Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெங்கு நோயால் 92 பேர் உயிரிழப்பு!

Featured Replies

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

dengue.jpg

அதனால் நவம்பர் 27 முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை ஆறு மாவட்டங்களில் சிறப்பு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அந்த பிரிவின் இயக்குநர் டாக்டர் அருணா ஜெயசேகர தெரிவித்தார்.

இந்த திட்டம் கொழும்பு, கம்பாஹா, மாத்தளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தொடங்கப்படும்.

அத்துடன் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருப்பதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆண்டு இதுவரை 73,601 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் 92 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/69572

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் டெங்கு நோயால் 91 பேர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில், இம்மாதம் 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 91 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, வைத்தியர் கலாநிதி வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வருடம் ஜனவரி மாதம் 1ஆம் திகதியில் இருந்து இதுவரை, 1,419 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதில், இருவர் உயிரிழந்துள்ளர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதில் குறிப்பாக ஓட்டமாவடி பிரதேசத்தில் ஒரு மரணமும் ஏறாவூர் பகுதியில் இருந்து ஒரு மரணமும் என இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக, வைத்தியர் கலாநிதி வே.குணராஐசேகரம் தெரிவித்தார்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு பிரிவில் இதுவரை 34 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதுபோன்று செங்கலடியில் 18 பேர், ஆரையம்பதியில் 10 பேர், வெல்லாவெளியில் 06 பேர்,  வாழைச்சேனை, வவுனதீவுயில் தலா 05 பேர் என, மொத்தம் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மடடககளபபல-டஙக-நயல-91-பர-பதபப/73-241422

  • தொடங்கியவர்

வேகமாகப் பரவும் காய்ச்சல் தடுப்பது பற்றி யார் சிந்திப்பர்

எங்கு பார்த்தாலும் டெங்குக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல்.
 
இதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முழுமையும் நோயாளர்களால் நிரம்பிப் போயுள்ளது.
முன்பு ஒருபோதும் இல்லாத அளவில் டெங்குக் காய்ச்சல் பரவிவர; அதனைக் கடந்து ஒருவகை வைரஸ் காய்ச்சல் தொற்றும் ஆட்களை அடித்து முறித்து விடுகிறது.
 
இவ்வாறாக கட்டுக்கடங்காமல் காய்ச்சல் தொற்றுப் பரவி வருகின்றபோதிலும் எங்கள் இடங்களை நாங்களே தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் இம்மியும் ஏற்படாமல் இருப்பதுதான் வேதனையிலும் வேதனை.
 
உரியமுறையில் குப்பைகூழங்களை அகற்றாமல், வீட்டுக் கழிவுகளை உரப்பைகளில் இட்டு அதனை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து அடுத்த வீட்டுக்கு முன்பாகவும் வீதியிலும் எறிந்து விட்டுப் போகின்ற மனநிலை இருக்கும் வரை; எந்த விடயத்திலும் இறைவன் எங்களுக்கு உதவுவான் என்று நினைப்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது.
 
ஆம், இன்றுவரை எங்கள் தமிழினம் துன்பப்பட்டு வருகிறது.
 
யுத்தம் ஒருபகுதி மக்களைக் கொன்றொழித்தது. இதைக் கடந்து யாழ்ப்பாணத்துக்கு வந்த புகையிரதம் தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதை நோக்கமாகக் கொண்டதுபோல ஒவ் வொரு நாளும் பொதுமக்களைப் பலியெ டுத்து வருகிறது.
 
உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால் புகையிரதவண்டிக்கு இரையாகிப் போகின்ற எங்கள் சனத்தின் இழப்புப் பற்றி எவரும் கதைப்பதாகவோ சிந்திப்பதாகவோ இல்லை.
 
தமிழ் அரசியல் தரப்புகள் வரப்போகும் பொதுத் தேர்தலுக்குத் தங்களைத் தயார் செய் வதில் ஈடுபட்டுள்ளன.
அதிலும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற கூட்டமைப்பின் பிரதிநிதி கள் தற்போதைய பதவிகளை இராஜினாமாச் செய்துவிட்டு, பாராளுமன்றத் தேர்தலில் கள மிறங்கத் தயாராகுவதாகவும் தகவல்.
இந்நிலையில் குப்பை அகற்றினால் என்ன? அகற்றாமல் விட்டால் என்ன என்பது தான் நிலைமை.
 
இந்நிலையில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு இன்னமும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது என்றபோது, பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் வைரஸ் மற்றும் டெங்குக் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டால், அவர்களின் நிலைமை என்ன என்பதை ஒரு கணம் நாம் உணர்ந்தாக வேண்டும்.
 
எனவே க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக் குத் தோற்றுகின்ற மாணவர்கள் மிகக் கவன மாக இருப்பதும் நோய்த் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாக்கின்ற முன்னாயத்த ஏற்பாடுகளைச் செய்வதும் கட்டாயமானது.
இதுவிடயத்தில் பாடசாலைச் சமூகம், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் அதீத கருசனை கொண்டு தத்தம் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாகவும் நோய்த்தொற்று இல்லாத பாதுகாப்பான இடமாகவும் வைத்திருக்க வேண்டும்.
 
இவையாவற்றுக்கும் மேலாக; அரசியல் தரப்புகள், உள்ளூராட்சி சபை நிர்வாகங்கள், மாவட்டச் செயலகங்கள், பிராந்திய சுகாதார திணைக்களங்கள் என்பன நோய்த் தொற் றைத் தடுப்பதில் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.