Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
கருத்துக்களம் கருத்துக்களம்
கருத்துக்களம்
  1. Home
  2. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
  3. விளையாட்டுத் திடல்
  4. பழுப்பு வர்ணங்களின் சமர் சமநிலையில் நிறைவு
  • All Activity
கருத்துக்களம் கருத்துக்களம்
கருத்துக்களம்
    • Forums
    • Gallery
    • Blogs
    • Events
    • All Activity
    • My Activity Streams
      • stream_title_14
      • stream_title_13
    • வாசிக்காதவை
    • நான் தொடங்கியவை
    • Search
  • முகப்பு
  • Leaderboard
  • Clubs
    • முகப்பு
    • Leaderboard
    • Clubs
    • Sign In

      • Not recommended on shared computers
      • Forgot your password?

      Or sign in with...

    • இங்கு இணைந்து கொள்ள
    1. Home
    2. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    3. விளையாட்டுத் திடல்
    4. பழுப்பு வர்ணங்களின் சமர் சமநிலையில் நிறைவு
    • All Activity
    • yarl 28
    • yarl 28
    • yarl 28

    பழுப்பு வர்ணங்களின் சமர் சமநிலையில் நிறைவு

    nunavilan
    nunavilan
    March 9, 20206 yr in விளையாட்டுத் திடல்

    Featured Replies

    nunavilan Grand Master

    nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    • 53k posts
    • 1 Solutions
    • 10 Badges
    • 6.3k Reputation
    • Gender:Male
    • Location:USA
    nunavilan Grand Master

    nunavilan கருத்துக்கள உறவுகள்

    March 9, 20206 yr

    • கருத்துக்கள உறவுகள்
      March 9, 20206 yr
      • கருத்துக்கள உறவுகள்

       

      பழுப்பு வர்ணங்களின் சமர் சமநிலையில் நிறைவு

       
       
      By
      Mohamed Azarudeen
       
       
      91st Battle of the Maroons
      lg.php?bannerid=0&campaignid=0&zoneid=21

      இந்த ஆண்டு 91ஆவது முறையாக நடைபெற்ற கொழும்பு ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி அணிகள் இடையிலான “பழுப்பு வர்ணங்களின் சமர்”  (Battle ot the Maroons) என அழைக்கப்படும் கிரிக்கெட் பெரும் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்திருக்கின்றது.

      கொழும்பு SSC மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (07) ஆரம்பமாகிய இரண்டு நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் பெரும் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கனிஷ்க ரன்திலக்க தலைமையிலான ஆனந்த கல்லூரி அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை நாலந்த கல்லூரி வீரர்களுக்கு வழங்கியது.

      இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய நாலந்த கல்லூரி வீரர்கள் 307 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து வலுப்பெற்று காணப்பட்ட போது, தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை இடைநிறுத்தினர். 

      நாலந்த அணியின் துடுப்பாட்டம் சார்பாக, சதம் பெற்ற ரவின் டி சில்வா 81 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 11 பெளண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்கள் பெற, அரைச்சதம் பெற்ற வீரர்களில் ரசன் திஸ்ஸநாயக்க 77 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். இதேநேரம், இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணி வீரரான சமிந்து விஜேசிங்க 56 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 

      ஆனந்த கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் தினேத் ப்ரேமோதித்த 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

      பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த, ஆனந்த கல்லூரி அணி முதல் இன்னிங்ஸில் 150 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. ஆனந்த கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக, நெத்ம கருணாரத்ன 59 ஓட்டங்களுடன் தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடிய ஓட்டங்களைப் பதிவு செய்தார்.

      மறுமுனையில் நாலந்த கல்லூரி அணியின் பந்துவீச்சில் ஜித்தேஷ் வாசல 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ரவின் டி சில்வா 2 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

      பின்னர், எதிரணி வீரர்களை விட முதல் இன்னிங்ஸ் ஓட்டங்கள் போதாது என்பதால், 157 ஓட்டங்கள் பின்தங்கியவாறு ஆனந்த கல்லூரி அணி பலோவ் ஒன் முறையில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.

      பின்னர், போட்டியின் இரண்டாம் நாள் இறுதிவரை துடுப்பாடிய ஆனந்த கல்லூரி அணி 69 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்கள் பெற்ற நிலையில், ஆட்டமும் சமநிலையில் முடிவடைந்தது.

      ஆனந்த கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக அரைச்சதம் பெற்ற ஹன்சஜ விஜேசிங்க 89 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருக்க, அணித்தலைவர் கனிஷ்க ரன்திலக்க 67 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

      இதேநேரம், நாலந்த கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் ரவின் டி சில்வா 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

      இப்போட்டியின் சமநிலை முடிவுடன் பழுப்பு வர்ணங்களினு சமர் 73ஆவது முறையாக சமநிலையில் முடிவடைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

      போட்டியின் சுருக்கம்

       

       
      Result
      Match drawn

       

       
      Ananda College
      150/10 (51) & 225/7 (69)
       
      Nalanda College
      307/4 (54.5)
       

      Match Drawn

      Updated at 06:15 PM 2020-03-08

       
      Batsmen R B 4s 6s SR
      Avishka Perera c Hansaja Jayasinghe b Shashika Umayanga 26 33 4 0 78.79
      Ranindu de Silva c Deneth Pramoditha Nissanka b J Jayawardene 28 59 3 0 47.46
      Chamindu Wijesinghe c Shashika Umayanga b Deneth Pramoditha Nissanka 56 71 5 2 78.87
      Raveen de Silva not out 100 81 11 4 123.46
      Moksha Sankalpa c Mineth Premarathna b Deneth Pramoditha Nissanka 5 12 1 0 41.67
      Rashan Dissanayanake not out 77 75 12 0 102.67
      Extras 15 (b 1 , lb 4 , nb 2, w 8, pen 0)
      Total 307/4 (54.5 Overs, RR: 5.6)
      Fall of Wickets 1-52 (10.4) Avishka Perera, 2-89 (21.6) Ranindu de Silva, 3-143 (31.6) Chamindu Wijesinghe, 4-148 (33.6) Moksha Sankalpa,
      Bowling O M R W Econ
      Deneth Pramoditha Nissanka 10 2 34 2 3.40
      Dasun Tharaka 12 0 75 0 6.25
      Shashika Umayanga 13 1 77 1 5.92
      J Jayawardene 12 1 77 1 6.42
      Saviru Bandara 7.5 2 40 0 5.33

       
      Batsmen R B 4s 6s SR
      Anuda Jayaweera b Jithesh Wasala 13 10 3 0 130.00
      Kanishka Rantilakage c Ranindu de Silva b Jithesh Wasala 11 8 2 0 137.50
      Kalana Wijesiri c Ranindu de Silva b Jithesh Wasala 3 11 0 0 27.27
      Nethma Karunaratne lbw b Raveen de Silva 59 132 9 0 44.70
      Shashika Umayanga c Avishka Perera b Jithesh Wasala 0 5 0 0 0.00
      Hansaja Jayasinghe b Mahima Weerakoon 26 55 4 0 47.27
      Janindu Jayaweera c Moksha Sankalpa b Anudha Jithwara 7 48 0 0 14.58
      Dasun Tharaka c Ranindu de Silva b Jithesh Wasala 2 11 0 0 18.18
      Saviru Bandara not out 13 27 2 0 48.15
      Mineth Premarathna lbw b Raveen de Silva 2 5 0 0 40.00
      Deneth Pramoditha Nissanka c Chamindu Wijesinghe b Jithesh Wasala 4 4 1 0 100.00
      Extras 10 (b 0 , lb 0 , nb 10, w 0, pen 0)
      Total 150/10 (51 Overs, RR: 2.94)
      Fall of Wickets 1-21 (2.3) Kanishka Rantilakage, 2-27 (3.2) Anuda Jayaweera, 3-34 (7.1) Kalana Wijesiri, 4-34 (7.6) Shashika Umayanga, 5-67 (23.3) Hansaja Jayasinghe, 6-100 (37.3) Janindu Jayaweera, 7-113 (42.2) Dasun Tharaka, 8-0 (47.5) Nethma Karunaratne, 9-143 (49.6) Mineth Premarathna, 10-150 (50.6) Deneth Pramoditha Nissanka,
      Bowling O M R W Econ
      Dineth Samaraweera 15 4 43 1 2.87
      Jithesh Wasala 17 4 63 5 3.71
      Ranindu de Silva 2 1 1 0 0.50
      Raveen de Silva 7 1 28 2 4.00
      Mahima Weerakoon 3 1 6 1 2.00
      Chamodya Rajapaksha 2 0 2 0 1.00
      Anudha Jithwara 5 1 7 1 1.40

       
      Batsmen R B 4s 6s SR
      Kanishka Rantilakage c Rashan Dissanayanake b Anudha Jithwara 37 68 7 0 54.41
      Anuda Jayaweera c Ranindu de Silva b Jithesh Wasala 6 20 0 0 30.00
      Nethma Karunaratne c Moksha Sankalpa b Raveen de Silva 20 53 2 0 37.74
      Mineth Premarathna b Raveen de Silva 6 17 1 0 35.29
      Hansaja Jayasinghe not out 89 135 11 1 65.93
      Dasun Tharaka c Vihanga Vimanga b Ranindu de Silva 29 82 4 0 35.37
      Janindu Jayaweera c Mahima Weerakoon b Avishka Perera 7 33 0 0 21.21
      Kalana Wijesiri c Chamindu Wijesinghe b Avishka Perera 0 5 0 0 0.00
      Saviru Bandara not out 5 8 0 0 62.50
      Extras 26 (b 12 , lb 9 , nb 4, w 1, pen 0)
      Total 225/7 (69 Overs, RR: 3.26)
      Fall of Wickets 1-15 (7.1) Anuda Jayaweera, 2-65 (22.6) Nethma Karunaratne, 3-66 (23.1) Kanishka Rantilakage, 4-76 (28.3) Mineth Premarathna, 5-187 (57.3) Dasun Tharaka, 6-209 (64.6) Janindu Jayaweera, 7-217 (66.5) Kalana Wijesiri,
      Bowling O M R W Econ
      Jithesh Wasala 10 2 29 1 2.90
      Dineth Samaraweera 8 2 22 0 2.75
      Anudha Jithwara 8 2 14 1 1.75
      Mahima Weerakoon 8 0 28 0 3.50
      Chamodya Rajapaksha 8 1 14 0 1.75
      Raveen de Silva 18 2 65 2 3.61
      Ranindu de Silva 6 0 16 1 2.67
      Avishka Perera 3 0 16 2 5.33

       

       

      முடிவு – போட்டி சமநிலையில் அடைந்தது

      https://www.thepapare.com/91st-battle-of-the-maroons-match-report-scorecard-tamil/

      Archived

      This topic is now archived and is closed to further replies.

      Go to topic listing
      • advertisement_alt
      • advertisement_alt
      • advertisement_alt

      Tell a friend

      Love கருத்துக்களம்? Tell a friend!
      • Email
      • Share

      Topics

      • போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில்’ முடிவடையும் என டிரம்ப் தெரிவித்தார்.
        zuma
        உலக நடப்பு

        போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில்’ முடிவடையும் என டிரம்ப் தெரிவித்தார்.

        zuma · 1 hour ago1 hr
        • 1 reply
        • 60 views
        zuma
        zuma
        1 hour ago1 hr
        satan
        satan
        6 minutes ago6 min
      • ரஷ்யா, சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பகிரங்க எச்சரிக்கை!
        ஏராளன்
        உலக நடப்பு

        ரஷ்யா, சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பகிரங்க எச்சரிக்கை!

