Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரீட்சை எழுதவிருந்த மாணவன் குடும்பத்துடன் உயிரிழப்பு

Featured Replies

நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை தேர்தல்  தொகுதியில் நாகந்தலாவ மலபத்தாவ எனுமிடத்தில் வீடொன்றின் மீது  மண்சரிவில் சிக்குண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மகன் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வலப்பனை பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட  வலப்பனை பதியபெலல்ல பிரதான வீதிக்கு அருகில் நாரந்தலாவ மலபத்தாவ எனுமிடத்தில் பிரதான வீதியுடனான  பாரிய மண்மேடு சரிவு (30) இரவு 8.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

நாரந்தலாவை பகுதியில்  பிரதான வீதிக்கு கீழ்  பகுதியில் அமைந்திருந்த இரண்டு வீடுகள்  மீது மண் மற்றும்  பாரிய கற்கள் இதன்போது சரிந்து மூடியுள்ளன.

இதன்போது, ஒரே வீட்டில் வசித்து வந்த 50, 48,17,மற்றும் 18 வயதுடைய   தந்தை, தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் மண்ணில் புதையுண்ட நிலையில்  சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளனர்.

சடலமான மீட்கப்பட்ட மாணவன் நாளைய தினம் கல்விப் பொதுத் தாராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எழுத தயாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பரடச-எழதவரநத-மணவன-கடமபததடன-உயரழபப/150-241823

 

நுவரெலியா மாவட்டத்தில் 92 பேர் இடம் பெயர்வு

நுவரெலியா  மாவட்டத்தில் அதிக மழையுடான சீரற்ற வானிலை காரணமாக நேற்று (30) மாலை 5 மணிமுதல் இன்று (01) மாலை 4 மணிவரையிலான காலப்பகுதியில்  92 பேர் இடம் பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில்  தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மழை வெள்ளம் மற்றும்  மண்சரிவு காரணமாக வலப்பனை மற்றும்  கந்தப்பளை  பிரதேசத்தில் பாதிப்புகள் அதிகமாக காணப்படுவதாக மத்திய நிலையம்  சுட்டிக்காட்டியுள்ளது.

பொகவந்தலாவை, நோர்வூட், அக்கரப்பத்தனை, டயகமை,   மற்றும் மாகாஸ்தோட்ட ஆகிய பகுதிகளிலும் வெள்ளநீர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சேத விவரங்கள் அவ்வப்பகுதி கிராமசேவகரிடத்தில் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான வீதிகளில் மண்சரிவுகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளதாகவும் மண்களை அகற்றும் பணிகள் முன்னடுக்கப்பட்டு வருவதுடன்  , ஆற்று ஓரங்கள் மற்றும்  மண்மேட்டு பகுதிகளில் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறும் பாதிப்புகள் ஏற்படும் நிலை கண்டறியப்பட்டால் அவ்வப்பகுதி கிராமசேவகர்கள் ஊடாக இடர் முகாமைத்துவ மத்திய  நிலையத்தின் கவனத்திற்கு கொண்டுவரும்படி வேண்டுகோள்  விடுப்பதாகவும் நுவரெலியா இடர்பாடுகள் முகாமைத்துவ உதவி  பணிப்பாளர்  தெரிவித்தார்.

ஆ.ரமேஸ் 

http://www.tamilmirror.lk/செய்திகள்/நவரலய-மவடடததல-92-பர-இடம-பயரவ/175-241829

  • தொடங்கியவர்

பாதிக்கப்படும் O/L மாணவர்களுக்கு அருகிலுள்ள நிலையத்தில் வசதி

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அருகிலுள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், முறையாக உறுதிப்படுத்தப்பட்ட பரீட்சை அனுமதிப்பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை, சாதாரண தர பரீட்சைக்கு ஒரு சில விசேட பரீட்சை நிலையங்களை அமைக்க பரீட்சைத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு இம் முறை 20 சிறைக் கைதிகள் தோற்றவுள்ளதோடு, சிறைச்சாலைகளில் அமைக்கப்படவுள்ள விசேட பரீட்சை நிலையங்களில், பரீட்சைத் திணைக்கள அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் சிறைக்கைதிகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நாடாளவிய ரீதியில் 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதோடு, ஏழு இலட்சத்து 17,008 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

நாளை (02) ஆரம்பமாகும் இப்பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
 

பரீட்சைகள் காலை 08.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளதால், பரீட்சார்த்திகள் அரை மணி நேரத்திற்கு முன்பு பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாகயம் சனத் பூஜித, தெரிவித்தார்.

பரீட்சைகள் தொடர்பாக பெறப்படும் அனைத்து முறைப்பாடுகளையும் விசாரிக்க விசேட விசாரணைக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், மேலதிக பரீட்சை மேற்பார்வைக் குழுக்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பரீட்சைகள் தொடர்பான ஏதேனும் மோசடிகள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால், 1911 அல்லது 011 2784208 அல்லது 011 2784537 எனும் உடனடி தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பரீட்சைகள் தொடர்பான வினாத்தாள் திருத்தும் பணிகள், எதிர்வரும் டிசம்பர் 24ஆம் திகதி முதல் ஜனவரி 26ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.thinakaran.lk/2019/12/01/உள்நாடு/44705/பாதிக்கப்படும்-ol-மாணவர்களுக்கு-அருகிலுள்ள-நிலையத்தில்-வசதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.