Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்ச் 1 முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் – கோட்டா உத்தரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Upcountry-Workers-1.jpg

மார்ச் 1 முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் – கோட்டா உத்தரவு!

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபாய் சம்பள உயர்வினை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அந்தவகையில் மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் தோட்டத்தொழிலார்கள் நாளாந்தம் 1000 ரூபையினை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் ஆதவன் செய்தி சேவைக்கு கிடைத்துள்ளன.

இதேவேளை தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தோட்டத் துறையின் அனைத்து பகுதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்யவும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

அத்தோடு தேயிலைத் தொழிற்துறையின் தரத்தையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள வரி விலக்கு உரமானியம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் அதில் உள்ளடங்குகின்றன.

எனவே இவை தோட்ட நிறுவங்களுக்கு மட்டுமே கிடைக்காமல் அவற்றினை தொழிலார்களுக்கும் கிடைக்கச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

இதேவேளை இன்று காலை தமிழ் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போது மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபாயினை ஐந்து வருடங்களுக்குள் பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழி வழங்கிருந்ததாகவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மார்ச்-1-முதல்-தோட்டத்-தொழ/

3 hours ago, தமிழ் சிறி said:

1000 ரூபாயினை ஐந்து வருடங்களுக்குள் பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழி வழங்கிருந்ததாகவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும்

ஆறுமுகம் தொண்டமான் போன்ற கழிசடை அரசியல்வாதிகள் மலையக மக்களின் தலைவர்களாக இருந்தால் சிங்கள-பௌத்த அரசியல்வாதிகள் இப்படித் தான் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

இலங்கையில் கடந்த 6 வருடங்களில் ஏற்பட்ட சம்பள அதிகரிப்புகளுக்கு ஏற்ப, பெருந்தோட்ட தொழிலாளர்கள் 2020 இல் நாளாந்த சம்பளமாக குறைந்தது ரூ 1200/- பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யவில்லை.
இவர் மூலமாவது இந்த எழைமக்களுக்கு கிடைத்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

gotaaathinknig.jpg

அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவா அமைய வேண்டும் என்ற தீர்மானத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதனுடன் இணைந்ததாக உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தோட்டத் துறையின் அனைத்து பகுதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

 

தேயிலை தொழிற்துறையின் தரத்தையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

தற்போது நடைமுறையில் உள்ள வரி விலக்கு, உர மானியம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் அதில் உள்ளடங்கும். இந்த நிவாரணங்கள் பெருந்தோட்ட கம்பனிகளுக்கே கிடைப்பதால் அதன் நன்மைகளை தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

உற்பத்தி மற்றும் கைத்தொழிற் துறை அடையும் முன்னேற்றத்துடன் இணைந்ததாக அதன் நன்மைகள் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/73238

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.