        ஏராளன் · 7 hours ago7 hr
        • 4 replies
        • 188 views
        ஏராளன்
        ஏராளன்
        7 hours ago7 hr
        satan
        satan
        15 minutes ago15 min
      • செல்வம் அல்ல, ஆயுதங்கள்: புதிய உறுப்பினர்களை ஈர்க்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சி எவ்வாறு தன் கவனத்தை மாற்றியது
        vasee
        உலக நடப்பு

        செல்வம் அல்ல, ஆயுதங்கள்: புதிய உறுப்பினர்களை ஈர்க்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சி எவ்வாறு தன் கவனத்தை மாற்றியது

        vasee · 4 hours ago4 hr
        • 1 reply
        • 125 views
        vasee
        vasee
        4 hours ago4 hr
        Kandiah57
        Kandiah57
        52 minutes ago52 min
      • ஈரானுக்கு எதிரான போரில் இணையாத நாடுகள் மீது ட்ரம்ப் கடும் விமர்சனம்
        ஏராளன்
        உலக நடப்பு

        ஈரானுக்கு எதிரான போரில் இணையாத நாடுகள் மீது ட்ரம்ப் கடும் விமர்சனம்

        ஏராளன் · 8 hours ago8 hr
        • 4 replies
        • 187 views
        ஏராளன்
        ஏராளன்
        8 hours ago8 hr
        தமிழ் சிறி
        தமிழ் சிறி
        1 hour ago1 hr
      • பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைச் சட்டமூலம்! - பல நாடுகள் கண்டனம்
        ஏராளன்
        உலக நடப்பு

        பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைச் சட்டமூலம்! - பல நாடுகள் கண்டனம்

        ஏராளன் · 6 hours ago6 hr
        • 1 reply
        • 120 views
        ஏராளன்
        ஏராளன்
        6 hours ago6 hr
        satan
        satan
        2 hours ago2 hr

      Posts

      • போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில்’ முடிவடையும் என டிரம்ப் தெரிவித்தார்.
        satan

        போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில்’ முடிவடையும் என டிரம்ப் தெரிவித்தார்.

        அதை தீர்மானிக்கப்போவது இரானேயொழிய இவரல்லர்.

        By satan · 6 minutes ago6 min

      • ரஷ்யா, சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பகிரங்க எச்சரிக்கை!
        satan

        ரஷ்யா, சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பகிரங்க எச்சரிக்கை!

        சீனா ரஷ்யாவும் அமெரிக்காவின் இன்னொரு முகங்கள்தான் ஆனால், டிரம்புக்கு இப்போ, தாம் தனித்து விடப்பட்டு விட்டோம், நாடுகளுக்கு அச்சுறுத்தல் விட முடியாது, கொள்ளையடிக்க முடியாது, தமது பொய் பிம்பம் கலைந்து, வேறொருநாட்டின் கையில் போய்விடுமோ என்கிற கடுப்பு. அமெரிக்காவை அழிக்க ட்ரம்ப் தான் சிறந்த ஆள்!
        ஆமா..... இன்று, அமெரிக்க தாக்குதலில் முக்கியமான ஒன்றை மறந்து விட்டீர்கள் போலுள்ளது. நல்லவேளை, கந்தையர் நினைவூட்டி விட்டார். ஹா ஹா...... நான் உஷார்!

        By satan · 15 minutes ago15 min

      • செல்வம் அல்ல, ஆயுதங்கள்: புதிய உறுப்பினர்களை ஈர்க்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சி எவ்வாறு தன் கவனத்தை மாற்றியது
        Kandiah57

        செல்வம் அல்ல, ஆயுதங்கள்: புதிய உறுப்பினர்களை ஈர்க்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சி எவ்வாறு தன் கவனத்தை மாற்றியது

        இன்று. 01-04-2026. பொய். செய்திகள். வரும். கவனம். ஏப்பிரல். பூல். கைதடி. மாநகரசபையாக. அங்கிகரிகப்பட்டுள்ளது.

        By Kandiah57 · 52 minutes ago52 min

      • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
        குமாரசாமி

        தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

        இதெல்லாம் வழமை போல் உங்கள் கருத்து வெற்றிக்காக நீங்களாகவே எழுதும் கற்பனை கருத்துக்கள். வாழ்த்துக்கள் 🎉

        By குமாரசாமி · 1 hour ago1 hr

      • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
        ரசோதரன்

        தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

        நான் இவர்களிடம் காணும் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஒரு ஒன்றுபட்ட எழுச்சியை நான் இவர்களிடம் எப்போதும் கண்டதேயில்லை. எந்த வேளையிலும் இவர்கள் நாடும் நலன்கள் ஒன்றானவை இல்லை.
        சமூக நலன்கள் என்ற பெயரில் இவர்கள் சாதியத்தை முன்னெடுக்கின்றார்கள். அதன் வழியே பிரிகின்றார்கள். இது தான் மிகப்பெரிய கேடு. முழுத் தமிழ்நாட்டையும் ஒரு சமூகமாக பார்க்கும் பார்வை மிகப் பெரும்பான்மையான மக்களிடம் கிடையாது.
        ஆன்மீகம் என்ற பெயரில் தீண்டாமையையும், வெறுப்பையும் வளர்க்கின்றார்கள். இப்படியான ஆன்மீக வழி மக்களின் அரசியலையும் இதுவே எப்போதும் தீர்மானிக்கின்றது. பின்னர் எங்கிருந்து வரும் எழுச்சியும், மாற்றமும்......................
        இரண்டு தேசியங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஒன்று இந்திய தேசியம் மற்றது தமிழ்த் தேசியம். இரண்டுமே தமிழ்நாட்டில் குறுந் தேசியங்களாகவே முடங்கிக் கிடக்கின்றன. காங்கிரஸின் இந்திய தேசியம் தமிழ்நாட்டில் மட்டும் என்றில்லை, முழு இந்தியாவிலுமே தேய்ந்துவிட்டது. சீமான் போன்றவர்களின் தமிழ்த் தேசியம் சில குறிப்பிட்ட பிரிவினரின் குரலாகவும், அத்துடன் வேகத்துடன் வரும் இளைஞர்களின் இடமாகவும் இருக்கின்றது. வேகத்துடன் வரும் இளைஞர்கள் அதே வேகத்தில் ஏமாற்றத்துடன் வெளியேறியும் விடுகின்றார்கள். இணையத்தை தவிர்த்துப் பார்த்தால், சீமானால் ஒரு எழுச்சியையும், மாற்றத்தையும் நிஜத்தில் கொண்டு வர முடியாதுள்ளது.
        மக்கள் லஞ்சத்தையும், ஊழலையும் அன்றாட வாழ்வில் மிகச் சாதாரணமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக, ஒருவர் இறந்தால் அவரின் சடலத்தை வெளியில் எடுப்பதற்கு கூட லஞ்சம் வாங்கும், கொடுக்கும் வழக்கத்தை என்னவென்று சொல்வது..................... லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்கப் போகின்றேன் என்னும் கோஷம் தான் தமிழ்நாட்டில் உள்ளதிலேயே மிகப் பெரிய வெற்றுக் கோஷம். இந்த வெற்றுக் கோஷத்தால் எதுவுமே மாறவில்லை, மாறவும் போவதில்லை.
        இதயசுத்தியுடன், கைகளும் சுத்தமானவரான ஒரு மனிதர் அங்கு பெரும் தலைவராக நீண்ட காலமாக வரவேயில்லை. அப்படி ஒருவர் வருவதற்கு, அவர் அங்கு நிலைத்திருக்கும் சாதிய, சமய, தேசிய சக்திகளை தாண்ட வேண்டும், அதன் பின்னர் சினிமாக் கவர்ச்சியுடன் வருபவர்களை ஓரங்கட்ட வேண்டும், அதன் பின்னரே அவரால் ஒரு எழுச்சியை கொண்டு வர முடியும், அது கூட அவர் தன் வாழ்வு முழுவதையும் தமிழ்நாட்டுக்காக தியாகம் செய்தால் மட்டுமே முடியும்.

