Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பனை அபிவிருத்தி சபை தலைவராக சிங்களர் நியமனம் .!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகார சபைக்கு தலைவராக ஒரு சிங்களவர் நியமனம்.

panai-palmyrah-kaithady_1080.jpg

யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகாரசபை தலைவராக வியாங்கொடையை சேர்ந்த சிங்களவர் ஒருவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிரிசாந் - பத்திராஜ என்னும் பெரும்பான்மை சிங்கள இனத்தவரே கடந்த மாதம் பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பனை அபிவிருத்திச் சபைக்கு ஆட்சி மாற்றங்களின் போது பலர் மாற்றப்பட்டாலும் தொடர்ச்சியாக தமிழர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சபைக்கான தலைவர் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும் சபை அங்கத்தவர்கள் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.

இதேநேரம் வடக்கில் உள்ள சபைகள் நிறுவனங்கள் வரிசையில் காங்கேசன்துறை சீமொந்து கூட்டுத்தாபனத்திற்கும் சிங்களவர் ஒருவரே நியமிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://jaffnazone.com/news/15691

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகார சபைக்கு தலைவராக ஒரு சிங்களவர் நியமனம்.

panai-palmyrah-kaithady_1080.jpg

யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகாரசபை தலைவராக வியாங்கொடையை சேர்ந்த சிங்களவர் ஒருவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிரிசாந் - பத்திராஜ என்னும் பெரும்பான்மை சிங்கள இனத்தவரே கடந்த மாதம் பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பனை அபிவிருத்திச் சபைக்கு ஆட்சி மாற்றங்களின் போது பலர் மாற்றப்பட்டாலும் தொடர்ச்சியாக தமிழர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சபைக்கான தலைவர் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும் சபை அங்கத்தவர்கள் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.

இதேநேரம் வடக்கில் உள்ள சபைகள் நிறுவனங்கள் வரிசையில் காங்கேசன்துறை சீமொந்து கூட்டுத்தாபனத்திற்கும் சிங்களவர் ஒருவரே நியமிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://jaffnazone.com/news/15691

இதுவரை தலைவர்களாக இருந்த தமிழர்கள் செய்த சாதனைகளை பட்டிலிடுங்கள், அதன் அடிப்படையில் மீண்டும் தமிழர்களை நியமிப்பதனால் விளையும் நன்மைகள் பற்றி சிந்திக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிங்களவருக்கு பனையின் பயன்பாடுகள், உற்பத்திகள் எவ்வாறு அவற்றை பாதுகாப்பது என்கிற அறிவு, அனுபவம் உண்டா? மத்தியிலிருந்து தமிழருக்கு செய்த நன்மைகள் போதாதென்று நம் மத்தியில் இருந்து நேரடியாக உதவ நினைத்து விட்டது அரசு. எல்லாம் நமது தலைகளின் கையறு நிலையை எடுத்துகாட்டுது.இருந்தும்  வெட்டினோம், விழுத்தினோம் பொறுக்க யாரும் வரவில்லை என்று பேட்டி குடுப்பினை. ஒரு எதிர்ப்பாவது வெளியிடுகிறானுகளா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

இந்த சிங்களவருக்கு பனையின் பயன்பாடுகள், உற்பத்திகள் எவ்வாறு அவற்றை பாதுகாப்பது என்கிற அறிவு, அனுபவம் உண்டா?

இந்த சிங்களவருக்கு பனையின் பயன்பாடுகள், உற்பத்திகள் எவ்வாறு அவற்றை பாதுகாப்பது என்கிற அறிவு, அனுபவம் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். அவரின் பெயர் யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகாரசபை இணையத்தளத்தில் இன்னமும் பதியப்படவில்லை. ஏனைய அங்கத்தவர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்கள், தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரிகள் தரப்பட்டுள்ளன. உங்கள் சந்தேகத்தை அவர்களிடம் கேட்டு தெளிவு பெற, யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகாரசபையின் அங்கத்தவருடனான தொடர்புகளுக்கான இணையத்தளம் கீழே தரப்படுகிறது.

http://pdb.gov.lk/key-officials-of-pdb/

Edited by கற்பகதரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.