதை மக்கள் இன்­னமும் உண­ர­வில்லை என்று மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­துள்­ளது. 

பொதுத் தேர்­தலில் பல­மான எதிர்க்­கட்­சி­யாக உரு­வா­கவே முயற்­சிக்­கின்றோம் எனவும் ஜே.வி.பியின்  பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா  குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி தேர்­தலின் பின்­ன­ராக அர­சாங்கம் தற்­போது முன்­னெ­டுத்து வரு­கின்ற நகர்­வுகள் குறித்தும் பொதுத் தேர்­தலில் மக்கள் விடு­தலை முன்­னணி எவ்­வாறு செயற்­படும் என்ற கார­ணிகள் குறித்தும் கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

rilvin.jpg

அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில் 

ஜனா­தி­பதித் தேர்­தலில் தேசிய மக்கள் சக்தி எதிர்­பார்த்த அள­விற்கு மக்­களின்  ஆத­ரவு கிடைக்­க­வில்லை. இதற்கு சில கார­ணிகள் உள்­ளன. பிர­தான இரண்டு வேட்­பா­ளர்கள் குறித்து அதிக கவனம் செலுத்­தப்­ப­டு­கின்ற நிலையில் மூன்றாம் நப­ருக்கு மக்கள் ஆத­ரவு கிடைப்­பது கடி­ன­மான ஒன்­றாகும். அதேபோல் ஊட­கங்­களும் பிர­தான இரு வேட்­பா­ளர்கள் குறித்து மட்­டுமே கவனம் செலுத்­தின. எவ்­வாறு இருப்­பினும் தேர்­தலில் மக்கள் ஒரு ஆணையை கொடுத்­துள்­ளனர். அதற்கு அனை­வரும் கட்­டுப்­பட்­டாக வேண்டும். அடுத்த மூன்று மாதங்­களில் பொதுத் தேர்தல் ஒன்று இடம்­பெறும். இதில் ராஜபக் ஷ அர­சாங்கம் சகல விதத்­திலும் அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி ஐக்­கிய தேசிய கட்­சியின் அரை­வாசி பேரை­யா­வது விலை­கொ­டுத்து வாங்கி தமது அர­சாங்­கத்தை அமைக்க முயற்­சிப்­பார்கள். ஆகவே பல­மான எதிர்க்­கட்சி யார் என்­பதே கேள்­வி­யாக அமையும். ஐக்­கிய தேசிய கட்­சி­யினால் பல­மான எதிர்­கட்­சி­யாக செயற்­பட முடி­யுமா என்ற கேள்வி எழும். ஆகவே தேசிய மக்கள் சக்தி பொதுத் தேர்­தலில் மக்­களின் ஆத­ரவை பெற்ற கட்­சி­யாக அடை­யா­ள­ப­டுத்த சகல நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் முன்­னெ­டுப்போம். 

மூன்று மாத­கால இடை­கால அர­சாங்­கத்தில் அமைச்­சர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்கள் யார் என்று பார்த்தால் இந்த அர­சாங்கம் எப்­ப­டிப்­பட்­டது என்­பதை தெரிந்­து­கொள்ள முடியும். கடந்த காலங்­களில் ஊழல் வாதிகள், பாரா­ளு­மன்­றத்தில் அரா­ஜ­க­மாக செயற்­பட்­ட­வர்கள், பல குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ள­வர்கள், வழக்­குகள் உள்­ள­வர்­களை ஜனா­தி­பதி அமைச்­சர்­க­ளாக நிய­மித்­துள்ளார். இவர்­களை கொண்டு ஊழ­லில்லா அர­சாங்கம் ஒன்று உரு­வாக்­கப்­ப­டுமா என்ற கேள்வி எழு­கின்­றது. 

மறு­புறம் இன­வாத மத­வாத அமைப்­புக்கள் அனைத்­துமே இன்று அமை­தி­யா­கி­யுள்­ளன. ஆகவே இவர்கள் அனை­வரும் யாரு­டைய தேவைக்­காக செயற்­பட்­டனர் என்­பதும் தெளி­வா­கி­யுள்­ளது. எனவே மக்கள் இப்­போ­தா­வது உண்­மை­களை உணர வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. ஆனால் மக்கள் இன்றும் அவற்றை அறிந்­து­கொள்ள தயா­ரில்­லாத நிலையில் உள்­ளனர். 

ஜனா­தி­பதி தனது பத­விப்­பி­ர­மாண நிகழ்வின் போதே தான் சிங்­கள பெளத்த வாக்­கு­களில் வெற்றி பெற்­றவன் என்ற அடை­யா­ளத்தை காட்டி சிறு­பான்மை மக்­களை அச்­சப்­ப­டுத்­தி­யுள்ளார். இவர்­களின் அர­சாங்­கத்­தையும்  பெளத்த சிங்­க­ள­வாத அர­சாங்­க­மாக அமைக்­கவே முயற்­சி­களை எடுப்­பார்கள் என்­பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

ஆகவே தமிழ் முஸ்லிம் மக்களை புறக்கணித்த அரசாங்கம் உருவாகினால் அதில் அதிக பாதிப்பு சிறுபான்மை மக்களையே சென்றடையும். அதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக நாம் கருதுகின்றோம். எனவே எதிர்க்கட்சியாக நாம் பலமடையவே சகல மக்களையும் சந்தித்து எமக்கான ஆதரவை கேட்போம்  என்றார். 

 

https://www.virakesari.lk/article/69538

11 minutes ago, கிருபன் said:

சிங்­கள பெளத்த அரசு உரு­வானால் சிறு­பான்மை மக்­களை பாதிக்கும்: ஜே.வி.பி.

ஏதோ இவ்வளவு காலமும் சிங்கள-பௌத்த அரசு இல்லாத மாதிரி, இதுவரை சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படாத மாதிரி பிலிம் காட்டுறார்!
1948க்கு பிறகு சொறிலங்கால அமைந்ததெல்லாம் சிங்கள-பௌத்த அரசுகள் தானே!
ஏன் இந்த ஜேவிபி யும் ஒரு சிங்கள-பௌத்த அரசியல் கட்சி தானே!

கடந்த அரசிலும் சிங்கள-பௌத்த கொலைகாரர்களுக்கே முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன.

இந்த அரசிலும் சிங்கள-பௌத்த கொலைகாரர்களுக்கும், ஊழல் கோஷ்டிகளுக்கும், கடத்தல் கோஷ்டிகளுக்கும், சுரண்டல்காரருக்கும், முக்கிய பதவிகள் வழங்கப்படும்.

அந்த லைன்ல தான் கடத்தல் கோஷ்டியை சேர்ந்த டக்ளசுக்கும், தனது சமூகத்தையே சுரண்டி வாழும் ஆறுமுகனுக்கும்  அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

இதே லைன்ல தனது சமூகத்தையே சுரண்டி வாழும் சுமந்திரனுக்கும், சம்பந்தனுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாதே!

 

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற தேர்தலில் இனவாதம், மதவாதம் ஜனாதிபதித் தேர்தலை விட அதிகமாகப் பேசி, இரண்டு கோடி செலவழித்தால்  அந்த  கட்சி பெரும்பான்மை பெற முடியும். இவரின் கணக்கு இதை சொல்லி தமிழரின் மனதை வென்று  வாக்கை தான் சம்பாதிக்கலாம் என்பதே, 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.