        By ரசோதரன் · 1 hour ago1 hr

      Featured Content

      • கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்

        கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்

        சாதாரணமாக மலிவான விமானச் சீட்டைத்தான் சாதாரணர்கள் எல்லோரும் தெரிவு செய்வது. கடந்த ஆண்டு ஸ்ரீலங்கன் விமானத்தில் நேரே செல்வோம் என்று நூற்றைம்பது பவுண்டஸ்கள் அதிகம் கொடுத்து கொழும்பில் இறங்கியபோது விரைவில் வந்து சேர்ந்தாச்சு. இனிமேல் இதிலதான் வாறது என்று முடிவெடுத்து, திரும்ப வரும்போது மலசலகூடம் சுத்தம் செய்யப்படாமல் நாறிக் கிடந்ததில் இனிமேல் அதில் போவதில்லை என்று முடிவெடுத்து ஒன்லைனில் தேடினால் எல்லாம் 700 பவுண்சுக்கு மேலே காட்ட, “ஸ்கைவிங்ஸ்” மூலம் கடவுச்சீட்டைப் பதிவு செய்து ஐப்பசி மாதம் பதினெட்டாம் திகதி கட்டார் ஏயார்வேஸ் விமானத்தில் டோகா வழியாக இலங்கை போய் இறங்கியாச்சு.ஒரு கட்டுமான வேலைக்காகத்தான் முதலில் போக யோசித்தது. ஆனால் இம்முறை சரியான மழை என்று எல்லோரும் கதைத்ததனால் சரி தை மாதம் அளவில் செல்லலாம் என்று எண்ணியிருக்க, கணவரின் அண்ணன் அழைத்து கடைசி மகளுக்கு இன்னும் இரு மாதத்தில திருமணம் செய்துவைக்க இருக்கிறம். குடும்பத்தோட வாங்கோ என்றுவிட, நான் இப்ப எல்லாத்தையும் விட்டிட்டு வர ஏலாது. போக வெளிக்கிட்டனி இப்பவே போவன் என்று மனிசன் எனக்குக் கூற, எனக்கோ பெரிதாக விருப்பம் வரவில்லை.கணவரின் தமையன் மகளும் போன் எடுத்து சித்தி கட்டாயம் வாங்கோ என்று கூற மறுக்க முடியாமல் சரி வருகிறேன் என்று கூறி போனை வைத்தபின் மனிசனை வீட்டில் விட்டுவிட்டுப் போகவும் மனமின்றி நீங்கள் தான் கட்டாயம் போகவேணுமப்பா, நீங்களும் வாங்கோ என்கிறேன்.எமது வீட்டின் பின்னால் ஒரு மேலதிக அறையும் மலசலக்கூடமும் கட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதனால் தான் விட்டுவிட்டு வரமுடியாது. நீ மட்டும் போ என்கிறார். சரி என்று அங்கிருப்பவர்களுக்குக் கொண்டுபோவதற்கான சொக்லற்,பிஸ்கட் என வாங்கி அடுக்கி, எனக்கும் ஐந்தாறு மாதங்கள் நிற்பதற்கான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வாங்கி நிரப்ப இரண்டு பெரிய பொதிகள் ஒவ்வொன்றும் 23 கிலோக்கள். கையில் கொண்டுபோவது ஏழு கிலோ என எல்லாம் நிரம்ப, “எப்ப பாத்தாலும் அள்ளி கொண்டு போய் தானதருமம் பண்ணு” என்று திட்டும் மனிசனைக் கணக்கெடுக்காமல் எல்லாவற்றையும் கச்சிதமாக முடித்து, செல்லும் நாளுக்காகக் காத்திருந்து யாழ்ப்பாணமும் போயாச்சு. திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் குளிர், மழை, புயல் என்று ஓய, கார்த்திகை மாதக் கடைசியில் வீடு திருத்தும் வேலை ஆரம்பித்து அத்தனை பேருடன் மல்லுக்கட்டி ( அதை விபரமாக இன்னொரு பதிவில் போடுறன் ) இன்னும் வேலை முடிந்தபாடில்லை. மாசி மாதம் 15 போட்ட விமானச் சீட்டை பங்குனி 11 ற்கு வீணாக 70 பவுண்ட் கட்டி மாற்றிய பின் ஈரான் போர் தொடங்க என்ன செய்றது எந்த யோசனையும் ஓடிது.மாதக் கடைசியில் யாழ்ப்பாணம் வரவிருந்த கணவரும் கடவுச்சீட்டு மூன்று மாதங்களே இருந்த காரணத்தால் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துவிட்டு, அதுதான் சாட்டென்று வீட்டு வேலை முடிய கிளம்பி வா. இங்கை ஒரு அசுமாத்தமும் இல்லை என்கிறார். எனக்கு இன்னும் பயணத்துக்கு நான்கு வாரங்கள் இருக்க, மூன்று வாரங்களில் கிளம்பவேண்டும். வேலையை விரைவாக முடியுங்கள் என்கிறேன்,இரு வாரங்களின் பின் எனக்குக் கடவுச் சீட்டை மாற்றித் தந்த ஸ்கை விங்ஸ் இலங்கை முகவருடன் தொடர்புகொண்டு என்ன நிலமை என்று கேட்க, அக்கா எனக்கு இன்னும் சொல்லத் தெரியேல்லை. எதுக்கும் 9 ம் திகதி உங்கள் விமானம் பற்றிக் கூறுகிறேன். மறக்காமல் எனக்கு போன் எடுங்கோ என்கிறார். மனதில் சிறு பயம் எட்டிப் பார்க்கிறது. கணவர் பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் போகுமோ என்னும் யோசனையும் எழ மூத்த மகளுக்குப் போன் செய்கிறேன். அம்மா நீங்கள் போன் செய்ய முதலே நான் பாத்துக்கொண்டுதான் இருக்கிறன். நேரில் வரும் விமானம் எல்லாம் 1500/ 2000 பவுண்டஸ் போடுகிறார்கள். டெல்லி வந்து துருக்கி போய் லண்டன் வர 800 பவுண்டஸ் டிக்கற் இருக்கு. புக் செய்யவோ என்கிறாள். வீணாக ஏன் அவ்வளவு காசு. எதுக்கும் ஒன்பதாம் திகதிவரை பொறும் என்றுவிட்டு வீட்டு வேலைகளில் மூழ்கிப்போகிறேன்.காசைப் பார்த்து போர் அதிகமானால் என்ன செய்வது? நான் தனிய இங்க மாட்டுப்படப் போறேனோ என்று யோசனையாகவும் இருக்க இரண்டாவது மகள் அழைக்கிறாள். கோவிட் நேரம் போல பொருட்கள் எல்லாம் கடைகளில் தட்டுப்பாடோ என்று கேட்க. யாரும் எதையும்பற்றிக் கவலை கொள்ளவில்லை. எல்லாம் சாதாரணமாகத்தான் போகுது. வீட்டுவேலைகள் முடிந்துவிட்டதா? என்கிறாள். இன்னும் ஒருவாரத்தில் முடிப்பதாகச் சொல்கிறார் பொறுப்பானவர். பார்ப்போம் என்கிறேன். காசைப் பார்க்காதைங்கோ. நான் டிக்கற் போடுறன் என்றவளைத் தடுத்து எதுக்கும் ஒன்பதாம் திகதிவரை பார்ப்போம் என்கிறேன்.ஏழாம் எட்டாம் திகதிகளில் வேலையாட்களுடன் பொழுது போய்விட, இரவில் பிரையாணம் சரிவருமா என்ற குழப்பத்தில் தூக்கமே வரவில்லை.அடுத்தநாள் காலை ஒன்பதுக்கு கொழும்புக் கிளைக்குத் தொலைபேசியில் அழைத்தால் என்னுடன் பேசவேண்டியவர் தற்போது இல்லை. மதியம் இரண்டு முப்பதுக்குப் பின் போன்  செய்யுங்கள் என்கின்றனர். அதுவரை காத்திருந்து போன் செய்தால் உங்கள் விமானம் 11 ம் திகதி ஓடாது அக்கா. இப்ப மூன்று நாட்களாக எதுவும் ஓடவில்லை என்கிறார். ஓடவில்லை என்றால் ஒடுற விமானமாப் பார்த்து நீங்கள் தான் டிக்கற் மாற்றிப் போட்டுத் தரவேணும் என்கிறேன். நான் பார்க்கிறன், பார்த்திட்டு இண்டைக்கு நான்கு மணிக்கு உங்களுக்கு போன் செய்யிறன். எதுக்கும் உங்கள் இலங்கை இலக்கத்தைத் தாங்கோ என்று கூற, நான் இப்ப கதைக்கிற இலக்கம் தான் என்கிறேன். ஒருக்காச் சொல்லுங்கோ அக்கா நான் எழுதிறன். இந்த போனில காட்டாது என்று கூற நான் இலக்கத்தைச் சொல்கிறேன்.நேரம் நான்கு ஆகி நாலரை ஆன பின்னும் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. நான்இரண்டு மூன்று தடவைகள் போன் செய்தும் யாருமே எடுக்கவில்லை. விடாமல் பத்து நிமிட இடைவெளியில் ஒரு பத்துத் தடவையாவது போன் எடுத்தும் யாரும் எடுக்கவில்லை. அவர்களின் இலக்கம் சாதாரணமாது. அதனால் எந்த செய்தியையும் கூட அனுப்ப முடியாமல் டென்ஷன், கோபம் எல்லாம் எழ, கணவருக்குப் போன் செய்து விடையத்தைக் கூற அவர் வேலையில் நிற்பதாகவும் வேலை முடிய லண்டன் முகவரிடம் போய்க் கதைக்கிறேன் என்கிறார்.இரவு பதினொரு மணிக்குக் கணவர் வற்சப்பில் வருகிறார். இந்தா உன்னோடை கதைக்கவேணுமாம் என்கிறார். நான் அவர்களுக்கு விபரத்தைக் கூறுகிறேன். என்னை போனில் வைத்துக்கொண்டே கொழும்புக்குப் போன் செய்கின்றனர். கஷ்டமருக்கு சரியான தகவல் சொல்ல வேணுமல்லா? நிறையத் தடவை போன் செய்தும் நீங்கள் ஏன் போனை எடுக்கவில்லை என்று கேட்க அந்தப்பக்கம் ஏதோ சொல்கிறார். பதினொரு மணிவரை Office இல் நிக்கவேணும். வேறை அலுவல் பார்க்கப் போகக்கூடாது என்று திட்டிவிட்டு, அக்கா இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள்ள உங்களுக்கு மெயில் போடுறம் என்றுவிட்டு கணவரிடம் போனைக் குடுக்க, அப்ப சரி பிறகு கதைக்கிறன் என்றுவிட்டு மனிசன் போனை நிறுத்த, எனக்கு முன்னர் இப்பிடித் திட்டுவதாக நடித்துவிட்டு என்ன செய்யப்போறாங்களோ என்ற யோசனை ஓட வேறு வழியின்றிக் கண்ணயர்கிறேன்.அடுத்தநாள் காலை எழுந்து பார்த்தால் கொழும்பு முகவர் எனக்கு 18ம் திகதிக்கு அதே டோகா வழியாக டிக்கட் போட்டு இது ஓகே என்றால் மெயில் செய்யுங்கள் என்று தகவல் அனுப்புகிறார். அவரைப்பற்றி முறைப்பாடு கொடுத்துவிட்டு மீண்டும் அவருக்கு போன் செய்யவும் ஒரு மாதிரியாக கிடக்க, ஒன்பதரைக்கு அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் கதைக்க, நீங்கள் அவரிடம்தான் கதைக்கவேண்டும். அவர் இன்று மூன்றரைக்குத்தான் வருவார் என்கிறா.வீட்டில் வேலைகள் நடந்துகொண்டிருக்க இன்னும் எத்தனை நாட்களில் முடித்துத் தருவீர்கள் தம்பி என்று பொறுப்பானவரைக் கேட்க இன்னும் ஒரு நாளில் உள் வேலை முடிந்துவிடும். அதுக்கு அடுத்தநாள் வெளிவேலை முடித்து உங்களிடம் திறப்புத் தாறன் அக்கா என்கிறார்.அன்று பத்தாம் திகதி. 18 என்றால் கொழும்பு போக ஏழு நாட்கள் இருக்கு. இரண்டு நாளில் திறப்புத் தந்தால் ஒருநாள் சினிமாவுக்கும் போகலாம். திரியாய்ப் பாரைக் கருவாடும், மிச்சசொச்சச் சாமான்களும் வாங்கவும் நேரம் போதுமானதாக இருக்கும் என்று கணக்குப் போட்டபடி மதிய உணவுக்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டு அப்பப்ப அவர்கள் செய்யும் வேலைகளையும் கண்காணித்துவிட்டு மீன்காறருக்காகக் காத்திருக்கிறேன்.