Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் இயக்கத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் அங்கம் வகிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Featured Replies

புலிகள் இயக்கத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் அங்கம் வகிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனித்து தமிழர்களின் அமைப்பு என்று இன்று கூறிவிட முடியாது. அதில் சிங்களவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

நாட்டில் இன்று கடத்தல் சம்பவங்கள் படிப்படியாகக் குறைந்துள்ளன. இதில் பல்வேறு குழுக்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம். அவர்களை இனங்கண்டு கைது செய்வோம் என்றும் அவர் சொன்னார். அலரிமாளிகையில் நேற்று தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்து நாட்டின் நிலைவரம் குறித்து கலந்துரையாடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

பத்திரிகை ஆசிரியர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய ஜனாதிபதி மேலும் கூறுகையில்,கடத்தல்கள் இன்று குறைந்துள்ளன. இது சம்பந்தமாக தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணத்தில் 4 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து நான் பாதுகாப்பு கவுன்ஸிலின் அறிக்கையை கேட்டுள்ளேன். அவர்கள் இன்று (நேற்று) தருவார்கள்.

பலர் கடத்தப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. வெளிநாடு செல்ல விஸா பெறவும் இவ்வாறு சிலர் கூறுகின்றனர். கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு பகுதியினர், தற்பொழுது வெளிநாட்டுக்கு சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

எனவே கடத்தல்கள் குறித்து, ஆதாரபூர்வமாக, தக்க சாட்சியங்களுடன் எமக்கு நிரூபித்தால் நாம் அவர்களை கைது செய்யத் தயாராக இருக்கின்றோம். வெள்ளைவானில் வந்து முகமூடி அணிந்தவர்களே கடத்திச் சென்றதாக பலரும் கூறுகின்றனர். ஆனால் இதனை ஆராய்ந்து பார்த்தபொழுது அவற்றில் பல தவறான ஆதாரமற்ற தகவல்கள் என்று தெரிய வந்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் பஸ் வண்டி ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் எவரையும் கைதுசெய்தால், மாணவர்களின் உரிமை மீறப்பட்டுள்ளதாக இங்கு கூறப்படுகின்றது. சட்டவிரோத நடவடிக்கைகளில் எவரையும் கைது செய்யும் உரிமை பொலிஸாருக்கு உண்டு. அந்த வகையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனை நான் மறுக்கவில்லை. உலகில் இது எங்கும் இடம்பெறுவது வழக்கமாகும் என்றார்.

http://www.tamilwin.com/

இதை கேட்டு சிரிப்பதா அழுவதா என தெரியல இப்படி சின்னப்பிள்ளைதனமான கருத்துகளை கொண்ட அரசியல் வங்குரோத்துகாரரை ஜனாதிபதியாக தெரிந்த சிங்களவர் தலையில் அடிச்சு அழுவீனம் மிக விரைவில்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் அங்கம் வகிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனித்து தமிழர்களின் அமைப்பு என்று இன்று கூறிவிட முடியாது.

நல்ல கதை. நீளம் சற்று குறைவாக உள்ளதாகவே நான் நினைக்கிறேன்.

மகிந்தவுக்கு நல்லா முளை குழம்பிப்போச்சு இதை இப்பிடியே விட்டா கொஞ்ச நாள்ள சொல்லுவான் புலிகளின்ர தலைவர்

பிரபாகரன் இல்லை பிரபாகரனய

தமிழ்ச்செல்வன் - தெமழசெல்வன்ய

எண்டு உண்மையைச் சொன்னாலும் குறைவிளங்க முடியாது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி அவர்களுக்கும் எம் கதிதான்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.