Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கின்றேன்- மோடி

Featured Replies

இலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவம் , நீதி, சமாதனம், கௌரவம் ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று முன்னெடுக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கின்றேன் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அதேவேளை, ஸ்திரமான மற்றும் வளமான முன்னேற்றகரமான இலங்கை இந்தியாவின் நலனுக்கு மிகவும் உகந்த விடயம். இது முழு இந்து சமுத்திரத்திற்கும் நன்மையளிக்கக்கூடிய விடயமாகுமெனவும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின்னர் உரையாற்றும் பேதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நரேந்திர மோடி மேலும் தெரிவிக்கையில்,

கோத்தாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு வருகைதந்தமை மிகவும் சந்தேசமான விடயம். இந்தியா 400 மில்லியன் டொலரை இலங்கைக்கு கடனாக வழங்கவுள்ளது. 

இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்ற வழங்கப்படும் கடன் 400 மில்லியனாக நீடிக்கப்படும். இந்திய அரசின் உதவியுடன் 46 ஆயிரம் வீடுகள் இதுவரை நிர்மாணிக்கப்பட்டள்ளன. மலையகப் பகுதிகளில் மேலும் 14 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. சூரிய சக்தி மின் திட்டத்திற்காக 100 மில்லியன் டொலர் கடனாக வழங்கப்படும்.

இந்தியா எப்போதும் பயங்கரவாதத்தை எதிர்க்கிறது. பயங்கரவாதத்திற்கெதிரான செயற்பாடுகளுக்காக இந்தியா 50 மில்லியன் டொலரை இலங்கைக்கு கடனாக வழங்கவுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவம் , நீதி, சமாதனம், கௌரவம் ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றேன்.

அத்துடன் 13 ஆவது அரசியலமைப்பு திருத்த அமுலாக்கம் ,இலங்கையின் வடக்கு கிழக்கு அபிவிருத்தி ,இந்திய வம்சாவவழி தமிழர் பகுதி அபிவிருத்தி உட்பட விடயங்கள் ,வீடமைப்பு போன்றவற்றிக்கான இந்தியாவின் உதவிகள் தொடரும்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து நாங்கள் கருத்து பரிமாறிக் கொண்டோம். 13வது திருத்த அமுலாக்கம் – தமிழரின் சமத்துவம் ,உரிமை அவர்களுக்குரிய கெளரவத்தை உரிய முறையில் வழங்கும் திட்டத்தை அரசு முன்னெடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.

நாங்கள் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை பின்பற்றுகின்றோம். அந்தவகையில், ஸ்திரமான மற்றும் வளமான முன்னேற்றகரமான இலங்கை இந்தியாவின் நலனுக்கு மிகவும் உகந்த விடயம். இது முழு இந்து சமுத்திரத்திற்கும் நன்மையளிக்கக்கூடிய விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/70047

  • தொடங்கியவர்

'இலங்கைக்கு நல்லிணக்க நடைமுறை தேவை'

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று, இலங்கையில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அத்தோடு, நாட்டின் உளவுத்துறையை மேலும் வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடன் வழங்கத் தயார் எனவும், பிரதமர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷயுடன் சற்றுமுன்னர் இடம்பெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், “இலங்கை ஜனாதிபதியான பின்னர், ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷ, தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டு வந்ததையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

“இந்தியா, இலங்கையின் மிகவும் நெருக்கமாக நண்பன். இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ், இலங்கையில் 14,000 வீடுகளை நிர்மாணித்துள்ளோம். இன்று, நாங்கள் இரு நாடுகளினதும் பாதுகாப்புக் குறித்து கலந்துரையாடினோம். இந்தியாவும், பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடியது. ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கை மீது நடத்தப்பட்ட தாக்குதலை, நாங்கள் கண்டிக்கிறோம்.

“மேலும், இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்கள் கடன் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட, 50 மில்லியன் டொலர்கள் கடனை வழங்க, இந்தியா முடிவு செய்துள்ளது.

“இலங்கையில் நல்லிணக்கம் குறித்த எங்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். ஜனாதிபதி ராஜபக்‌ஷ, இன நல்லிணக்கம் குறித்த தனது அரசியல் கண்ணோட்டத்தைப் பற்றி என்னிடம் கூறினார். நல்லிணக்க நடைமுறையில், 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதும் அடங்கும்.

“இலங்கையில், தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, சமாதனம், கௌரவம் ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

“நாங்கள் அயல் நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைப் பின்பற்றுகின்றோம். அந்தவகையில், ஸ்திரமான மற்றும் வளமான முன்னேற்றகரமான இலங்கை இந்தியாவின் நலனுக்கு மிகவும் உகந்த விடயம். இது முழு இந்து சமுத்திரத்திற்கும் நன்மையளிக்கக்கூடிய விடயமாகும்” எனவும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்தியப்
பிரமரர் நரேந்திர மோடியை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்த பின்னர்,  ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இது தொடர்பில், டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர், தனது அழைப்பை ஏற்று, முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்றியெனத் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியின் இந்திய விஜயமானது, இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான உறவுக்கு ஒரு சாட்சியென்றும் இலங்கை – இந்திய வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு இந்த விஜயம் ஒரு சான்றாகும், அதேநேரம் எமது பிணைப்பை வலுப்படுத்தவும், நல்லுறவை பலமூட்டவும் உதவும்இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ந்து, மேலும் பலப்படுத்தப்படும் என்றும், அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து , “இலங்கை ஜனாதிபதியாக முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்த கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன்” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் இணைந்து நடத்திய ஊடகச் சந்திப்பின் போது, நரேந்திர மோடியை, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு, ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு விடுத்தார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙககக-நலலணகக-நடமற-தவ/150-241752

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ampanai said:

“இலங்கையில் நல்லிணக்கம் குறித்த எங்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். ஜனாதிபதி ராஜபக்‌ஷ, இன நல்லிணக்கம் குறித்த தனது அரசியல் கண்ணோட்டத்தைப் பற்றி என்னிடம் கூறினார். நல்லிணக்க நடைமுறையில், 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதும் அடங்கும்.

“இலங்கையில், தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, சமாதனம், கௌரவம் ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

roflphotos-dot-com-photo-comments-201710

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனை சீனா பக்கம் சாயாமல் தன் பிடிக்குள் வைத்திருப்பதற்காக ஒரு போடு போட்டிருப்பார் மோடி.  மற்றப்படி தமிழர் மேலுள்ள கரிசனை அல்ல. உந்த சலசலப்புக்கெல்லாம் பயப்படுகிறவன் அல்ல சிங்களவன். அவனிடமும் இந்தியாவுக்கு எதிரான பாணம்இருக்குது. உருட்டல், மிரட்டலை தவிர  வேறு என்ன செய்ய முடியும் இந்தியாவால்? எதுக்கு இந்தியா பயன்படுகிறதோ அதையே சிங்களவன்  செய்து இந்தியாவை  மடக்க, வாயை மூடிக்கொண்டு ஓடியோடி உறவை வலுப்படுத்துறோம், நல்லிணக்கத்தை நடைமுறைப்படுத்துகிறோம் எண்டு வழிய வேண்டியான். தகுதி இல்லாதோருக்கு செய்யும் தப்பான உதவிகளால் தங்களை  தாங்களே முட்டாள் ஆக்கிக்கொள்கிறார்கள

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.