Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிதாகப் பரவி வரும் QR code மோசடி

Featured Replies

சமீப காலங்களில் QR கோடு மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. QR கோடைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறையும் பரவலான ஒன்றாக இருக்கிறது. ஆனால், முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் QR கோடை ஸ்கேன் செய்யும்போது நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.

ஆன்லைன் மூலமே இந்த வகையான மோசடி அதிகளவில் நடைபெறுகிறது. ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களிடம் பொருள்களை வாங்கும்போதும் விற்கும்போதும் அவர்கள், ``பணம் செலுத்துகிறேன், இந்த QR கோடை ஸ்கேன் செய்யுங்கள்" எனக் கூறினால் கண்டிப்பாக ஸ்கேன் செய்யாதீர்கள். நீங்கள் ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் மொபைலை ஹேக் செய்து அவர்களால் உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.

கடந்த சில வாரங்களாக இதேபோல் பணத்தை இழந்த பல பேர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஹைதராபாத்திலும், பெங்களுரிலும் இதே போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன. இதில் மிகக் கவனமாக இருக்க வேண்டியவர்கள் செகண்ட் சேல்ஸ் தளங்களில் பொருள்களைப் பதிவு செய்து விட்டு வாங்குபவர்களுக்காகக் காத்திருப்பவர்கள்தான். QR கோடு மோசடிக்காரர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவிப்பது போலத் தொடங்கித்தான் இந்த மோசடியில் ஈடுபடுகிறார்கள்.

QR கோடு என்பதும் ஒரு மெயில் ஐ.டி போன்றதுதான். ஸ்பேம் மெயிலைத் திறக்க வேண்டாம் என்பதைப் போலத்தான் இதுவும். தெரியாதவர்களிடமிருந்து வரும் QR கோடை ஸ்கேன் செய்யாதீர்கள்.

https://www.vikatan.com/technology/tech-news/qr-code-scams-are-in-the-raise-recent-days

  • தொடங்கியவர்

QR கோடும், அது செயல்படும் முறையும்..!

QR கோடும், அது செயல்படும் முறையும்..! #HowQRcodeWorks

QR கோட் எனப்படும் குயிக் ரெஸ்பான்ஸ் கோட்-ஐ நம்மில் பலரும் பயன்படுத்தியிருப்போம். விளம்பரங்கள், செய்திகள், வங்கி ஆப்ஸ்கள், இ-வாலட்கள் என இதன் பயன்பாடு தற்போது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுவும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகமான பின்பு, இவற்றின் மவுசு மீண்டும் அதிகரித்துவிட்டது எனலாம். நாம் சில நொடிகளில் ஸ்கேன் செய்து, தகவல்களைப் பெற உதவும் இந்த QR கோட் எப்படி வேலை செய்கிறது எனப் பார்ப்போமா?

நாம் ஷாப்பிங் மால்களில் வாங்கும் பொருட்களின் மீது இருக்கும் பார்கோடின், 2D வெர்ஷன்தான் இந்த QR கோட். ஸ்மார்ட்போன்களால் பிரபலம் அடைந்த டெக்னாலஜியில் இதுவும் ஒன்று. எழுத்துக்கள், எண்கள், குறியீடுகள் போன்றவற்றை QR கோட்களாக மாற்றி பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு உதாரணங்கள்தான், இணைய முகவரிகளின் QR கோட்கள்.
 

QR கோடின் வடிவமைப்பு:

இந்த கோட்களைப் பார்த்தால், ஏராளமான புள்ளிகள் கறுப்பு மற்றும் வெள்ளையாக கலந்திருக்கிறது என மட்டும்தான் தெரியும். ஆனால் இந்த கோட்களுக்கு துல்லியமான வடிவமைப்பு இருக்கிறது. நீங்கள் சில QR கோட்களை கவனித்தாலே இது தெரியும்.

1. QR கோடில் இருக்கும் இந்த மூன்று புள்ளிகள், கோட் அச்சிடப்பட்டிருக்கும் திசையினைக் குறிக்கும். இதன் மூலம்தான் ஸ்கேன் செய்யும் போது, டேட்டா படிக்கப்படும்.

