Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு தேசத்தில் ஒரு தேசியக் கொடியின் கீழ் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை- ஸ்ரீதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேசத்தில் ஒரு தேசியக் கொடியின் கீழ் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை- ஸ்ரீதரன்

 

by : Litharsan

Sritharan-MP.jpg

ஒரு தேசத்தில், ஒரு தேசியக் கொடியின் கீழ் தமிழர்கள் இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை சிங்கள தலைமைகள் வெளிக்காட்டி விட்டன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதை அரசாங்கமே புறக்கணித்த செயற்பாட்டின் மூலமாக எமக்கான தேசம் இதுவல்ல என்பதும் எமக்கான தேசியக் கொடி இதுவல்ல என்ற உணர்வும் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இயற்றப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் இந்த நாட்டில் புறக்கணிகப்பட்ட மக்கள் என்பதை காட்டும் விதத்தில் சிங்கள தரப்பினர் பல்வேறு செயற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

யுத்தத்திற்கு முன்னரும் யுத்தக் காலகட்டத்திலும் யுத்தம் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்தும் கூட சிங்களத் தரப்புகள் தமது மனங்களில் இதனை கனமாக வைத்துக்கொண்டு பயணிக்கின்றனர்.

இந்த நாடு தமிழர்களுக்கு அல்ல என சிங்களத் தலைமைச் சக்திகளே கூறிக்கொண்டுள்ளன. அதன் ஒரு வெளிப்பாடே இப்போது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் விதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தமிழ் மொழி தேசிய கீத புறக்கணிப்பாகும்.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவிக்கின்றது என்பது தமிழர்கள் இன்னமும் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகவே அமைகின்றது.

ஒரு தேசம், ஒரு தேசிய கோடி என்ற ஒருமித்த உணர்வுகளை ஏற்படுத்த சிங்கள தலைமைகள் தயாராக இல்லை என்பதை அவர்கள் தெளிவாகக் கூறி வருகின்றனர்.

இந்த நாட்டினைப் புறக்கணிக்க தமிழர்கள் எந்த செயற்பாடுகளையும் செய்யவில்லை. ஆரம்பம் முதற்கொண்டு சிங்களத் தலைவர்களே இந்த நாட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற வகையில் சில செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது வருத்தமளிக்கக் கூடிய விடயமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/ஒரு-தேசத்தில்-ஒரு-தேசியக/

  • கருத்துக்கள உறவுகள்

 காலந்தாழ்த்தி என்றாலும்  இந்த உண்மையை கண்டுபிடிச்சு வெளியிட்ட ஸ்ரீதரனின் வீரம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. 

3 hours ago, satan said:

 காலந்தாழ்த்தி என்றாலும்  இந்த உண்மையை கண்டுபிடிச்சு வெளியிட்ட ஸ்ரீதரனின் வீரம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. 

சிறீதரன் வந்த புதுசுல கொஞ்ச வீரம் காட்டினார்.

பிறகு சுமந்திரனின் வழியில் காசை வாங்கி பொக்கற்றுக்குள்ள போட்டு வாயை மூடினார். வாக்களிச்ச மக்களையும் திரும்பி பாக்கேல்லை.

தன்ர ஆசிரிய நண்பர்களின் பாலியல் துஸ்பிரயோகங்களை மறைப்பதே தனது கடன் என்றிருந்தார்.

இப்ப எலெக்சன் வாறதாலையோ என்னவோ இப்பிடி வீரம் காட்டிப் பார்க்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.