Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெடிவிபத்தில் நான்கு போராளிகள் வீரச்சாவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 20-05-2007 01:26 மணி தமிழீழம் [பதிவு நிருபர்]

வெடிவிபத்தில் நான்கு போராளிகள் வீரச்சாவு

கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை எதிர்பாராதமாக விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில், நான்கு போராளிகள் வீரச்சாவை தழுவியிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

லெப்.கேணல் மறவன், மேஜர் பிரியன் அல்லது காவியன், மேஜர் அன்பரசி, கப்டன் அருந்தா ஆகிய நான்கு போராளிகளே, வெடிவிபத்தில் வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளனர்.

இதனிடையே கடந்த மாதம் 23ஆம் நாளன்று, வடமராட்சி கடற்பரப்பில் நீரில் மூழ்கி, கப்டன் வதனன் என்றழைக்கப்படும், கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த, தெய்வேந்திரன் ஞானரதன் என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.

மன்னார், வவுனியா பாலமோட்டை ஆகிய களமுனைகளில், கடந்த 16ஆம், 17ஆம், 18ஆம் நாட்களில், சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதல்களில் களப்பலியாகிய எட்டுப் போராளிகளின் விபரங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மன்னார் களமுனையில் நிகழ்ந்த மோதல்களில், 2ஆம் லெப்ரினன்ட் முல்லைச்செல்வன் என்ற போராளியும், வவுனியா பாலமோட்டை களமுனையில் இடம்பெற்ற மோதலில், வீரவேங்கை தூயமணி என்ற போராளியும் களப்பலியாகியுள்ளனர்.

கடந்த 17ஆம் நாளன்று வவுனியா பாலமோட்டை களமுனையில் நிகழ்ந்த மோதல்களில், லெப்ரினன்ட் கிசோக்குமார், 2ஆம் லெப்ரினன்ட் நடராஜா, 2ஆம் லெப்ரினன்ட் பு~;பசீலன், 2ஆம் லெப்ரினன்ட் கணேசலிங்கம், 2ஆம் லெப்ரினன்ட் ஜோசப் பெற்றா ஆகிய நான்கு தமிழீழ தேசிய துணைப்படை வீரர்களும் களப்பலியாகியுள்ளனர்.

அதே களமுனையில், கடந்த 16ஆம் நாளன்று இடம்பெற்ற மோதல்களில், 2ஆம் லெப்ரினன்ட் ராஜகோபால் என்ற தமிழீழ தேசிய துணைப்படை வீரர் களப்பலியாகியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 11ஆம் நாளன்று, மட்டக்களப்பு உன்னிச்சையில் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற நேரடி மோதலில், கப்டன் சுரேஸ் என்றழைக்கப்படும், மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த, விஸ்வநாதன் கலைச்செல்வன் என்ற போராளி களப்பலியாகியுள்ளார்.

கிளாலி களமுனையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படைகளுக்கும் மத்தியில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

2ஆம் லெப்ரினன்ட் தமிழ்வேந்தன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சொந்த இடமாகக் கொண்டிருந்த, விக்னேஸ்வரன் திலகதாஸ் என்ற போராளியே களப்பலியாகியுள்ளார்.

வவுனியா வடமேற்கு பாலமோட்டை களமுனையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படைகளுக்கும் மத்தியில், இரண்டாவது நாளாக நேரடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

முன்னரங்க எல்லைக் கோட்டில், இரு தரப்பினருக்கும் மத்தியில் துப்பாக்கி மோதல்களும், எறிகணை வீச்சுக்களும் நிகழ்ந்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை பாலமோட்டை களமுனையில் இடம்பெற்ற மோதல்களில், மூன்று தமிழீழ தேசிய துணைப் படை வீரர்கள் களப்பலியாகியுள்ளனர்.

கப்டன் தேவராசா என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சொந்த இடமாகவும், மல்லாவி யோகபுரத்தை பிந்திய முகவரியாகவும் கொண்டிருந்த குணரட்ணம் தேவராசா, லெப்ரினன்ட் ஜெயந்தன் என்றழைக்கப்படும், மாங்குளம் பெரிய புளியங்குளத்தை சொந்த இடமாகக் கொண்டிருந்த சிதம்பரப்பிள்ளை ஜெயந்தன், லெப்ரினன்ட் சிவநேசன் என்றழைக்கப்படும், மட்டக்களப்பு மாவட்டத்தை சொந்த இடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தை பிந்திய முகவரியாகவும் கொண்டிருந்த, பொன்னையா சிவநேசன் ஆகிய தமிழீழ தேசிய துணைப்படை வீரர்களே, களப்பலியாகியுள்ளனர்.

இதனிடையே, கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற நேரடி மோதல்களில், அதே இடத்தை சேர்ந்த லெப்ரினன்ட் குமார் என்றழைக்கப்படும், பிள்ளையான் சிவகுமார் என்ற போராளி களப்பலியாகியுள்ளார்.

வடமராட்சி கடற்பரப்பில் கடந்த மாதம் 23ஆம் நாளன்று, நீரில் மூழ்கி, போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

கப்டன் இளங்கோ என்றழைக்கப்படும், கிளிநொச்சி உதயநகர் மேற்கை சேர்ந்த, பாலசிங்கம் முகுந்தன் என்ற போராளியே, வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளார்.

இதனிடையே கடந்த ஆண்டு ஜுலை மாதம் 3ஆம் நாளன்று, மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடிப் பகுதியில், சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடம் இடம்பெற்ற நேரடி மோதல்களில், லெப்ரினன்ட் சீலன் என்றழைக்கப்படும், அம்பாறை மாவட்டத்தை சொந்த இடமாகவும், மாங்குளம் மன்னங்குளத்தை பிந்திய முகவரியாகவும் கொண்டிருந்த, நல்லரத்தினம் சிவகுமார் என்ற தமிழீழ தேசிய துணைப்படை போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாவீரர்கட்கு சிரம் தாழ்த்தி வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனத்தின் விடிவே தங்களது இறுதி மூச்சாகக் கொண்டு களமாடி வீரமரணமடைந்த எம் மைந்தர்களுக்கு எனது வீரவணக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.