பதினொரு மணிக்கு அவர் வர அவரிடம் பொரிப்பதற்கு நான்கு சிறிய மீன்களும் குழம்புக்கு ஒரு விளை மீனும் 700 ரூபாய்களுக்கு வாங்கி சுத்தம் செய்து வளவில் கிடந்த மரவள்ளியை இழுத்து அதிலும் ஒரு கறியை வைத்துவிட்டு நிமிர 12.30 ஆக சுடச் சுட உண்டபின் ஒருமணிநேரம் போனில் நாடகங்கள் ஓடஓடப் பார்த்துக்கொண்டிருக்க, வேலை செய்யும் எட்டுப் பேரும் கடையில் வாங்கிவந்த உணவுப்பொதிகளைத் திறக்க, சரி அவர்கள் உண்டு முடித்து ஓய்வெடுத்து மீண்டும் வேலை தொடங்க ஒரு மணித்தியாலம் ஆகிவிடும். நானும் ஒரு மணித்தியாலத்துக்கு அலாம் வைத்துவிட்டுக் கட்டிலில் சாய்கிறேன்.2.30 இற்கு அலாம் அடிக்க எழுத்து உடனேயே கொழும்பு முகவருக்குப் போன் செய்ய, அவர் இன்னும் வரவில்லை ஒரு மணிநேரம் கழித்து எடுங்கள் என்கிறார் அந்தப் பெண் மீண்டும். ஒரு மணி நேரத்தில் பின் மீண்டும் அழைக்க அந்த ஆண் குரல் போலவே ஒருவர் கதைக்கிறார். ஆனால் வேறு பெயர் சொல்கிறார். வேண்டுமென்றே அப்படிச் சொல்கிறாரா என்ற ஐயம் எழ, அவர் எங்கே என்கிறேன். அவர் ஒரு அரைமணி நேரத்தில் வந்துவிடுவார். வந்ததும் உங்களுக்குக் கட்டாயம் போன் செய்யச் சொல்கிறேன் என்கிறார். சொன்னதுபோலவே அரைமணி நேரத்தில் போன்  வருகிறது.என்ன தம்பி 18 விமானம் ஓடுமா? அல்லது சும்மாதான் டிக்கட் புக் செய்திருக்கா? உள்ளதைக் கூறுங்கள். என் மகளுக்கு 18 ம் திகதி சிவில் வெடிங்க் இருக்கு. நான் இரண்டு நாட்களுக்கு முன்பாவது அங்க நிக்கவேணும். தயவுசெய்து எனக்கு டிக்கட்டை மாத்தித் தாருங்கள் என்று அழுவாரைப்போல் சொல்கிறேன்.அக்கா அவங்கள் எங்களுக்குத் தந்ததைத்தான் உங்களுக்குப் போட்டிருக்கிறம்.“நீங்கள் இப்ப எங்க நிக்கிறியள்? கொழும்பிலா யாழ்ப்பாணத்திலா?“நான் யாழில்தான் நிக்கிறன்”“அப்ப உடனம் வெளிக்கிட்டு கொழும்பு வாங்க. இங்க வந்து கட்டார் ஏயாயர்வேஸ் நிறுவனத்துக்கு நேரில் சென்றீர்கள் என்றால் அங்க மாத்திக் குடுக்கிறாங்கள் எண்டு சொல்லினம்”“சரி அப்ப இண்டைக்கே கிளம்புறன், நன்றி தம்பி”ஒரு நிமிடம் என்ன செய்யலாம் என்று கண்களை மூடி யோசித்தவுடன் முக்கியமான வேலைகள் முடிந்திட்டுது. இங்க நிக்க நிக்க பிரச்சனை கூடினாலும். கிளம்புவதே நல்லது என்று முடிவெடுத்து பொறுப்பான பெடியனுக்கு போன் செய்ய அவரும் அரை மணி நேரத்தில் வருகிறேன் என்கிறார். பின்னர் இரவு கொழும்பு செல்லும் வான்களுக்கு அடித்து ஒரு இடம் தருமாறு கேட்க, இரவு எழு மணிக்கு ஒரு வான் வெளிக்கிடுவதாகக் கூற சரி  என்றுவிட்டு உடனேயே அறைக்குச்  சென்று தேவையானவற்றை எடுத்துக்கொண்டு எனது மிச்சக் கறிகள், மற்றும் அனைத்து உணவுப் பொருட்களையும் வீட்டின் மாற்றப் பகுதியில் இருப்பவர்களுக்குக் கொடுத்துவிட்டு,எனது சமையல் உபகரணங்கள் மற்றும் மண்வெட்டி கடப்பாரை, அலவாங்கு என்பவற்றையும் உள்ளே எடுத்து வைத்துவிட்டு அனைத்துக் கதவுகள் யன்னல்களையும் மூடித் திறப்பெடுக்க பொறுப்பானவர் வருகிறார். அவரிடம் முன் கதவுத் திறப்பைக் கொடுத்துவிட்டு வேலை முடிந்ததும் கணவரின் தங்கையிடம் திறப்பைக் கொடுக்குமாறு கூறிவிட்டு பிக்மீ மூலம் ஓட்டோவை வரவழைத்து வேலையாட்கள் முதற்கொண்டு அனைவரிடமும் விடைபெற்று வீட்டில் நின்ற உடையுடன் ஓட்டோவில் ஏறி அமர கண்களில் நீர் முட்டுகிறது. ஐந்து மாதங்கள் சும்மா நின்ற என்னை விதி இப்படி ஓட விடுகிறதே என எண்ணியபடி இணுவிலுக்கு சித்தி வீட்டுக்குக் கிளம்புறேன்.போகும் வழியில் கணவரின் தங்கைக்கு விபரத்தைக் கூறி இன்னும் இருபது நிமிடங்களில் வந்துவிடுவேன். திரித்து வைத்த அரிசிமா, மிளகாய்த்தூள், குரக்கன, கோப்பித்தூள் என்பவற்றை சித்தி வீட்டுக்குக் கொண்டுவரும்படி கூறுகிறேன். நான் பிறந்து வளர்ந்த வீட்டில் தான் சித்தி இருக்கிறார். வயதானவர். அங்குதான் நான் போய் இறங்குவது. எனது பயணப் பொதிகளும் அங்குதான் வைத்திருந்தேன்.போய் இறங்கியவுடன் சித்தியிடம் விடையத்தைக் கூறிவிட்டு சூட்கேசைத் திறந்து பிள்ளைகளுக்கு வாங்கிய உடைகளை எல்லாம் எடுத்து வைக்க நிரம்பிவிடுகிறது. திரும்பிப் போகும்போது போடவேண்டிய குளிராடைகள், காலனி எல்லாம் எடுத்து வைத்துவிட்டு நிறுத்துப் பார்க்க 23 kg காட்ட அதைப் பூட்டி வைத்துவிட்டு அடுத்ததைத் திறக்க மச்சாள் உணவுப்பொதிகளுடன் வந்து சேர அதையும் வைத்துவிட்டு நிறுக்க அது 23.6 என்று காட்ட, அட இனி வேறு எதுவுமே வைக்க முடியாதே என்றபடி கையில் கொண்டு போகும் சிறியதை எடுத்து முக்கியமான ஆவணங்கள் சில ஆடைகள் துவாய்கள், எண்டு அடுக்க அதுவும் ஏழு கிலோ எனக் காட்டுது. இனிமேல் உந்த அரிசிமா, மிளகாய்த்தூள் எதுவும் கொண்டுபோவதில்லை என எண்ணியபடி நேரத்தைப்பார்க்க மாலை  ஆறு மணி என்கிறது மணிக்கூடு, இன்னும் ஒருமணிநேரம் இருக்கு. சாப்பிட்டுவிட்டுப் போவதுதான் நல்லது என எண்ணி மச்சாளிடம் சொல்ல அவர் கொண்டுவந்த இடியப்பத்தைத் தருகிறார்.இடியாப்பம் உண்டபடியே சித்தி மற்றும் கேள்விப்பட்டு வந்த முன்வீட்டு அக்கா ஆகியோருடன் கதைத்துக்கொண்டிருக்க வான்காரர் இன்னும் பத்து நிமிடத்தில் வருவதாக போன் செய்கிறார்.அப்பதான் எனது ஸ்கூட்டி அங்கு வெளிப் விறாந்தையில் நிற்பது தெரிய எப்படி அதை உள்ளே தூக்கி விடுவது என்று யோசித்துக்கொண்டிருக்க, என் ஒன்றுவிட்ட அண்ணா ஓட்டோ ஒன்றில் வந்து இறங்குகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஸ்கூட்டியை உள்ளே தூக்கி வைத்த சிறிது நேரத்தில் வானும் வர உடை மாற்ற மறந்துவிட்டது அப்போதுதான் நினைவில் வருகிறது. எல்லாவற்றையும் வைத்துப் பூட்டிவிட்டேன். திரும்பத் திறந்து எடுக்க நேரம் போய்விடும். ஒரு பிஜாமாவும் முழுக் கைச் சட்டையும் போட்டிருந்ததானால் அப்படியே போவோம். இரவுப் பயணம் தானே என முடிவெடுத்து காலணியை அணிய வான் வந்து நிற்கவும் சரியாகிறது.ஓட்டுனர் இருக்கைக்குப் பின்னால் எனக்கு இடம் கிடைக்க ஜன்னலில் தலையணையை சாய்த்து வைத்துவிட்டு தூங்க முயல, அப்பதான் கொழும்பில் தங்குவதற்கான ஒழுங்கை இன்னும் செய்யவில்லை என்கிற நினைவு வருகிறது. போனில் Hotel சிலதைத் தேடிப் பார்த்தால் அந்தஇரவு எதுவும் காலி இல்லை என்று காட்ட பயமும் எட்டிப் பார்க்க, தெரிந்த வான் ஓடும் ஊர் பெடியன் ஒருவருக்கு போன் செய்ய தான் தேடிப் பார்த்துச் சொல்வதாகக் கூறுகிறார். அரை மணி நேரம் செல்ல எல்லா கொட்டேலும் இடம் இல்லை என்கின்றனர். எனக்குத் தெரிஞ்ச இடம் ஒண்டு இருக்கு. அது உங்களுக்கு சரிவருமா என்று தெரியவில்லை என்கிறார். எதுக்கும் அதை புக் செய்யுங்கோ. பிறகு நான் பார்க்கிறேன் என்கிறேன். அவர் தொலைபேசி இலக்கத்தைப் போட்டு எதுக்கும் நீங்களும் கதையுங்கோ என்றதும் நான் போன் செய்கிறேன். அட்டாச் டாய்லெட் பாத் இருக்கா, ஏசி இருக்கா என்று கேட்க எல்லாத்துக்கும் ஓம் என்கிறார். ஒரு நாளுக்கு நான்காயிரம் என்றதும் காலை 3.30 -4.00 இக்குள் வருவேன் என்றுவிட்டு போனை வைக்கிறேன்.3.45 இற்கு வான் என்னைக் கொண்டுபோய் இறக்க ஆளரவமற்ற இடத்தில் நிற்பது போல் இருக்க போன் செய்கிறேன் அவர் எடுக்கவில்லை. பதட்டமும் சேர எனக்கு புக் செய்தவருக்கு போன் செய்ய அவரும் உடனே எடுத்துக் கதைப்பதாகக் கூறி வைத்துவிட கொட்டாவி விட்டபடி ஒருவர் வந்து கதவைத் திறக்கிறார்.வான்காரரும் அவருமாக எனது பொதிகளை இழுத்துவந்து முதலாம் மாடியில் அறைக்கு முன்னால் வைத்துவிட்டுச் செல்ல சசி என்பவர் கதவைத் திறக்கிறார். உள்ளே சென்று fan போட்டதும் காற்றோட்டம் இல்லாத அறை என்று மணம் சொல்ல டாய்லெட்டீன் உள்ளே சென்று பார்க்கிறேன். பரவாயில்லை என்று எண்ணியபடி திரும்ப பக்கத்திலும் ஒரு கதவு தெரிய குளியலறைதான் தனியாக இருக்கோ என்றபடி திறந்தால் அது இன்னொரு அறை. ஆனால் நல்ல வேளை யாரும் அங்கில்லை. உடனேயே என்ன தம்பி தனி அறை என்று சொன்னீர்கள். இரண்டு அறைகள் இருக்கு. என்னால் இங்கு தங்க முடியாது. வேறை அறை மாற்றுங்கள் என்கிறேன். இப்ப மாற்ற முடியாது அக்கா. அந்த அறையில் யாரும் இல்லை. அதன் திறப்பையும் பூட்டி உங்களிடமே தருகிறேன். நீங்கள் கொண்டியையும் போடுங்கள். யாரும் வர முடியாது என்கிறார். கணவரிடம் விபரம் கூற சரி நாளைக்கு வேற இடம் பாரான் என்றுவிட்டு அவரும் தூக்கக் கலக்கத்துடன் போனை வைக்கிறார். வானில் 7 மணிநேரம் இருந்து வந்ததில் முதுகு வலிவேறு. கொண்டுவந்த துவாயை தலையணைக்குமேல் விரித்துவிட்டு காலை 6.30 இற்கு அலாம் வைத்துவிட்டுப் படுத்ததுதான். இரண்டரை மணிநேரம் நல்ல தூக்கம். எழுந்து பல் துலக்கித் தோய்ந்துவிட்டு வெளியே வந்து தலைகாயவிட்டு நல்ல ஆடைகளை அணிந்தபடி அறையைப் பூட்டியபடி வெளியே வந்தால் யாரையுமே காணவில்லை. அந்த சசி என்பவருக்கு போன் செய்தால் அவரும் போனை எடுக்கவில்லை. நிமிர்ந்து பார்த்தால் அந்த கொட்டேலுக்குப் பெயரையும் காணவில்லை. நடந்து வெளியே வந்தால் ஒரு சிறிய வீதி தெரிகிறது. தொடர்ந்து நடக்க ஒரு பிரதான வீதி தெரிய வீதியில் போய் ஒருவரை நிறுத்தி ஏதும் உணவகம் இருக்கிறதா என்று கேட்க நேரே நடந்து போக ஒன்று வருவதாகக் கூற நடந்து செல்கிறேன்.இப்போது எனக்கு இடம் கொஞ்சம் விளங்குகிறது. நான்கு மாதங்களின் முன்னர் விசா எடுப்பதற்காக வந்தபோது அதற்கு அண்மையில் உள்ள தங்குவிடுதியில் தங்கி இங்கு வந்து உணவு உண்டிருக்கிறேன். அங்கு சென்று தோசையும் சாம்பார் வடையும் உண்டு கோப்பியும் குடிக்க ஒரு உற்சாகம் வருகிறது.அங்கிருந்தவாறே ஒன்லைனில் கட்டார் ஏயார்வேஸ் முகவரியை எடுத்து பிக்மீ யில் போட்டுவிட்டு ஒரு ஓட்டோவின் இலக்கமும் ஓட்டுநரின் பெயருடன் 4 நிமிடங்களில் வருவதாகக் காட்ட வெளியே வந்து போகும் ஓட்டோக்களைப் பார்க்கிறேன். ஓட்டோக்காரரிடம் இருந்து போன் வர எடுத்துக் கதைக்க எங்கே நிற்கிறீர்கள் என்று கேட்கிறார். அந்த உணவகத்துக்கு முன்தான் என்று கூற நானும் அங்குதான் நிற்கிறேன் என்றவர் எனக்கு அருகில் வருகிறார். ஓ நீங்கள் தானா என்றபடி அவருடன் சென்றால் அவரின் ஓட்டோ வேறு இலக்கம் காட்டுகிறது.