Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் சுற்றிலேயே சானியா தோல்வி

Featured Replies

மொராக்கோ ஓப்பன் டெனிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஆர்ஜென்டீனா வீராங்கனையிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார்.

மொராக்கோவில் சர்வதேச பெண்கள் ஓப்பன் டெனிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 51 ஆவது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 213 ஆவது இடத்தில் உள்ள ஆர்ஜென்டீனா வீராங்கனை எமிலியா மா சாலெர்னியை எதிர்கொண்டார்.

காயம் காரணமாக 2 மாதத்துக்கு மேலாக ஓய்விலிருந்து களம் திரும்பிய சானியாவால் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முன்னேறிய ஆர்ஜென்டீனா வீராங்கனைக்கு முதல் செட்டில் ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. ஆனால், 2 ஆவது மற்றும் கடைசி செட்டில் சானியா நெருக்கடி கொடுத்தார். ஆனால், அது ஆர்ஜென்டீனா வீராங்கனையின் வெற்றியை தடுத்து நிறுத்த உதவவில்லை.

முடிவில் சானியா மிர்சா 2- 6, 5- 7 என்ற நேர் செட்டில் எமிலியா மா சாலெர்னியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

சானியாவுக்கு போட்டி தரவரிசையில் முதலிடம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தோல்வி குறித்து சானியா மிர்சா கூறியதாவது;

"இந்தத் தோல்வி எனக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ அதனை என்னால் செயற்படுத்த முடியவில்லை. போதிய பயிற்சி இல்லாததால் காயத்துக்கு முன்பு செயற்பட்டது போல் தற்போது செயற்பட முடியவில்லை.

சிறப்பாக ஆட முடியாது என்பது எனக்குத் தெரியும். நான் நினைத்த நிலைக்கு ஏற்ப என்னால் அதனை நெருங்க முடியவில்லை. 2 ஆவது செட்டில் நான் சிறப்பாக ஆடினேன். போதிய பயிற்சி இல்லாவிட்டால் இது போன்று நடக்கத்தான் செய்யும். காயத்துக்கு பின் களம் திரும்புகையில் விளையாட்டு வீரர்களுக்கு இது போன்று நடப்பது சகஜம் தான். காயத்திலிருந்து மீண்டு வந்து ஆடிய இந்த போட்டியின் போது காலில் எந்த வித பிரச்சினையும் ஏற்படாதது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்து துருக்கி மற்றும் பிரெஞ்ச் ஓப்பன் போட்டிகளில் விளையாடவுள்ளேன். எனவே, எனது ஆட்டத்திறனை உயர்த்த வேண்டியுள்ளது. எனது சிறந்த ஆட்டத்தை விரைவில் பெறுவேன்" என்றார்.

--Thinakkural.com--

சானியா சிறந்த ஆட்டக்காரராக உயர்ந்தது உண்மை.

ஆனால் பலர் அவரது ஆட்டத்தைவிட ஆளை இரசிப்பதால், டெனிஸில் இருக்கும் ஆர்வத்தை விட தனது அழகை அபிவிருத்தி செய்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார் போலும். :o

அவாவுக்கு பதிலா நானும் வானவில்லும் போய் ஆடுகிறோம்

:P

  • தொடங்கியவர்

அவாவுக்கு பதிலா நானும் வானவில்லும் போய் ஆடுகிறோம்

:P

மகேஸ்..பூபதி இரட்டயர் இருக்காங்கோ :o

மகேஸ்..பூபதி இரட்டயர் இருக்காங்கோ :rolleyes:

யார் அவை

:o

ஒரு கிராண்ட்சலாம் போட்டியில் கூட இறுதியாட்டம் வரை அவர் போனதேயில்லை ஒரு சில ஆட்டங்களில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றவரை தலையில் தூக்கி வைத்து ஆடி அவரது திறனை மழுங்கடித்து விட்டார்கள், இஅவ்ரும் இந்திய கிரிக்கட் வீரர்களைப்போல்தான் விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்துகிறார் பின்னர் எப்படி போட்டியில் கவனத்தை திசை திருப்ப முடியும். இந்திய மக்களும் ஊடகங்களும் நிறுவனங்களும் திருந்தும் மட்டும் இந்தியாவில் விளையாட்டு வீரர்கள் திருந்த மாட்டார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.