Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாத்ரூம் ஓட்டை வழியாக.. மாணவிகளை வீடியோ எடுத்த உதவி பேராசிரியர்.. சென்னை ஐஐடியில் கருமம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மடக்கி பிடித்தனர்

பாத்ரூம் ஓட்டை வழியாக.. மாணவிகளை வீடியோ எடுத்த உதவி பேராசிரியர்.. சென்னை ஐஐடியில் கருமம்!

பாத்ரூம் பைப் ஓட்டை வழியாக மாணவிகளை படம் பிடித்துள்ளர் உதவி பேராசிரியர்.. இந்தியாவிலேயே சிறந்த பல்கலை. என பெயர் வாங்கும் சென்னை ஐஐடியில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவி அவர்.. பிஎச்டி படித்து வருகிறார்... விண்வெளி பொறியியல் துறை தொடர்பான பயிற்சிக்காக சென்னை ஐஐடி-யில் சேர்ந்துள்ளார். இதே துறையில் சுபம் பேனர்ஜீ என்பவர் திட்ட அலுவலராக வேலை பார்க்கிறார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதியம் தனது டிபார்ட்மென்ட் அருகே உள்ள பாத்ரூமுக்கு சென்றார் மாணவி.

பிறகு யதேச்சையாக அங்கிருந்த சுவற்றை பார்த்தார்.. அப்போதுதான் அதில் சின்ன ஓட்டை இருப்பதை பார்த்தார். அந்த துளைக்குள் மாணவி எட்டி பார்த்தபோது, ஒருவர் அங்கிருந்து வேகமாக நழுவி செல்வதை கவனித்தார்... உடனே பாத்ரூமை விட்டு வெளியே வந்தவர், அந்த நபரின் பின்னாடியே ஓடினார்.. அவரை மடக்கி பிடித்தார்... "லேடீஸ் பாத்ரூமில் உங்களுக்கு என்ன வேலை? இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க" என்றார்.

உடனே அந்த நபர்.. "நான் இந்த பக்கமா வந்துட்டு இருந்தேன்" என்று நழுவியபடி பதில் சொன்னார். ஆனாலும் மாணவிக்கு ஏதோ தப்பாகவே பட்டது.. உடனே அவரிடம் இருந்த செல்போனை லபக்கென பிடுங்கி பார்த்தார்... அதில் எதுவுமே பதிவாகவில்லை.. ஆனாலும் பாத்ரூம் பைப் ஓட்டை வழியாக அந்த செல்போன் இருந்ததை பார்த்ததாக உறுதியாக நம்பினார்.
 

சக நண்பர்களிடம் இதை பற்றி மாணவி எடுத்து சொன்னார்.. உடனடியாக கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தரப்படவும், அவர்களும் விரைந்து வந்தனர்... சம்பந்தப்பட்ட சுபம் பேனர்ஜீயை விசாரித்தனர்.. அப்போதுதான் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார்.. சுபம் பேனர்ஜீ மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்.. ஏரோஸ்பேஸ் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவ்வளவு நாள், பாத்ரூமில் உள்ள தண்ணீர் செல்லும் பைப்புகள் நடுவில் உள்ள ஓட்டையின் வழியாக செல்போனை வைத்து, பெண்களை வீடியோ எடுத்து வந்துள்ளார் என்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் அவரது செல்போனை மீண்டும் போலீசார் சோதனை செய்தபோது, அதில் வீடியோ ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஒருவேளை ஆதாரங்களை அதற்குள் அழித்திருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார், தடயவியல் ஆய்வகத்துக்கு அந்த செல்போனை அனுப்பி வைத்துள்ளனர். இப்போது உதவி பேராசிரியர் புழல் ஜெயிலில் உள்ளார்.

இன்னும் பாத்திமா மரணத்துக்கே எந்த நீதியும் இதுவரை கிடைக்காத நிலையில், அடுத்த பகீர் இதே ஐஐடியில் மீண்டும் கிளம்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/madras-iit-asst-professor-arrested-for-taking-videos-of-girl-students/articlecontent-pf437068-377654.html

  • கருத்துக்கள உறவுகள்

போலீஸ் அடிக்கும் என்ற பயத்தில் கூட அவர் இப்படி 
கூறி இருக்கலாம் .......... இத்தால் நாம் சொல்ல வருவது யாதெனில் 

செய்தி மிகவும் ஆதாரம் அற்று இருக்கிறது 
என்பதை சொல்ல விழைந்துள்ளோம் அஃதே 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2020 at 9:49 PM, Maruthankerny said:

போலீஸ் அடிக்கும் என்ற பயத்தில் கூட அவர் இப்படி 
கூறி இருக்கலாம் .......... இத்தால் நாம் சொல்ல வருவது யாதெனில் 

செய்தி மிகவும் ஆதாரம் அற்று இருக்கிறது 
என்பதை சொல்ல விழைந்துள்ளோம் அஃதே 

மாணவி சந்தேகப்பட்டதில் பாதி உண்மை இருக்கலாம். அந்தரங்கத்துக்கு பக்கம் ஏற்படுவதை அறியும் ஏழாம் உணர்வு  பெண்களுக்கு இருப்பதாக எனக்கு ஒரு அபிப்பிராயம் உண்டு. ஆனால் இந்த பேராசிரியர் செல் போனில் படம் எடுக்காமல் கண்ணால் பார்த்து மூளையில் பதித்திருப்பார். பொலிஸுக்கும் இவரில் சந்தேகம் வந்திருக்க வேண்டும், உருட்டி இருப்பார்கள். இவர் செல்போனில் எடுத்தார் என்று பொலிஸ் மிரட்ட ஆதாரம் இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்ட பேராசிரியரும் நீங்கள் சொல்வது படியே ஆகட்டும் என்றிருப்பார். ஆதாரம் இல்லாத நிலையில் பொலிஸ் பொய் வழக்கு போட்டதாகவும் மிரட்டி வாக்குமூலம் பெற்றதாகவும், மாணவி பேராசிரியர் மேல் பொய் குற்றச்சாட்டு சுமத்தி பேராசிரியருக்கும் பல்கலைக்கழகத்துக்கும் அவதூறு ஏற்படுத்தியதாகவும், இதனால் மாணவியும் பொலிஸும் பேராசிரியருக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் முடியும் சாத்தியம் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.