இதில் நான் வரமுடியாது. என்னிடம் பிக்மீயில் வந்த இலக்கம் இதில்லை. என்றபடி நான் திரும்பிவர, பயமில்லை வாங்கோ என்று அவர் ஆங்கிலத்தில் கூற நான் மறுப்பாகத் தலையாட்டிவிட்டு பிக்மீயை கான்சல் செய்துவிட்டு புதிதாக ஒன்றைப் போட ஐந்து நிமிடங்களின் பின் இன்னொன்று வர அதில் ஏறி அமர்கிறேன்.நேரம் எட்டேகால். அங்கு போவதற்கு முக்கால் மணிநேரம் காட்டுகிறது. ஒன்பதுக்குள் போய்விடலாம் என்று எண்ணினால் வீதியில் மெதுவாக நகர்கின்றன வாகனங்கள். 9.15 இற்கு World Trade Centre என்னும் கட்டடத்தின் முன்னால் ஓட்டோ நிற்க, பணத்தைக் கொடுத்துவிட்டு இறங்கி உள்ளே சென்றால் நூறுக்கும் அதிகமானவர்கள் Qatar Airways நிறுவனத்தின் முன்னால் நிற்கின்றனர். வரிசை ஒன்றும் இல்லையா  என்று நின்றவர்களிடம் கேட்க, ஏற்கனவே நூறுவரை இலக்கங்கள் கொடுத்துவிட்டார்கள். எதுக்கும் இடதுபுறமாகத் திரும்பிச் சென்றால் அங்கே ஓர் அறையில் இலக்கங்கள் கொடுக்கிறார்கள் என்று கேள்வி என்கிறார் ஒருவர்,சென்று பார்த்தால் ஒரு அறையின் வெளியே பத்துப்பேர் நிற்க, எங்கே டோக்கிண் கொடுக்கிறார்கள் என்று கேட்க, நாங்களும் அதற்குத்தான் நிற்கிறோம். ஆனால் யாரும் டோக்கிண் கொடுப்பதாகத் தெரியவில்லை என்கிறார் இன்னொருவர். நான் அந்த அறையைப் பார்க்கலாமா என்று கேட்க ஓ போய்ப் பாருங்கள் என்கின்றனர். நான் சென்று பார்த்தால் அங்கே ஒரு ஐம்பது பேர்வரை கதிரைகளை நிறைத்திருக்க நிர்வாக அதிகாரிகளின் இடமோ வெறுமையாக இருக்க வெளியே வந்து இதுவரை இலக்கம் கொடுக்கப்படவில்லையா என்கிறேன். இல்லை என்று அவர்கள் தலையாட்ட இனி இதில் நின்று பயனில்லை என எண்ணி முன்பக்கமாக வர பதினோராம் இலக்கம் கூப்பிடப்படுகிறது.அங்கு கூடி நின்ற சிலரிடம் விபரங்களை அறியலாம் என்று கதைக்க, இருவர் யேர்மனியிலும் மற்றவர் மூவர் சுவீசிலும் ஒருவர் லண்டனிலிருந்தும் வந்தாகக் கூறுகின்றனர். அதில் இருவர் தான் காலை ஆறரையில் இருந்து வரிசையில் நின்று நம்பர் எடுத்ததாகக் கூற அவரின் இலக்கம் கேட்டால் 40 என்கிறார். மற்றவர் 17 மற்றும் 25 என்கின்றனர். அப்ப உங்கள் இலக்கம் என்ன என்று மற்றவரைக் கேட்க, நான் இவருடன் வந்தனான் என்கிறார். அப்ப இன்று நின்று பயன் இல்லை. காலை நான்கு மணி போல்தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து களைத்துவிட்டேன். இனிப் போட்டு நாளை காலை 6 மணிக்கு வரவேண்டியதுதான் என்றபடி கிளம்ப எத்தனிக்க, சுவிசில் நின்று வந்த ஒருவர் “தங்கச்சி இவ்வளவு தூரம் வந்திட்டியள். போகாமல் தனிய நிற்கும் வேறு யாரையாவது சேர்ந்து போகக் கேட்டுப் பாருங்கோ என்கிறார். உங்களுக்கு யாரையும் தெரியுமா என்று கேட்க, நாங்கள் மூன்று பேர்தான் நம்பர் எடுத்தது. மற்றவை எங்களோட சேர்ந்து வர நிக்கினம். போய் ஆரையும் விசாரியுங்கோ என்கிறார்.கேட்டு யாரும் மாட்டான் என்று சொன்னால் என்ன செய்யிறது என்று தயக்கமாகவும் இருக்க, இரு பெண்கள் நிற்பதைப் பார்த்து அவர்கள் அருகில் செல்கிறேன். நீங்கள் எங்கு போகிறீர்கள் என்று கேட்க கனடா செல்லவேண்டும். 48 ம் இலக்கம். மாலைதான் கூப்பிடுவினம் போல கிடக்கு என்கிறார் தாய். நான் என்  விபரங்களைச் சொல்லி அங்கலாய்த்துவிட்டு நானும் உங்களோட உள்ளே வரலாமோ என்று கேட்க, மகள் வங்ககோ அன்ரி என்கிறா. அப்பாடா என்று மனம் நிம்மதியடைய வாயிலில் நிற்கும் பாதுகாப்பு அதிகாரி விடாது தடுத்தால் என்ன செய்வது என்று எண்ணியபடி முதலில் கதைத்த குழுவினரிடம் வந்து வாசலில நிற்பவர் இருவரை ஒன்றாக விடுவாரா என்ற சந்தேகத்தைக் கேட்க, வெள்ளையள் எல்லாம் அப்பிடித்தான் போயினம். உள்ளே இரண்டே இரண்டு கவுண்டர்கள் தான் இருக்கு. ஒவ்வொரு கவுன்டரிலும் இரண்டு கதிரைகள் போட்டிருக்கு. அதனால பிரச்சனை இல்லை என்கிறார்.நேரம் 10.30 என்று காட்ட 17 ம் இலக்கம் கூப்பிடப்படுகிறது. உள்ளேயே பெரிய உணவகம் ஒன்று காணப்பட, அங்கு சென்று ஒரு Hot Chocolate வாங்கி அங்கிருந்தே குடித்துவிட்டு மீண்டும் வெளியே வந்து அந்த இரு பெண்களின் அருகில் சென்று கதைத்துக்கொண்டு இருக்கிறேன். சிறிது நேரம் செல்ல இன்னொரு இந்தியப் பெண் அருகில் வருகிறார். தான் இத்தாலியில் இருந்து வந்ததாகவும் இப்ப தான் உள்ளே வந்ததால் இலக்கம் கொடுத்துமுடித்துவிட்டார்கள் என்று தான் அறிந்ததாகவும் கூறி உங்களில் யாராவது ஒருவர் என்னையும் சேர்த்துக்கொள்கிறீர்களா என்று கேட்க, நாங்கள் மூவரும் சேர்ந்து போகிறோம் என்கிறா மகள். அப்படியா என்று கேட்டுவிட்டு அவர் நகர உங்கள் அம்மாவும் கனடா வருக்கிறாரா என்று கேட்க இல்லை என்று அவர் சொன்னதான் பின் தான் நான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்.மீண்டும் அலுவலக வாசலில் நிறு உள்ளே பார்க்க அவர்கள் ஆடிப்பாடி வேலை செய்வதுபோல் தெரிய, இப்பிடி அவசரமான நேரத்திலையாவது அதிகமான வேலையாட்களைப் போட்டால் என்ன. இவர்கள் இருவரும் எத்தனை மணிக்குப் பார்த்து முடிக்கப் போகிறார்களோ என்கிறேன். உள்ளே இருந்து வாயிற்காப்பாளர் வர எத்தனையாம் இலக்கம் போயிருக்கு என்று கேட்க 19 என்கிறார். உள்ளே நடப்பது ஏதும் விளங்காதுவிட்டாலும் சும்மா பார்த்துக்கொண்டே நிற்கிறேன். மூன்று வெள்ளையர்கள் வந்து வாயிலில் நிற்பவரிடம் டிக்கற் மாற்றவேண்டும் என்கின்றனர். வாருங்கள் என அழைத்துக்கொண்டு நான் போய் வந்த பின்பக்க அறைக்குக் கூடிக்கொண்டு போக, நானும் அவர்களுடன் போவோமா என்னும் எண்ணம் ஒரு நொடி எழுந்தாலும் உள்ளதும் கெட்டுவிடும் என எண்ணியபடி வாசலுக்குத் தள்ளிப் போய் நிற்க ஒரு பெடியன் எனக்கு அருகில் வந்து நிற்கிறார். நான் அவரைத் திரும்பிப் பார்க்க அவரும் என்னைப்பார்த்து சிரித்துவிட்டு நிற்க, உன் இலக்கம் என்ன என்கிறேன். 38 என்றவர் உன் இலக்கம் என்ன என்கிறார். நான் காலையில் தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தேன். இலக்கம் எல்லாம் கொடுத்துவிட்டார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு இலக்கத்தில் இரண்டு மூன்று பேர் கூடப் போகிறார்கள். நீ என்னைக் கூட்டிக்கொண்டு போகிறாயா என்று கேட்க, அதனால் என்ன என்னுடன் வா என்கிறார். எனக்கு மனதில் மகிழ்ச்சி எட்டிப்பார்த்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாது நிற்கிறேன்.நேரம் 12  என்று தொலைபேசி நேரம் காட்ட அதை மூடி வைத்துவிட்டுத் திரும்பினால் என்னருகில் அந்தப் பெடியனைக் காணவில்லை. நான் மீண்டும் போய் அந்தப் பெண்கள் இருவருடனும் கதைத்துக்கொண்டு நிற்கிறேன், ஆனால் அந்தப் பெடியிடம் சேர்ந்து போகக் கேட்ட விடயத்தை மட்டும் சொல்லவில்லை. நீண்ட நேரம் நின்றதில் கால்கள் வலியெடுக்க சுற்றுமுற்றும் பார்க்கிறேன். நீர் பூப்போல் தூவிக்கொண்டிருக்க சுற்றிலும் கட்டியுள்ள கட்டில் பலரும் இருந்துகொண்டிருக்க நானும் அதில் சென்று அமர இரு யேர்மன் நாட்டினர் வந்து எனக்கு அருகில் அமர்கின்றனர். தாங்கள் நேற்றும் வந்ததாகவும் நேரம் போய்விட்டதனால் இன்று வரச்சொன்னதாகக் கூறுகின்றனர். அரைமணி நேரத்தில் அவர்கள் எழுந்து சென்றுவிட அந்தத் தாயும் மகளும் என்னருகில் வந்து அமர்கின்றனர்.நீங்கள் ஏதும் சாப்பிட்டீர்களா? என்கிறேன். நாங்கள் காலையிலேயே சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தோம். சிறிது நேரத்துக்கு முன்தான் உந்த உணவகத்துக்குச் சென்று கோப்பி குடித்துவிட்டு வருகிறோம். நீங்கள் எதுவும் சாப்பிட்டீர்களா என்று கேட்க, பசிக்கிறமாதிரி இருக்கு என்கிறேன். அப்ப போய் சாப்பிட்டுவிட்டு வாங்கோ. இன்னும் நிறைய நேரம் இருக்கே என்கின்றார் மகள்.நானும் சென்று பார்த்தால் மரக்கறி உணவுகள், மச்ச மாமிச உணவுகள் என்று அடுக்கி வைத்திருக்கும் நேர்த்தியைப் பார்த்தால் எதையும் சாப்பிடலாம் போல் இருக்க, எதுக்கும் மரக்கறி உணவையே உண்போம் என்று சிவப்பு அரிசிச் சோறு மற்றும் ஐந்து கறிகளுடன் தண்ணீர் போத்தல் மற்றும் புடிங் என்று எடுக்க 900 இலங்கை ரூபாய்கள் தான். ஆற அமர இருந்து உண்டு முடித்துவிட்டு வெளிவந்து நிறுவன முகப்புக்கு வந்தால் அந்தப் பெடியன் நிக்கிறார்.நீ சாப்பிட்டுவிட்டாயா என்று கேட்க சாப்பிட்டு சிகரற்றும் பற்றிவிட்டு வந்துவிட்டேன் என்கிறார். அப்பதான் நீ எங்கு செல்கிறாய் என்று கேட்க இற்றாலி என்றவர் நீ எங்கே என்கிறார். நான் யூகே என்றதும் நீ தமிழ் கதைப்பாயா என்கிறேன். எனக்கு சிங்களமும் ஆங்கிமும் மட்டும்தான் என்றவுடன், வாயிற் காப்பாளர் ஏதும் கண்டுபிடித்துத் தடுத்துவிடுவாரோ என்ற பயம் எழ, உன் பெயர் என்ன என்கிறேன், ஆண்டனி என்றவுடன் நான் நிவேதா என்கிறேன். என் கையைப் பிடித்துக் குலுக்கியபடி உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றபின் அவரைப் பற்றிய வேலை வசிப்பிடம் என்பவற்றைக் கேட்டு அறிகிறேன்.நாம் இருவரும் நின்ற இடத்துக்கு அருகில் இன்னொருவர் வருகிறார். அவரை இலங்கையரா அல்லது ஆபிரிக்க நாட்டவரா என்று அடையாளங்கான முடியவில்லை. உங்கள் இலக்கம் என்ன என்று கேட்க 38 என்கிறேன். நான் இப்பதான் வருகிறேன். என்னையும் கூட்டிக்கொண்டு செல்ல முடியுமா என்றதற்கு நான் திகைப்புடன் பார்க்க ஆண்டனி நானும் இவவும் சேர்ந்து போகிறோம். உள்ளே மூன்றுபேரை விடுவார்கள் என்றால் நீயும் வரலாம் என்கிறார்.என்னடா இது நானே ஒட்டிக்கொண்டு போக இவர் வேறு எல்லாவற்றையும் கெடுக்கப் போகிறார்போல என மனதில் எண்ணியபடி பேசாமல் இருக்கிறேன். 31 ம் இலக்கத்தைக் கூப்பிட இன்னும் ஏழுதான் என மனம் குதூகலிக்கிறது.

