Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த மாதத்திற்குள் பாராளுமன்றம் கலைக்கப்படும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதத்திற்குள் பாராளுமன்றம் கலைக்கப்படும்?

இந்த மாதத்திற்குள் பாராளுமன்றம் கலைக்கப்படும்?

பாராளுமன்றத்தை இந்த மாதத்திற்குள்ளே கலைப்பதற்கு ஆராயப்பட்டு வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் நிலையில் அதற்கு முன்னர் இந்த மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் யோசனையொன்றை கொண்டு வந்து அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றி பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதற்கு ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மார்ச் மாதத்தில் கலைத்தால் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் ஏப்ரல் இறுதியிலேயே தேர்தலை நடத்த முடியுமாக இருக்கும் ஆனால் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னரே தேர்தலை நடத்தக் கூடியவகையிலேயே முன் கூட்டியே பாராளுமன்றத்தை கலைக்க எதிர்பார்ப்பதாக கூறப்படுகின்றது.
இதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் பூரண ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு இரகிய பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. -(3)
 

http://www.samakalam.com/செய்திகள்/இந்த-மாதத்திற்குள்-பாராள/

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்ட அடிப்படையில் ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும்

திட்டமிட்ட அடிப்படையில் ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும்

 

பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில், ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2 ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

முன்கூட்டியே பாராளுமன்றத்தைக் கலைத்து - தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் அரசாங்கத்தின் யோசனைக்கு ஆதரவு வழங்கமாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே எஸ்.பி. திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

கொத்மலையில் இன்று இடம்பெற்ற நடமாடும் சேவை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, பாராளுமன்றத்தை வெகு விரைவில் கலைத்து தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் யோசனை அரச தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியமாகும். இதன்படி எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கினால் புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்தலாம்.

இதற்கு சஜித் தரப்பு ஆதரவை வழங்காவிட்டாலும் எமக்கு எவ்வித பிரச்சினை இல்லை. ஏனெனில் திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்." என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியின் போது இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வாகன இறக்குமதி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

" நான் வாகனம் கொள்வனவு செய்யவில்லை. அமைச்சில் இருந்த வாகனத்தையே பாவனைக்கு எடுத்துள்ளேன்.

வாகனம் வாங்குவதற்கு கையொப்பமிடு (சைன்) இல்லையேல் பதவி விலகு ´ரிசைன்´ என அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்தார் என ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக இருந்த போபகே அறிவித்துள்ளார்.

இவ்வாறுதான் எவ்வித திட்டமிடலும் இல்லாமல், கையில் நிதி இல்லாதபோதிலும், நாலா புறங்களிலும் கடன்பட்டாவது வாகனங்களை கொள்வனவு செய்துள்ளனர்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுக்கு மட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சொகுசு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவே ரணில் இவ்வாறு செய்துள்ளார். ஆனால், அன்று இருந்ததைவிடவும் இன்று அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. ஏனெனில் அவரின் பிறவி பலன் அப்படி அமைந்துள்ளது." என்றார்.
 

-மலையக நிருபர் கிரிஷாந்தன்-

http://tamil.adaderana.lk/news.php?nid=125549

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.