Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு- கிழக்கு பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்கள் ஆய்வு செய்யப்படும்- புத்ததாசன அமைச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sri-.jpg

வடக்கு- கிழக்கு பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்கள் ஆய்வு செய்யப்படும்- புத்ததாசன அமைச்சு

வடக்கு- கிழக்கு பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்கள் தொடர்பாக சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கையின் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த செயற்பாட்டை தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து  மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.கே.பி ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

அதாவது வடக்கு, கிழக்கிலுள்ள ஆலயங்களின் அமைவிடம், அதன் வரலாறு மற்றும் தற்போதைய நிலை என்பன இந்த ஆய்வின் ஊடாக ஆராயப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் குறித்த இடங்களில்  அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்கள் இடம்பெற்றிருந்தால், அவற்றை அகற்றுவதற்கு அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எம்.கே.பி ஹரிஸ்சந்திர கூறியுள்ளார்.

http://athavannews.com/வடக்கு-கிழக்கு-பகுதிகளி/

"அதாவது வடக்கு, கிழக்கிலுள்ள ஆலயங்களின் அமைவிடம், அதன் வரலாறு மற்றும் தற்போதைய நிலை என்பன இந்த ஆய்வின் ஊடாக ஆராயப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்"

இதென்ன நாசாவா? இல்லை நாசமாக்கும் ஆராய்ச்சி, முடிவுகளை எடுத்தது பின்னர் ஆராயும் ஆராய்ச்சி. புத்தம் இங்கே செழிப்பாக இருந்தது என உறுதிசெய்ய நடாத்தும் ஆராய்ச்சி நாடகம். 

  • கருத்துக்கள உறவுகள்

முப்படைகளையும் அங்கு அனுப்பியிருப்பது புத்தர் சிலைகளையும் அவர் தொடர்பான ஆவணங்களையும் அங்கு பல இடங்களிலும் புதைத்து வைப்பதற்காக இருக்கலாம்.😲

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு வரலாற்று இடங்களில் ஆய்வு நடத்தவுள்ள புத்தசாசன அமைச்சு

 

sri-lanka-emblem-300x198.jpgவடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வரலாற்று இடங்கள் குறித்த சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்தவுள்ளதாக, சிறிலங்காவின் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

பௌத்த சாசன மற்றும் கலாசார  விவகாரங்களுக்கான அமைச்சரின் உத்தரவுக்கு அமைய, தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து கூட்டாக இந்த ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாக, அமைச்சின் செயலர் எம்.கே.பி ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து ஆலயங்களின் அமைவிடம், வரலாறு, மற்றும் தற்போதைய நிலை என்பன இந்த ஆய்வின் ஊடாக ஆராயப்படவுள்ளது.

இவ்வாறான இடங்களில் ஏதாவது அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்கள் இடம்பெற்றிருந்தால், அவற்றை அகற்றுவதற்கு அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சின் செயலர் எம்.கே.பி ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2020/01/01/news/41763

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.