          • Haha
          • Like
        • 55 replies
        மெசொபொத்தேமியா சுமேரியர்
        மெசொபொத்தேமியா சுமேரியர்
        March 22Mar 22
        மோகன்
        Featured by மோகன்
        March 23Mar 23
      • அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை

        அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை

        அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதைகவிஞர் வைரமுத்து ஒரு கவிஞர் இல்லை வெறும் பாடலாசிரியர், அவருக்கு ஞானபீட விருது கொடுத்தது தவறு என ஆசான் ஜெயமோகனும், இன்னும் பல படைப்பாளிகளும் முழங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக சில படைப்பாளிகளும், இலக்கியம் என்றால் என்னவென்று தெரிந்த அல்லது தெரியவே தெரியாத கற்றுக்குட்டிகளும் கம்புசுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்!கவிஞர் வைரமுத்து காம உணர்வுகளை அழகியலோடு, சில நேரங்களில் அதையும் தாண்டி பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்.உதாரணம் ஒன்று: ஜீன்ஸ் படத்தில் வரும் அன்பே அன்பே பாடலில்..பெண்ணே உனதுமெல்லிடை பார்த்தேன்அடடா பிரம்மன் கஞ்சனடிசற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன் ஆஹாஅவனே வள்ளலடிஆசான் ஜெயமோகனும் தனது படைப்புக்களில் பெண்களை, காம உணர்வுகளை, கலவியை சமரசம் எதுவுமின்றி எழுதி வாசிப்பவர்களை பிரமிக்கவைத்துள்ளார்!ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடர்களைப் பல வருடங்களாகப் படித்து வருகின்றேன் (26 இல் இன்னும் நான்கு நாவல்கள் படிக்க உள்ளன!). படிக்கும்போது குறிப்புக்கள் எடுப்பது வழக்கம். 😀அவற்றில் காமரசம் ததும்பும் வரிகளை ஒன்றாக்கி AI மூலம் பாடல் ஒன்றை உருவாக்க கடந்த சில நாட்களாக முயற்சித்தேன்😍. தமிழில் லகர, ளகர, ழகர,  ந,ன, ண போன்ற இடையினம், மெல்லினங்களில் AI தடுமாறியதால் எதிர்பார்த்த மாதிரி பாடலைக் கொண்டுவருவது இலகுவாக இருக்கவில்லை. ஆனால் பொதுவான தமிழ்ச் சொற்களைக் கொண்டு பாடல் உருவாக்குவது இலகு என்று தெரிந்தது. AI எப்படி வேலை செய்யும் என்பது AI நிபுணர்களுக்கே தெரியாது என்பதால் எப்படியான இசை வாத்தியங்களை அது தேர்வு செய்யும், எப்படிப் பாடல் அமைக்கும் என்பதை அறியமுடியாது. கிடைப்பதில் விருப்பமானதுடன் திருப்தியடையவேண்டியதுதான்.அதிகம் பொருத்தமான பாடல்களை உருவாக்க வேண்டும் என்றால் இலவசமான limited model களை விட்டுவிட்டு கட்டணம் செலுத்தி தரமான model களை, AI agent களைப் பாவிக்கலாம் என்று நினைக்கின்றேன். எனக்கு அப்படி எல்லாம் கட்டணம் செலுத்த மனமில்லை!சரி எப்படிப் பாடலை உருவாக்கினேன் என்று கீழே விளங்கப்படுத்துகின்றேன்.முதலில் AI tools களைப் பார்ப்போம்.பாடல் வரிகளை உருவாக்க பொருத்தமான AI tools:Claude AI (sonnet 4.6 extended) - இலவசம். கட்டணம் செலுத்தி இன்னும் நல்ல tools ஐ பாவிக்கலாம்Gemini AI Pro: இலவசம் ஆனால் ஒரு நாளில் பல தடவைகள் பாவிக்கமுடியாது. கட்டண version உள்ளன.பாடல் உருவாக்க பொருத்தமான AI Tools:Suno AI: பாடல்களை இலகுவாக உருவாக்கலாம். வேறு சில AI tools உள்ளன ஆனால் நேரம் விரயமானதுதான் மிச்சம்.படங்களை உருவாக்க: Gemini AI pro, Copilotபடங்களில் இருந்து காணொளிகளை உருவாக்க: Grok, Meta AI, Runway போன்றவற்றை 5 செக்கன் காணொளிகளை உருவாக்கப் பாவிக்கலாம்.பாடல்வரிகளை உருவாக்குதல்:நான் Claude, Gemini Pro இரண்டையும் பாவித்தாலும் Gemini Pro தான் பிடித்திருந்தது. எனது கேள்விக்குப் பின்னர் வெண்முரசு நாவல்களில் இருந்து எடுத்த குறிப்புக்களை அப்படியே ஒட்டிவிட்டேன்!கொடுத்த Prompt:Suno AI இல் ஒரு பாடல் கீழே உள்ள குறிப்புக்களைக் கொண்டு உருவாக்கவேண்டும். அழகிய இளம்பெண்ணைக் காணும் இளைஞன் ஒருவனின் ததும்பும் காம உணர்வுகளை வெளிப்படுத்தும் நான்கு நிமிடங்கள் வரக்கூடிய பாடலாக உருவாக்க உதவி தேவை.Suno AI இல் உணர்வு பூர்வமாகவும், சரியான தமிழ் உச்சரிப்புடனும் பாடலை உருவாக்க பொருத்தமான பாடல் வரிகளையும், தேவையான tags களையும், பாடலுக்குப் பொருத்தமான Styles களையும் தரமுடியுமா?அவள் இடையிலிருந்து நீலப்பட்டாடை முழுமையாக நழுவிச்சரிய, வெண்பளிங்குயானையின் மத்தக முழையென விரிந்த இடையும் மலர்தார் தொடைகள் நடுவே மான்குளம்பென அல்குலுமாக அவள் நின்றாள். மழைக்கால மலைகள் அருவிகளை அணிந்திருப்பதுபோல நகைகள் மட்டுமே அணிந்திருந்தாள்.மூச்சில் முலைகள் மெல்ல ஏறியிறங்கின. முலைக்கண்களின் கருவட்டத்தில் மயிர்ப்புள்ளிகள் சிலிர்த்திருந்தன. விலாவெலும்புகள் வெண்தோலுக்குள் பாலைநில மணலலைகள் போல தெரிந்தன. அவள் விழிகள் அவனை நோக்கி ஒருசொல்லும் இல்லாமல் வெறுமனே விரிந்திருந்தன.நீரைப்பிளந்து எழுந்து கரைநோக்கிச் சென்ற ஒரு செந்நிறப்பேரழகியைக் கண்டான். அவள் உடல் தழலாக இருந்தது. கூந்தல் அதன் புகையென நெளிந்தது. செந்தாமரை இதழிலென நீர்த்துளிகள் ஆடையற்ற அவள் உடலில் ஒளியுடன் உருண்டு வழிந்தன.மலர் சுமந்த பனித்துளிகள் போல முலைகள் ததும்பின. இரையை இறுக்கும் மலைப்பாம்பு போல அசைந்தது இடை. நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத்தசைகள். செம்பொற்தாலத்தில் ஏந்திய அகல்விளக்கின் சுடரென அல்குலின் செந்நிற மென்மயிர்.வைரத்தால் செதுக்கப்பட்ட பெண்ணுடல்Gemini AI தந்த பாடல்வரிகள். சில இடங்களில் பொருத்தமான சொற்களை நான் மாற்றினேன்.. கீழே உள்ளது பிந்திய வரைபு..[Intro][Seductive Flute with Deep Bass][Chorus]அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை...நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...!உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய...என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...![Verse 1]நீலப் பட்டாடை இடையில் மெல்ல நழுவ...வெண்யானை மத்தகம் என விரிந்தது அவள் இடை...!மலர்தார் தொடைகள் நடுவே மான் குளம்பு சிமிட்டக் கண்டேன்...!என் மூச்சே உறைந்தது ஒரு கணம்..![Build Up]என் நெஞ்சினிலே... புரவிக் குளம்பு ஓசை![Pre-Chorus]செந்தாமரை இதழில் பனித் துளிகள் போலே...ஆடை இல்லா மேனியில் நீர்த் தாரை உருள...தழல் உடலோடு அவள் என்னை நோக்க...பனியாகக் கரைந்து போனேன்... அந்த அனலின் சூட்டிலே...![Chorus]அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை...நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...!உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய...என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...![Verse 2]மூச்சில் மார்புகள் மெல்ல மெல்ல ஏறி இறங்க…மலர் சுமந்த பனித்துளிகள் போல அவை ததும்ப…!மலர்முலை கண்களில் மென் மயிர்கள் சிலிர்க்க….!வெண்மேனி விலாவினிலே பாலை மணல் அலை ஆகுதே…![Verse 3]இரையினை இறுக்கும் பாம்பென நெளிந்தது இடை….!நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத் தசைகள்…!செம்பொன் தட்டில் தவழும் விளக்கின் சுடரென…செந்நிற மென் மயிர் தூவல் என் தேகத்தை அனலாய் சுடுதே….![Bridge]அவள் விழிகள் என்னை நோக்கி அகல விரிந்தன…!என் ஆண்மை சிறகு விரித்தது…!காம நெருப்பின் கலசமே…!என் தாகம் தீர்க்கும் நதியே…!உன் தீண்டலில் உயிர்த்தெழ ஏங்கித் துடிக்கின்றேனே...![Chorus]அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை...நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...!உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய...என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...![Outro]தழல் உடலே...! ஆஹா...!பனித்துளியே...! ம்ம்ம்...!வைரம் தகிக்கும் கனலே...!என் உயிரே...!உன் விரிந்த விழிகளில்..நான் வீழ்ந்தேனே...![Fade out: Sensuous flute and echoing vocals]Styles:Passionate Male Tenor Vocal, Sensual Tamil Cinematic Pop, Seductive Groove, Deep Bass, Traditional Indian Percussion With Modern Synth, Carnatic-Inspired Strings, Tabla Rhythm, Flute Melody, Romantic, Emotional Intense Erotic Vibe, A.R. Rahman Style Fusion, Young Expressive Voice, Accurate Tamil Diction. Pronounce Tamil Words Clearly Without Mistakes, Native Tamil Phonetics. No Accidental Hindi/English Accent In Tamil Lyricsபாடலை உருவாக்குதல்:Suno AI இல் Simple மற்றும் Custom என்று இரு தெரிவுகள் உள்ளன.Custom தெரிவுக்குள் உள்ள Lyrics பெட்டிக்குள் Gemini Pro தந்த பாடல்வரிகளை (tags உடன்) ஒட்டவேண்டும்.சரியான தமிழ் உச்சரிப்பு வர நான் சில இடங்களில்: - (hyphen) - syllables ஐ சரியாகப் பிரிக்க, காற்புள்ளி - இடைவெளி விட! ஆச்சரியக்குறி - நிறுத்த… (ellipses) - நீட்டிப் பாடபாவித்திருந்தேன்.இவற்றை பாடல்களின் Suno இணைப்புக்களில் பார்க்கலாம்.Styles பெட்டிக்குள் Gemini AI தந்த styles களை அப்படியே ஒட்டவேண்டும்.பின்னர் Advanced Options இல்:Style Influence: 100 80 க்கு மேல் கொடுத்தால் கேட்ட style களுக்கு கிட்டவரும் Weirdness: 010க்கு கீழ் கொடுத்தால் AI வித்தியாசமாக முயற்சி செய்வதைக் குறைக்கும் எனத் தெரிவு செய்தேன். ஆனால் இவற்றை இப்படியான extreme ஆக தெரிவு செய்வதும் நல்லதல்ல.பாடலுக்கு ஒரு தலைப்பையும் Titles இல் கொடுக்கலாம்.இரண்டு பாடல்களை உருவாக்கினேன். அவற்றை தரவிறக்கி Files இல் சேமித்த பின்னர்,Copilot AI ஐப் பாவித்து ஒரு பொருத்தமான படத்தை  உருவாக்கினேன்.படத்திற்கான prompt ஐ ஆசானின் வரிகளை Claude AI இல் கொடுத்துக் கேட்டிருந்தேன்😁Prompt:Create an image of A Tamil girl, a red enchantress rising from the water. Her body like fire, her hair coiling like smoke, a fiery beauty burning with love. A blue silk saree gently slipping from her waist, revealing her hips like a white elephant’s forehead. Water droplets like dewdrops on red lotus petals, streams of water rolling on her body. Her fiery body gazes at me, and I melt like snow in the heat of that fire. Her reddish black hair floats in the breeze கிடைத்த படத்தை Meta AI, Runaway AI ஐப் பாவித்து 5 செக்கன்கள் வீடியோ உருவாக்கி, அதையே loop ஆக ஓடவிட்டு iMovies இல் காணொளிகளைக் தயாரித்தேன்.கீழே உள்ள பாடல்களில் எது உங்களுக்குப் பிடித்துள்ளது என்பதைச் சொல்லுங்கள்😊ஒன்று 4 நிமிடங்கள் 19 செக்கன்கள்Suno: https://suno.com/s/PsdURePRy1Ahzj8bஇரண்டு: 6 நிமிடன்கள் 28 செக்கன்கள்Suno: https://suno.com/s/GohzmvqVFQbeBnvc

          • Haha
          • Thanks
          • Like
        • 14 replies
        கிருபன்
        கிருபன்
        March 21Mar 21
        மோகன்
        Featured by மோகன்
        March 23Mar 23
      • அப்பிள்போன் வேணும் தம்பி….