2. QR கோடை சுற்றியிருக்கும் இந்த வெற்றிடம், ஸ்கேனர் எளிதாக ஸ்கேன் செய்ய உதவுகிறது. சுற்றியிருக்கும் பரப்பில் இருந்து, QR கோட் அச்சிடப்பட்டிருக்கும் பரப்பை தனித்துக் காட்டவே இந்த வெற்றிடம்.

3. அதேபோல இந்த கோடை உற்றுப்பார்த்தால், சில புள்ளிகள் மட்டும் தனியாக, பெரிதாக மற்றவைகளிடம் இருந்து வித்தியாசமாகத் தெரியும். குறைவான டேட்டா உள்ள கோடில் ஒரு புள்ளியும், மிக அதிக டேட்டா உள்ள கோடில் அதிகமாகவும் இருக்கும். இதன் பயனும், ஸ்கேனர்  சரியான வரிசையில் தகவல்களைப் படிக்க செய்வதுதான். 

3. நீங்கள் QR கோடில் கொடுக்கும் தகவல்கள் கீழிருந்து மேலாக அடுத்தடுத்த வரிசைகளில் பதிந்து வைக்கப்படும். நீங்கள் அந்த கோடை ஸ்கேன் செய்யும் போது, அதே வரிசையில் ஸ்கேனர் உங்கள் கோடினைப் படிக்கும். நீங்கள் ஸ்கேன் செய்யும் டிவைசை எந்தக் கோணத்திலும் நீங்கள் வைத்திருக்கலாம். ஆனாலும் டேட்டா சரியான வரிசையில் படிக்கப்பட வேண்டும்; அதற்கு உதவி செய்பவைதான் இந்த சிறப்பு புள்ளிகள். இவை அந்த தகவல்களின் சரியான வடிவத்தை ஸ்கேனர்களுக்கு உணர்த்தும்.

4. இதுதவிர QR கோடில் இருக்கும் தகவலின் தன்மை, வெர்ஷன் மற்றும் மொத்த தகவல்கள் அனைத்தும் ஒரு QR கோடில் அடங்கியிருக்கும். இப்படி அனைத்து தகவல்களையும் கொண்டுதான், QR கோட் ஸ்கேனர்கள், கோட்-ஐ ஸ்கேன் ஸ்கேன் செய்யும். பிறகு அதில் இருக்கும் தகவல்களை உங்களுக்குக் காட்டும்.

5. ஒரு QR கோடில் சிறிய அளவில் சேதம் ஏற்பாட்டால் கூட, உங்கள் ஸ்கேனர்களால் தகவல்களை முழுமையாகப் பெற முடியும். அதேபோல கோடிற்குள் பதியப்படும் தகவல்களின் அளவைப் பொறுத்தே, அவற்றின் வடிவமைப்பும் இருக்கும். உதாரணமாக நான்கு எழுத்துக்கள் மட்டுமே உள்ள QR கோட் பார்க்க எளிமையாக இருக்கும். ஆனால் 20 எழுத்துக்கள் கொண்ட QR கோட் பார்க்க சிக்கல் நிறைந்ததாக இருக்கும். 

 

எப்படி QR கிரியேட் செய்வது?

இதுக்கு உரிய தகவல்கள் ஏராளமான இணையதளங்களில் கிடைக்கின்றன. அவற்றில் நீங்கள் இலவசமாகவே QR கோட்களை கிரியேட் செய்துகொள்ளவும், டவுன்லோட் செய்துகொள்ளவும்  முடியும். சில தளங்களில் நீங்கள் பணம் செலுத்துவதன் மூலமாக, உங்கள் நிறுவனங்களின் லோகோக்களை கூட QR கோடில் சேர்க்க முடியும். நம்மாழ்வாரின் நல்மொழிகள் அடங்கிய சில QR கோட்கள் கீழே, கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை ஸ்கேன் செய்து பாருங்களேன்!
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.