Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையானின் முதல் நியமனம்? சிறையில் இருந்து மகிந்தவுக்கு பறந்த செய்தி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானின் முதல் நியமனம்? சிறையில் இருந்து மகிந்தவுக்கு பறந்த செய்தி!

_23307_1579265039_2BA57705-AE32-4912-B84D-FAE41D579C0D.jpeg

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிபாரிசில் முதலாவது நியமனம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருக்கும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் தற்போதைய அரசாங்கத்தை சிறையில் இருந்து இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் பிள்ளையானின் முதல் நியமனமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமனம் அமைந்துள்ளது.

வெகு விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்பட உள்ள நிலையில்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக வருவதற்கு பலரது பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்த போதும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தனின் சிபாரிசில்  கலாமதி பத்மராஜா அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு அவர் நியமிக்கப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிபாரிசில் நடைபெற்ற முதலாவது அதி உயர் அரச நியமனம் இது என்பதுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அதிகாரம் இதனூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் என்பதுடன் அரச நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் அதிகரிக்கலாம் என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதை விட நாட்டின் கௌரவ ஜனாதிபதி அவர்கள் மோசடிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளை உயர் பதவிகளில் நியமிக்க மாட்டேன் என்று கூறியுள்ள நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் விசாரணை செய்யப்பட்டவர்களை அரசியல இலாபங்களுக்காக நியமிப்பாரா? என்ற கேள்வி எழுகிறது.

அதுவும் கொலைக் குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கும் ஒருவரது சிபாரிசில் மாவட்ட அரசாங்க அதிபர் ஒருவரை ஜனாதிபதி அவர்கள் நியமிக்கமாட்டார் என பொது ஜன பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எது எவ்வாறு இருப்பினும் தற்போதைய நிலவரப்படி மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருக்கும் பிள்ளையானிடம் இருந்து கட்சியின் செயலாளர் பிரசாந்தன் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவலின் படி கலாமதி பத்மராஜா அவர்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு அவரது பெயர் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

 

http://www.battinaatham.net/description.php?art=23307

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

நாட்டின் கௌரவ ஜனாதிபதி அவர்கள் மோசடிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளை உயர் பதவிகளில் நியமிக்க மாட்டேன் என்று கூறியுள்ள நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் விசாரணை செய்யப்பட்டவர்களை அரசியல இலாபங்களுக்காக நியமிப்பாரா?

 அதே ஜனாதிபதிதான்   கொலைக்குற்றச்சாட்டில் மரண தண்டனை பெற்றவருக்கு  விடுதலை கொடுத்திருக்கிறார். என செய்திகள் வருகின்றனவே? சவேந்திர சில்வா, கமல் குணரட்ண எல்லோரும் இந்த அரசாங்கத்தில் உயர் பதவிகளில் அங்கம் வகிக்கிறார்கள். அவர் ஏதோ விட்ட பகிடியை நம்பி சிலசனம் கேள்வி கேக்குது. அந்த ஜனாதிபதியே ஒரு கொலை, கொள்ளைக்காரன் என்று தெரியாமல்  அப்பாவித்தனமாய்கௌரவ ஜனாதிபதியாம். எல்லாம் காலம் செய்த சதி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

 அதே ஜனாதிபதிதான்   கொலைக்குற்றச்சாட்டில் மரண தண்டனை பெற்றவருக்கு  விடுதலை கொடுத்திருக்கிறார். என செய்திகள் வருகின்றனவே? சவேந்திர சில்வா, கமல் குணரட்ண எல்லோரும் இந்த அரசாங்கத்தில் உயர் பதவிகளில் அங்கம் வகிக்கிறார்கள். அவர் ஏதோ விட்ட பகிடியை நம்பி சிலசனம் கேள்வி கேக்குது. அந்த ஜனாதிபதியே ஒரு கொலை, கொள்ளைக்காரன் என்று தெரியாமல்  அப்பாவித்தனமாய்கௌரவ ஜனாதிபதியாம். எல்லாம் காலம் செய்த சதி.

கெளரவ என்ற சொல்தான் இப்ப அடிவாங்குகிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.