        அப்பிள்போன் வேணும் தம்பி….

         போன தடவை கேட்க மறந்திட்டன்…இப்ப இது அவசியமாய் இருக்கு..இது இல்லாமல் இங்கு வாழுறதே கஸ்டம்இல்லையென்று சொல்லிவிடாதே.. மாடு .வளர்த்து ..பால் வித்த காலம் போயிட்டுதுபாலுக்கு இப்ப சனம் பூட் சிற்றிக்கு போகுதுபகுதிநேர  உழைப்பொன்று தேடப் போறன்பார்த்து நல்ல போனா அனுப்பிவிடு… ஆடு வளர்த்து கிடாய் வித்த காலம் போயிட்டுதுஆரிப்ப ஆடடித்து பங்கு போடுகினம்ஆட்களெல்லாம் இப்ப மட்டன் திருவிழாவுக்கு போகினம்ஆரெட்டையென்றாலும் ஒரு போன் கொடுத்துவிடு..  தோட்டத்திலை கத்தரி வெண்டி போட்டாலும்போயிலையை நட்டாலும் விலை போகாதாம்கஞ்சாவும் ..குடுவும் அடிக்கிற   வாய்க்கு இவை ஏன்அப்பிள்  நல்லதாம் அதைத்தான் அனுப்பிவிடு மானாண்டிச் சந்தையில்..மாலை நேரத்தில்பாய் பெட்டி இழைத்து வித்த காலமும் போச்சுபாயையும் பெட்டியையும் இப்ப ஆர் தேடிகினம்பார்சலில் என்றாலும் போனை அனுப்பிவிடு  அவசரம் ஆச்சிக்கு ஏன் இப்ப அப்பிள்   போனென்று  கேட்கிறாய்ஆச்சி டிக் –ரொக்  போடப்போறன்ஆரெட்டை பழகப் போறன் என்று நினைப்பாய்அயலட்டையெல்லாம் உதுதான்   தொழில் ஆயிரக்கணக்கில்  காசுவருதாம்..ஆச்சியின் அறிவுக்கும் ..இந்த குரலுக்கும்ஆயிரம் வியூஸ் வரும் … வயதுதான் போட்டுதுஅதுக்கும்  வழியிருக்கு…மேக்கப் படிப்பது..அப்பன் உன்னை நம்பிஅயலட்டையெல்லாம் சொல்லிப்போட்டன்அவையும் ஆச்சியின் ரிக்-ரொக் பார்க்க ரெடிஅப்பிள்  போன்தான்..வேணும்தம்பிஅதை மறக்காமல்  அனுப்பிவிடு…

          • Haha
          • Thanks
          • Like
        • 8 replies
        alvayan
        alvayan
        March 22Mar 22
        மோகன்
        Featured by மோகன்
        March 23Mar 23
      • விடுமுறையில் வாங்கிய  வில்லங்கமான நகை

        விடுமுறையில் வாங்கிய  வில்லங்கமான நகை

        விடுமுறையில் வாங்கிய  வில்லங்கமான நகைவிடுமுறைக்கு நாட்டுக்குப் போவதாக இருந்தால் பொதுவாக என் குடும்பத்தைத் தவிர வேறு யாரிடமும் அதை ப்  பற்றி நான் கதைப்பதில்லை.“எதற்கு வில்லங்கத்தைச் சும்மா வாங்க வேண்டும்?” என்ற  உயரிய எண்ணம்தான் அதன் காரணம்.ஆனால், சில சமயம் வில்லங்கம், நாங்கள் தேடாமல் எங்களைத் தேடித் தானாக வந்து விடும்.அடுத்த நாள் எனது பயணம். செய்ய வேண்டிய வேலைகள் சில இருந்தன. அப்போது அலைபேசி அழைத்தது. அழைப்பு நியூசிலாந்தில் இருந்து வந்திருந்தது. அங்கு வசிக்கும் எனது உறவினர் ஒருவர். என்னை “தம்பி” என்று உரிமையோடு அழைப்பார். நானும் அவரின் பெயரின் பின்னால் “அக்கா” சேர்த்துஅழைப்பேன்.“என்ன, சிறீலங்கா போறியாம்?”“சிறீலங்காவுக்கா? யார் சொன்னது?”“விடாதை . கதை விடாதை . எனக்குத் தெரியும். சிறீலங்காவிலையிருந்து எனக்கொரு தாலிக்கொடி வாங்கி அனுப்பிவிடுறியே?”தங்கம் விற்கும் விலையில் தாலிக்கொடி வாங்க வேண்டுமா என்ற எண்ணத்தில் தலை சுற்ற ஆரம்பித்தது. நல்லவேளை அவர் அடுத்ததாகச் சொன்னவார்த்தைகளில் நான் தப்பித்தேன்.“பவுணில இல்லை. இமிட்டேஷன் தாலிக்கொடி. இஞ்சை  எனக்குத்  தெரிஞ்ச ஒருத்தியின்ரை மகளுக்கு கொஞ்ச நாளைக்கு முன் கல்யாணம் நடந்தது. அவையள் ஹொலிடேக்குப் போயினம். போற இடத்திலை சொந்தக்காரர்கள்  வீட்டுக்கும் போவினம். பவுண்  தாலிக்கொடியை போட்டுக் கொண்டு போய் எதுவும் நடந்தாலும் எண்டு பயப்படுயினம். அதுக்குத்தான். வெள்ளவத்தையில வாங்கலாம். ‘யாழ்ப்பாணத் தாலிக்கொடி’ என்று கேள். வட்டமா இருக்கும்.”நான் பயணத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்க முயன்றாலும், வில்லங்கம் எப்படியோ என்னைத் தேடி வந்துவிடும் போல. இந்த இமிட்டேஷன் யாழ்ப்பாணத் தாலிக்கொடியே அதற்கான ஆரம்பமாக இருக்கப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.கொழும்பில் நான் வழமையாகத் தங்குவது என் நண்பன் கணேசனின் வீட்டில். அவன் சட்டத்தரணியாக இருந்த காலத்தில் மாலை நேரத்தில் மட்டும் “தீர்த்தம்” அருந்துவான். இப்போது வயதும் ஓய்வும் சேர்ந்து, மதியம் ,மாலை இரு வேளைகளிலும் தீர்த்தக் களிப்பில் இருக்கிறான்.இந்த வருடப் பொங்கலை அவனுடனேயே கொண்டாடினேன். 40, 45 வருடங்களுக்கு பிறகு நான் காணும் பொங்கல் அது. பொங்கல் முடிந்து இரண்டுநாட்களுக்குப்  பிறகு நியூசிலாந்து அக்கா கேட்ட யாழ்ப்பாணத் தாலிக்கொடி நினைவுக்கு வந்தது. அதை வாங்கி அனுப்பிவிட்டு அடுத்த வேலையைப்பார்க்கலாம் என்று கடைகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன்.நான் வாங்கி வந்த தாலிக்கொடியைப் பார்த்து கணேசனின் மனைவி உடனேயே சொன்னார், “பிழையா வாங்கிட்டீங்கள். இது இமிட்டேஷன் என்று அப்பிடியே காட்டிக்குடுக்கும்.” சொன்னதோடு மட்டும் நின்று விடாமல், தனது கழுத்தில் இருந்த தடித்த  தாலிக்கொடியைக் காட்டினார்.“இது செய்து எத்தினை வருசமாச்சுது . செத்த பாம்பு மாதிரி இருக்குது. அவன் வாங்கினது சரிதான். யாழ்ப்பாணத் தாலிக்கொடி இப்பிடித்தான். இதுதான் இப்ப பாஷன்” என்று கணேசன் என்னைக் காப்பாற்றினான்.“சிவபெருமான் கழுத்தில சுத்தியிருக்கிற பாம்பு மாதிரி…” என்று முணுமுணுத்தபடி கணேசனின் மனைவி எங்களை விட்டு அகன்றார்.அடுத்த நாள் அந்த யாழ்ப்பாணத் தாலிக்கொடியை நியூசிலாந்துக்கு அனுப்பி வைத்தேன்.அந்தத்  தாலிக்கொடி வாங்கச் சென்றபோது ஒரு கடையில் பார்த்த ஒரு விளம்பரம் என்னைச்  சற்று யோசிக்க வைத்தது.“மாணிக்கக்கற்கள் பொருந்திய நகைகள் 40% முதல் 60% வரை தள்ளுபடி” என்று ஒரு கண்காட்சி விளம்பரம்.சும்மா போய் பார்த்து வரலாம் என்று நினைத்து அந்த கண்காட்சிக்குச் சென்றேன். இடம் கொள்ளுப்பிட்டிய.அங்கு சென்றபோது, மூன்று ஊழியர்களும் ஒரு காவலாளியும் தவிர வேறு யாரும் இல்லை. அப்போதே திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக உள்ளேபோனேன்.அங்கு சபையர் கல் பதித்த ஒரு மோதிரம் என்னைக் கவர்ந்தது. அவர்கள் சபையரை பரிசோதித்து காட்டினார்கள். மோதிரம் 14 கரட் என்று சொன்னார்கள். விலையையும் குறைத்துத் தந்தார்கள். நான் வாங்கிவிட்டேன்.யேர்மனிக்குத்  திரும்பினேன். சிறீலங்காவில் +30°C யேர்மனியில் -12°C என காலநிலை இருந்தது. நேரமாற்றமும் குளிரும் சேர்ந்து நீண்ட நேரம் தூங்கிக்கொண்டிருந்தேன். எழுந்தபோது சூட்கேஸ் எல்லாம் திறந்து ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. உடுப்புகள் தோயலுக்குப் போயிருந்தன. கொண்டு வந்தபொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குள் மோதிரப் பெட்டியும் இருந்தது.மனைவியை ஆச்சரியப்படுத்த வாங்கி வந்த மோதிரம்.“நல்ல வடிவான மோதிரம்,” என்றாள்.கண்காட்சியில் வாங்கிய விபரத்தைச் சொன்னேன். ஆனால் அந்த மோதிரத்தை நான் மீண்டும் பார்த்தபோது, வாங்கிய போது இருந்த கவர்ச்சி கல்லில்இப்போது குறைந்திருப்பது போல எனக்குத் தோன்றியது. தவறு கல்லிலா? இல்லை நீண்ட நித்திரையில் இருந்த என் கண்களிலா?அந்தச்   சந்தேகத்தை அப்போது மனைவியிடம் சொல்லவில்லை. அவளது மகிழ்ச்சி வீணாகிவிடக் கூடாது என்று நினைத்தேன்.இரண்டு நாட்களுக்கு பிறகு வழமையான வாழ்க்கைக்கு திரும்பியபோது என் சந்தேகத்தை மனைவியிடம் கூறினேன்.“கடையில குடுத்துக் கேட்டால் அதன் பெறுமதி சொல்லிவிடுவினம். வேணுமென்டால் நான் கேட்டுப் பார்க்கிறன்,” என்றாள்.அடுத்த நாள் முடிவு தெரிந்தது.மோதிரம் 14 கரட் தங்கம். அதில் பொருத்தியிருந்தது உண்மையிலேயே சபையர் கல்லுதான். ஆனால் அதன் தரம் வெறும் 0.9 கரட் மட்டுமே.வாங்கி வந்தேன் ஒரு வாழைமரம்வந்தபின்னே அது தாழைமரம்அதாவது நான் கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ற கல் இல்லை. நான் பார்த்த மோதிரத்தை மாற்றி வேறு ஒன்றைத் தந்திருக்கலாம் என்ற சந்தேகம்உறுதியாகியது.அவர்களின் விவரங்களை இணையத்தில் தேடியபோது, நான் தனியாளாக இல்லை. எனக்குத் துணைகளும் இருப்பது தெரிந்தது.  என்னைப் போல சிலவெளிநாட்டவர்களும் ஏமாற்றப்பட்டிருப்பது அங்கே பதியப்பட்டிருந்தன. யேர்மனியில் என்றால் இப்படிப்பட்ட விஷயங்களைச் சட்டப்படி சுலபமாக கையாளலாம். ஆனால் சிறீலங்காவில் நடந்த விஷயம். அதுவும் நான் யேர்மனியில்இருந்து கொண்டே முடியுமா?“விட்டு விடலாமா?” என்ற எண்ணம் ஒரு கணம் வந்தது. உடனேயே அந்த எண்ணத்தை  மாற்றிவிட்டேன்.என்னைப் போல இன்னும் எத்தனை பேரை இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள்? குறைந்தபட்சம் சிலருக்காவது இது பற்றி எச்சரிக்கையைத் தரவேண்டும்முதலில் யேர்மனியில் உள்ள சிறீலங்கா தூதரகத்துக்கு முழு விவரத்தையும் எழுதினேன். அவர்கள் உடனடியாக பதில் அனுப்பினார்கள், “இந்த தீவிரமானவிஷயத்தை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி. உங்கள் புகாரை விசாரணைக்காக இலங்கையில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்குஅனுப்பியுள்ளோம். தகவல் கிடைத்தவுடன் தெரிவிப்போம்.”அடுத்ததாக என் வங்கியையும் தொடர்புகொண்டேன்.அவர்கள் சொன்னது, “நீங்கள் வாங்கிய பொருள் உங்களிடம் இருக்கிறது. ஆகவே நேரடியாக பணத்தைத்  திரும்பப் பெற முடியாது. அந்தப் பொருளைஅவர்களிடம் ஒப்படைத்து அவர்கள் பெற்றுக்கொண்டதாக உறுதிப்பத்திரம் கிடைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.”மோதிரம்  வாங்கிய ரசீதைப் பார்த்தேன். அதில்,“Goods once sold can be exchanged only” என்று இருந்தது.ஆனால் நான் விடவில்லை.அவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினேன், “வாங்கிய பொருள் தரமற்றது. கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ப இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளைத்  திருப்பி அனுப்புகிறேன். பணத்தை என் வங்கி கணக்கில் வரவு வைக்கவும். 14 நாட்களில் பதில் வரவில்லை என்றால் சட்ட நடவடிக்கைஎடுப்பேன்.”காத்திருந்து சரியாக 14வது நாள் அவர்கள் பதில் அனுப்பினார்கள்.“நாங்கள் விற்ற பொருள் தரமானது. திருப்பிப் பெற முடியாது.”எதிர்பார்த்த பதில்தான். “அப்படியானால் நான் சட்ட நடவடிக்கை எடுக்கிறேன். உங்களின் இறுதிப் பதிலுக்கான கால எல்லை  நாளை சிறீலங்கா நேரம் 14:00வரை” எனப் பதில் அனுப்பினேன்.மீண்டும் நான் எதிர்பார்ததபடி நேர எல்லைக்குள் அவர்களிடம் இருந்து பதில் வந்தது, “நேரடியாக எங்கள் நிறுவனத்துக்கு வாருங்கள். நாங்கள் பேசித்தீர்க்கலாம்”“நன்றி. நான் இந்த விவகாரத்தை சட்டப்படி அணுகுகிறேன்” என அவர்களுக்கு பதிலைத் தந்துவிட்டு, அடுத்து நான் நாடியது சிறீலங்காவின் Tourist Police.மறுநாள் மாலை நேரம், கணேசனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.“எதுக்கு உன்னுடைய Power of Attorneyயை எனக்கு அனுப்பியிருக்கிறாய்? அதென்ன மோதிரம்? எப்ப வாங்கினனீ? ”விஷயத்தைச் சொன்னேன்.அவன் போனில் கன நேரம் என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். மாலை நேரமாக இருந்ததால் அவன் தமிழ் தறி கெட்டு ஓடிக் கொண்டிருந்தது.

