Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும் மின்சார கட்டணங்களை அதிகரிக்க போவதில்லை : மின்சக்தி எரிசக்தி அமைச்சர் 

Featured Replies

எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும் மின்சார கட்டணங்களை அதிகரிக்க போவதில்லை என தெரிவித்த மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர , தீடீர் மின் வெட்டுக்கு ஒரு போதும் இனி இடமளிக்க போவதில்லையென தெரிவித்தார்.

இந்திய சக்தி வளர்ச்சி மன்றத்தின் மூன்றாவது கூட்டம் இன்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றிருந்தது அதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

புதுப்பிக்க கூடிய சக்தி மூலங்கள் மூலம் இலங்கைக்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக சூரிய சக்தி மூலத்தை பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

2030 ஆம் ஆண்டு பகுதியில் இலங்கை மொத்த மின்சாரத்தில் 70 வீதத்தினை புதுப்பிக்க கூடியமின்சக்தி உற்பத்தி செய்ய முடியும். இந்த முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதையாகி வழங்கியுள்ளது.இதன் மூலம் அதிகளவான மின்சாரத்தினை தேசிய மின்னோட்டத்துடன் இணைக்க கூடியதாக இருக்கும்.

2023 ஆம் ஆண்டில் நஷ்டத்தில் இருக்கும் இலங்கை மின்சார சபையினை இலாபம் பெரும் ஒரு நிறுவனமாக மாற்ற முடியும். இதன் மூலம் திடீரென ஏற்படும் மின்வெட்டு ஒரு போதும் இடம்பெறாது என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/75575

இலங்கை சூரிய சக்தி திட்டத்திற்கு இந்தியா 100 மில்லியன் டொலர் ஏற்கனவே வழங்கியுள்ளது :  இந்திய பதில் உயர் ஸ்தானிகர் 

புதுப்பிக்கத்தக்க சக்தி துறையில் இந்தியாவின் அண்மைய முன்னேற்றங்கள் பற்றி குறிப்பிட்ட இந்திய பதில் உயர் ஸ்தானிகர்,சக்தி மாற்றீடுகள் 'கிடைக்கக்கூடியதாகவும்,மலிவானதாகவும் மற்றும் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும் எனத்தெரிவித்தார்.

இந்தியாவின் பதில் உயர் ஸ்தானிகர் திரு வினோத் கே. ஜேக்கப்புதுப்பிக்கத்தக்க சக்தி துறையில் இந்தியா அடைந்த முக்கிய மைல்கற்கள் குறித்து உரையாற்றினார். புதுப்பிக்கத்தக்க சக்தி அபிவிருத்தி மன்றத்தின் - இலங்கை பீடத்தின் மூன்றாவது அமர்வு நேற்று வியாழக்கிழமை தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


இந்திய துணை உயர் ஸ்தானிகர்,
2020 ஆம் ஆண்டில் இந்தியா 100புறு புதுப்பிக்கத்தக்க சக்தி திறன் குறியீட்டைக் தாண்டுவதற்கு தயாராக உள்ளது.

அத்துடன் 2022 ஆம் ஆண்டளவில் 175புறு தூய்மையான எரிசக்தி இலக்கை அடைவதை நோக்கி பயணிக்கிறது என்றும் பதில் உயர் ஸ்தானிகர் ஜேக்கப் குறிப்பிட்டார். இந்தியா, அண்மையில் உலகின் மிகப் பெரிய சூரிய மின்கல பூங்காவை கர்நாடகாவில் ஸ்தாபித்துள்ளது.

பசுமை சக்தி மூலங்களுக்கான உறுதிப்பாட்டை காண்பிக்கும் வகையில், 2020-21 ஆம் ஆண்டில் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறைக்கு இந்திய அரசு தனது புதிய வரவு செலவுத்திட்டத்தில் 3.1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது.

சர்வதேச சூரியமின்கல அமைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்கவைகளில் கவனம் செலுத்தும் பல முக்கியமான முன்னெடுப்புக்களில் இலங்கையும் இந்தியாவும் ஸ்தாபக உறுப்பினர்களாக இருப்பதையிட்டு பதில் உயர் ஸ்தானிகர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கையில் சூரியமின்கல திட்டங்களை மேற்கொள்வதற்காக இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகை நிதியையும் வழங்கியுள்ளது என்பதை அவர் இதன்போது நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/75587

தேர்தல் முடியும் வரை அதிகரிக்க மாடீர்கள் என்று எங்களுக்கு தெரியும்।

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு வாங்கு மட்டும். வாங்கி ஆட்சி வலுவடைந்ததும்.. எல்லாம் அதிகரிக்கும். 

வழமை போல் வாக்குப் போட்டு சொறீலங்கா மக்கள் ஏமாந்து நிற்கவும். உலகெங்கும் கடன் வாங்கி குடும்பம் நடத்தவும். இதில சிங்கப்பூர் கனவு வேற. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.