Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கினேஸ்வரன் இணைந்தால் த. தே. கூட்டமைப்பு பலமடையும்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் இணைந்தால் த.தே.கூட்டமைப்பு பலமடையும்: செல்வம்.!

TNA-C.V.Vickneshwaran.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மாறினால் அதில் இணையத் தயார் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பது நல்ல விடயமாகப்படுகிறது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவரை உள்வாங்கும் போது பலமான சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ரெலோவின் தலைமைக் குழுக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி எமது கட்சியின் 50ஆவது ஆண்டு விழாவை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். அன்றைய தினம் கட்சியின் செயலாளர் நாயகத்தை தெரிவிசெய்யும் முடிவையும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழீழ விடுதலை இயக்கத்தின் வேட்பாளர்கள் யார் என்பதையும் நாம் தெரிவிக்கவுள்ளோம். எமது கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை நாம் மீள அழைக்கப் போவதில்லை. அவர்களுக்கு எமது கட்சியில் இடமில்லை.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மாறினால் அதில் இணையத் தயார் என முன்னாள் முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து என்னைப் பொறுத்தவரை நல்ல விடயமாகப்படுகிறது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பேசி அப்படி ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்கான முயற்சியை செய்யலாமே தவிர இது ஒரு சாத்தியமான விடயம் என என்னால் கூறமுடியாது.

நாம் ஒற்றுமையாகச் செயற்பட்டு தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் வடக்கு கிழக்கிலே அதிக ஆசனங்களைப் பெற்று எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆணையை வலுவாகப் பெறமுடியும். எனவே அவரும் வெறும் பேச்சிலே கருத்துக்களைச் சொல்லக்கூடாது.

ஆனால் எமது மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று வாயளவிலே சொல்லுகின்ற யாருமே எமது மக்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. ஆகவே உளரீதியாக சிந்திக்கின்ற ஒவ்வொருவரும் இந்த விடயத்திலே ஒற்றுமை கொள்ளக்கூடிய வாய்ப்பை உருவாக்க வேண்டும். அவருடைய கூற்றினை நாம் சிந்திக்க வேண்டும். அவரை உள்வாங்கும் போது பலமான சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழும். அந்த முயற்சியை ரெலோ செய்யும்” என அவர் தெரிவித்தார்.

http://www.vanakkamlondon.com/selvam-19-01-2020/

தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இணைந்து செயற்படமுடியும்- சி.வி.!

c.v.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால், கொள்கை ரீதியாக அரசியல் பயணத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றமடையும் பட்சத்தில், மக்களின் நலன்கருதி பொது கொள்கையொன்றை முன்நிறுத்தி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் கலந்துரையாடுவதற்கு தான் தயாராகவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றமடையவுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோது அவ்வாறான திட்டம் இல்லை என அவர் பதிலளித்தார்.

http://www.vanakkamlondon.com/தலைமைத்துவத்தில்-மாற்றம/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.