          • Sad
          • Haha
          • Like
        • 7 replies
        Kavi arunasalam
        Kavi arunasalam
        March 10Mar 10
        மோகன்
        Featured by மோகன்
        March 23Mar 23
      • மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?

        மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?

        தமிழ்நாடு அரசியல் என்பது எப்போதுமே சினிமாவும் சமூகமும் சந்திக்கும் ஒரு விசித்திரமான மேடை. அந்த மேடையில் “நடிகர் அரசியலுக்கு வரலாமா?” என்ற கேள்வி புதியதல்ல. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அதை புதிய கோணத்தில் கேட்கிறது. இன்று நடிகர் விஜயை மையமாகக் கொண்டு எழும் இந்த விவாதம், கடந்த காலத்திலும் பலமுறை எழுந்ததே.அரசியலுக்கு யாரும் வரலாம். அதுதான் ஜனநாயகம். தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் முதல்வராக வர முடிந்ததென்றால், சினிமா நடிகர் துணை முதலமைச்சராக வர முடிந்ததென்றால், நடிகர் விஜய் அரசியலுக்கு ஏன் வரக்கூடாது? இந்த கேள்விக்கான பதிலை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் தெளிவாகத் தெரியும். அது எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த காலம். அப்போது அவரைச் சுற்றி எழுந்த விமர்சனங்கள் இன்று கேட்கும் விமர்சனங்களுக்குச் சற்றும் குறைவானவை அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவை கூடுதலானவை.எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது, “நீதிக்கு முன்னால் ‘அ’ போட்டால் அநீதி அதுபோலத்தான் திமுகவுக்கு முன்னால் ‘அ’ போடுவது” என்று  கருணாநிதி கிண்டல் செய்தார். “இந்தக் கட்சி நூறு நாள் தான் ஓடும்” என்று கண்ணதாசன் ஆருடம் கூறினார். “அண்ணாயிசம் என்றால் என்ன?” என்று கேள்வி  துக்ளக் சோவினால் எழுப்பப்பட்டது. இவ்வாறான எத்தனையோ விமர்சனங்கள் எம்ஜிஆரை நோக்கி இருந்தன.அப்போது ஒரு நடிகர் அரசியல் கட்சி தொடங்குவது என்பது வெறும் சிரிப்புக்குரியதாகவே கணிக்கப்பட்டது. ஆனால் ஒரு இடைத்தேர்தல் அந்த சிரிப்பை அடியோடு மாற்றியது. திண்டுக்கல் இடைத்தேர்தலில், பெரிய அரசியல் பின்னணி இல்லாத மாயத்தேவர் என்பவரை நிறுத்தி, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் எம்.ஜி.ஆர், மாயத்தேவரை வெற்றிபெறச் செய்தபோது, அவரை எதிர்த்தவர்கள் அவரின் உண்மையான பலத்தை உணர்ந்தார்கள். எம்ஜிஆரை விட்டு ஒதுங்கி நின்ற அவரின் வலது கையான  ஆர்.எம். வீரப்பன் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டார்.அப்போது கிண்டல் செய்தவர்கள், பின்னர் வரலாறு உருவாகுவதைக் கண்டு நின்றார்கள். இன்று எள்ளி நகை ஆடுபவர்கள், மீண்டும் அதே வரலாறு திரும்புமா என்று கேட்கிறார்கள்.1977இல் நடந்த சட்டசபைத் தேர்தலில், பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே எம்.ஜி.ஆர் வெற்றி கண்டது, மக்கள் மனதில் நடிகருக்கான இடம் வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது அரசியல் சக்தியாகவும் மாற முடியும் என்பதை நிரூபித்தது.இந்த வரலாற்றை இன்று நடிகர் விஜயைச் சுற்றியுள்ள சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது, சில முக்கியமான வேறுபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. எம்.ஜி.ஆர் எதிர்கொண்ட அளவிலான அரசியல் அழுத்தங்களும், வன்முறைகளும் இன்று இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஒரு புதிய சவால் உள்ளது. அது சமூக ஊடகங்கள்.அப்போது ஊடகங்கள் குறைவு. இன்று சமூக ஊடகங்கள் அதிகம். அப்போது விமர்சனங்கள் குறைவு. இன்று ஒரு வார்த்தை பேசினால், அது ஒரு நிமிடத்தில் ஆயிரம் விமர்சனங்களாக திரும்பி வருகிறது. ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு கருத்தும் உடனுக்குடன் சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது.விஜயின் விஷயத்தில்,  எம்ஜிஆர் போல் அவருக்கும் ரசிகர்கள் அதிகம். இளைஞர்கள், நடுத்தர வர்க்கம், சமூக அக்கறை கொண்டவர்கள் ஆகியோரிடையே அவருக்கு ஆதரவு இருக்கிறது. ஆனாலும், அரசியலில் ரசிகர்கள் ஒரு தொடக்கத்தை உருவாக்கலாம். ஆனால் வெற்றியை நிர்ணயிப்பது வாக்காளர்கள்.எம்.ஜி.ஆர் வெற்றியின் பின்னால் இருந்தது அவரது திரை விம்பம் மட்டுமல்ல. மக்களுடனான நேரடி தொடர்பு, தாய்ககுலத்தின் ஆதரவு, அவர் மீதான நம்பிக்கை, மற்றும் அவரின்அரசியல் அனுபவம். இந்த அம்சங்களில் சில விஜயிடம் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.மேலும், எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது போல, தனது பலத்தை நிரூபிக்க இடைத்தேர்தல் வாய்ப்பு விஜய்க்கு கிடைக்கவில்லை. அவர் நேரடியாகவே சட்டசபைத் தேர்தலின் மூலம் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார். அதனால் இந்தத் தேர்தல்  விஜய்க்கு ஒரு சாதாரண அரசியல் போட்டி அல்ல. அது ஒரு சோதனை.சிங்கம் தனியாகத்தான் வருகிறது.  அந்தப் பக்கம் கூட்டமாக இருக்கிறது.எதுவானாலும் வெற்றியை நிர்ணயிப்பது  திருவாளர் பொதுமகன்தான்மே மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் மட்டும் எண்ணப்படாது, ஒரு நடிகரின் அரசியல் பயணத்தையும், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலையும் மக்கள் தீர்மானிக்கப் போகிறார்கள்.

          • Haha
          • Like
        • 12 replies
        Kavi arunasalam
        Kavi arunasalam
        March 18Mar 18
        மோகன்
        Featured by மோகன்
        March 19Mar 19
      View All
      1. Home
      2. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
      3. விளையாட்டுத் திடல்
      4. பழுப்பு வர்ணங்களின் சமர் சமநிலையில் நிறைவு
      • All Activity
      • facebook

      • Privacy Policy
      • Contact Us
      • Cookies
        • Events RSS Feeds
        • covid-19
        • Yarl Forum

      யாழ் இணையம் Powered by Invision Community

      Important Information

      By using this site, you agree to our Terms of Use.

      I accept
      • Sign In
      • இங்கு இணைந்து கொள்ள

      Account

      • Existing user? Sign In
      • இங்கு இணைந்து கொள்ள

      Navigation

      • Browse
        • Forums
        • Gallery
        • Blogs
        • Events
      • Activity
        • All Activity
        • My Activity Streams
          • stream_title_14
          • stream_title_13
        • வாசிக்காதவை
        • நான் தொடங்கியவை
        • Search
      • முகப்பு
      • Leaderboard
      • Clubs
      1. Home
      2. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
      3. விளையாட்டுத் திடல்
      4. பழுப்பு வர்ணங்களின் சமர் சமநிலையில் நிறைவு

      Search

      Search

      Configure browser push notifications

      Chrome (Android)
      1. Tap the lock icon next to the address bar.
      2. Tap Permissions → Notifications.
      3. Adjust your preference.
      Chrome (Desktop)
      1. Click the padlock icon in the address bar.
      2. Select Site settings.
      3. Find Notifications and adjust your preference.
      Safari (iOS 16.4+)
      1. Ensure the site is installed via Add to Home Screen.
      2. Open Settings App → Notifications.
      3. Find your app name and adjust your preference.
      Safari (macOS)
      1. Go to Safari → Preferences.
      2. Click the Websites tab.
      3. Select Notifications in the sidebar.
      4. Find this website and adjust your preference.
      Edge (Android)
      1. Tap the lock icon next to the address bar.
      2. Tap Permissions.
      3. Find Notifications and adjust your preference.
      Edge (Desktop)
      1. Click the padlock icon in the address bar.
      2. Click Permissions for this site.
      3. Find Notifications and adjust your preference.
      Firefox (Android)
      1. Go to Settings → Site permissions.
      2. Tap Notifications.
      3. Find this site in the list and adjust your preference.
      Firefox (Desktop)
      1. Open Firefox Settings.
      2. Search for Notifications.
      3. Find this site in the list and adjust your preference.