Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியானந்தாவை கைதுசெய்ய இன்ரர்போல் ‘Blue Corner Notice’ வெளியீடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-720x447.jpg

நித்தியானந்தாவை கைதுசெய்ய இன்ரர்போல் ‘Blue Corner Notice’ வெளியீடு!

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை கைதுசெய்வதற்கு சர்வதேச விசாரணை அமைப்பான இன்ரர்போல் ப்ளூ கோர்னர் நோட்டீஸ் (Blue Corner notice) வெளியிட்டுள்ளது.

சாமியார் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், அவரைப் பிடிப்பதற்கு சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்ரர்போலிடம் உதவி பெறும் வகையில் குஜராத் மாநில பொலிஸார் குற்றவியல் விசாரணைத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதேசமயம், நித்தியானந்தாவைக் கண்டுபிடிக்க உயர் நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில்,  நித்தியானந்தாவுக்கு எதிராக புளூ கோர்னர் நோட்டீஸ் வழங்கக் கோரி டெல்லி  சி.பி.ஐ. மற்றும் இன்ரர்போல் அலுவலகத்திற்கு குஜராத் மாநில பொலிஸார் கடிதம் எழுதியிருந்தனர்.

குறித்த கடிதங்களை ஏற்றுக்கொண்ட இன்ரர்போல் ப்ளூ கோர்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நித்தியானந்தாவை-கைதுசெய/

  • கருத்துக்கள உறவுகள்

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZ

இன்ரர்போல் அளவுக்கெல்லாம் நா ஓர்த் இல்லடா .. வுடுங்கடா ..😢

  • கருத்துக்கள உறவுகள்

 

‘கைலாச நாட்டின் அதிபர்’ நித்தியானந்தாவுக்கு இண்டர்போல் நீல அறிக்கை!

 

ஜனவரி 22, 2020

nithyananda-courtesy-website-compressed_ ‘கைலாச’ நாட்டின் அதிபர் ‘சுவாமி’ நித்தியானந்தா

பாலியல் மற்றும் வயதுகுறைந்தோரை ஆசிரமத்தில் தடுத்துவைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக இந்தியாவிலிருந்து தப்பியோடிய ‘சுவாமி’ நித்தியானந்தா பற்றி மேலதிக விபரங்களைப் பெறும்பொருட்டு சர்வதேச காவற்துறை (இண்டர்போல்) ‘நீல அறிக்கை‘ (blue notice) பிறப்பித்துள்ளது.

Interpol-Blue-Notice.jpeg

ஒருவரது அடையாளம் நிரூபிக்கப்படவேண்டி இருப்பின், அல்லது அவர் பற்றிய மேலதிக விபரங்கள் தேவைப்படின் அல்லது ஒருவர் காணாமற் போயின் அவரைத் தேடுவதற்காக அல்லது ஒரு அடையாளம் காணப்படாத சர்வதேச குற்றவாளியை அடையாளம் காண்பதற்காக, சர்வதேச காவற்துறை இந் நீல அறிக்கைகளை (விளக்கம் கோரும் அறிக்கைகள்) விடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் அவர் அடையாளம் காணப்பட்டால் அவரை சம்பந்தப்பட்ட நாட்டுக்குக் கொண்டுவர அக் காவற்துறை முயற்சி செய்யும்.

குஜராத் மற்றும் கர்நாடகா காவற்துறையினர் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினருக்கு (CBI) விடுத்த கோரிக்கையின் பிரகாரம் அது அப் பொறுப்பை இம்டர்போலிடம் கையளித்திருந்தது.

அடுத்த நடவடிக்கையாக, நித்தியானந்தாவைக் கைது செய்யும் பொருட்டு ‘சிவப்பு அறிக்கையை’ வெளியிடும்படி இண்டர்போலிடம் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவிருப்பதாக குஜராத், கர்நாடக காவற்துரையினர் தெரிவித்துள்ளனர்.

அஹ்மெதாபாதத்திலிருந்த நித்தியானந்தாவின் ஆச்சிரமத்திலிருந்து இரு பெண்கள் காணாமற்போனமை தொடர்பாக குஜராத் காவற்துறை அவர் மீது வழக்குப்பதிந்திருந்தது. குழந்தைகளைக் கடத்தித் தனது ஆச்சிரமத்தில் வைத்து அவர்கள் மூளம் தன் பக்தர்களிடமிருந்து பணம் அறவிட்டார் எனவும் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குஜராத் காவற்துறை அவரை ஏற்கெனவே தேடிக்கொண்டிருந்த நிலையில், அவர் ஏகுவாடோர் நாட்டுக்கு அருகிலுள்ள ஒரு தீவில் ‘இந்து நாடொன்றை’ அமைத்துள்ளதாகவும் அதற்கு அவர் ‘கைலாச’ என்று பெயரிட்டு அதற்குத் தனியே ஒரு கொடி, அரசியல் கட்டமைப்பு ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளதாகவும் டிசம்பர் மாதமளவில் செய்திகள் வெளியாகியிருந்தன.

 

https://marumoli.com/கைலாச-நாட்டின்-அதிபர்-நி/?fbclid=IwAR359MFWz2__nOD1m_QdDaaQNpUW7uC2jM6INzydi14YbLgcw39uRwLbp_g

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.