Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்கள் கடத்தலும் விடுதலையும்-சில கேள்விகள்…..

Featured Replies

தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றதாகவும் 12 பேரை அவர்கள் கடத்திச் சென்றுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி ஊடகர் மகாநாடு ஒன்றைக் கூட்டி பகிரங்கமாக அறிவித்த போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்திய தமிழக பர்ப்பணிய ஊடகங்களும் பௌத்த சிங்களப் பேரினவாத ஊடகங்களும் அதை ஊதிப் பெருக்கி பரபரப்புச் செய்தியாக்கி வெளியிட்டன.

தமிழக முதல்வரின் குடும்பத் தொலைக்காட்சி என்று அப்போது சொல்லப்பட்ட சண் தொலைக்காட்சி தமிழக கியூ பிராஞ் காவல்துறையினரால் அவர்களது வழக்கமான பாணியில் அடித்து உதைத்து பெறப்பட்ட சில அப்பாவி ஈழத் தமிழர்களின் வாக்கு மூலங்களை ஒளிபரப்பியது.

இந்த வாக்குமூலங்கள் ஒரு நீதிபதியின் முன்பாகவோ அல்லது ஒரு நீதிமன்றத்திலோ பெறப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. காவல்துறையினர் தாங்கள் பெற்ற வாக்குமூலத்தை ஒரு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு பதிலாக ஊடகங்களில் பகிரங்கமாக வெளியிட்டது ஏன்? ஏன்ற சந்தேகம் பலமாக எழுந்தது.

இன்று நேற்றல்ல கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக சிறீலங்கா கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதும் அவர்களது படகுகள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்வதும் அவர்களது வலைகள் மற்றும் மீன்பிடி கருவிகளை சேதப்படுத்துவதும் மீன்களை பறித்துச் செல்வதும் ஒரு தொடர் கதையாகவே நடந்துவந்திருக்கிறது-வருகிறது.

அண்மைக் காலங்களில் சிங்கள கடற்கொள்ளையர்கள் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிறீலங்கா அரசபடைகளுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுதக்குழுக்கள் என்பனவும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய செய்திகள் ஊடகங்களிலே வெளிவந்திருக்கின்றன.

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் தான் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றார்கள் கடத்திச்சென்றார்கள் என்ற செய்தியை தமிழக அரசும் காவல்துறையும் அவசர அவசரமாக வெளிடும் போது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கும் தமிழகத்திலுள்ள அவர்களது ஆதரவுத் தளத்தை சிதைப்பதற்கும் முயன்றுவரும் சிறீலங்கா கடற்படையும் சிறிலங்கா அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுதக் குழுக்களும் எதிர்காலத்தில் தமிழக மீனவர்களை வகை தொகையின்றி சுட்டுக் கொன்றுவிட்டு விடுதலைப்புலிகள் மீது பழி போடுவதற்கான ஆபத்து இருக்கிறது என்பது ஏன் தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜிக்கும் தெரியவில்லை? இந்த அறிவிப்பு சிறீலங்கா அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக பின்னிப் பிணைந்து செயற்படும் பாகிஸ்த்தான் உளவுத்துறை சிறீலங்கா அரச ஆதரவு தமிழ் குழுக்கள் மற்றும் ஜிகாத் போன்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களை வைத்து தமிழகத்தில் பாரிய அழிவுகளை எற்படுத்திவிட்டு விடுதலைப்புலிகள் மீது பழியைப் போட்டு தப்பித்துக்கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் என்ற எண்ணம் ஏன் தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜிக்கும் வரவில்லை? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தாலும் பறவாயில்லை தமிழக மக்கள் (மீனவர்கள் உட்பட) வகைதொயின்றி கொல்லப்பட்டாலும் பறவாயில்லை விடுதலைப்புலிகளை; தமிழக மக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டவேண்டும் என்ற குறுகிய சிந்தனையும் தமிழர் விரோதப் போக்கும் தான் இந்த அறிவிப்பில் வெளிப்பட்டது.

இப்போது கடத்தப்பட்ட 12 மீனவர்களில் 11 பேர் மீண்டு வந்து விட்டார்கள்கள். அவர்களை சுயமாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க விடாமல் அவசர அவசரமாக சென்னைக்கு அழைத்துச் சென்று கியூபிராஞ் அலுவலகத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் தாங்கள் சொல்வதைத் தான் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மிரட்டப்பட்டது அந்த மீனவர்கள் வெளியிட்ட தகவல்களில் இருந்தே தெரிய வருகிறது.

இந்த மீனவர்கள் தங்களை கடத்திய விடுதலைப்புலிகள் முதலில் காட்டில் வைத்திருந்ததாகவும் பின்னர் வீடொன்றில் தங்க வைத்ததாகவும் கூறுகிறார்கள்.தங்களது படகுக்காகவே விடுதலைப்புலிகள் தங்களை கடத்தியதாகவும் கூறுகிறார்கள்.

தாங்கள் தங்க வைக்கப்பட்ட இடத்தில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது படம் இருந்ததாகவும் அங்குள்ளவர்கள் புலிகளின் குரல் வானொலியை கேட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதிலே இரண்டு விடயங்கள் முரண்படகின்றன.இவர்கள் தங்க வைக்கப்பட்ட இடம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தால் அங்கே சிருடை அணிந்த போராளிகளின் நடமாட்டம் இருந்திருக்கும்.போராளிகளின் நினைவு வணக்க நிகழ்வுகள் உட்பட ஈழப்போராட்டம் சம்மந்தப்பட்ட பல நிகழ்வுகள் அங்கே நடந்திருக்கும் அதற்கான அறிவிப்புக்கள் மற்றும் ஏற்பாடுகள் பற்றி இவர்கள் சிறிதளவாவது அறிந்திருக்காமல் இருக்க முடியாது. தங்களை விடுதலைப்புலிகள் வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்ததாக இவர்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை.

அடுத்தது முழுமையான சிங்களப்புதியான காலி துறைமுகத்துக்கே சென்று தாக்குதல் நடத்தும் கடற்புலிகளுக்கு படகு தேவையென்றால் சிங்கள மீனவர்களின் படகுகளை அவர்களால் சுலபமாக கடத்தியிருக்க முடியுமே! தங்களது வழியில் குறுக்கிட்ட மீpனவர்களை கடற்புலிகள் தான் சுட்டார்கள் என்றால் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சிங்கள மீனவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் இருந்திருக்க வேண்டுமே!

உண்மையில் சிறீலங்கா அரசுக்கும் இந்திய உளவத்துறைக்கும் நெருக்கமான தமிழ் ஆயுதக் குழு ஒன்றினால் தான் இந்த மீனவர்கள் கடத்தப்பட்டிருக்க வேண்டும்.

கடத்தப்பட்ட மீனவச் சிறுவன் அனிதன் மக்கள் தொலைக்காட்சிக்கு தெரிவித்தபடி கடத்தப்பட்ட மீனவர்கள் சிறீலங்கா கடற்படை படகுகளில் ஏற்றப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள யாழ்ப்பாணக் குடா நாட்டுத் தீவொன்றிலேயே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

கடத்தப்பட்ட ஒரு மீனவர் தாங்கள் தங்கியிருந்த பகுதியில் விமானக் குண்டுத் தாக்குதல் நடந்ததாகவும் தங்களை பங்கருக்குள் படுக்கும்படி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.விடுதலைப்ப

என்னதான் நடக்குது

என்னதான் நடக்குது

அதெல்லாம் புரியுர அளவுக்கு உங்களுகு எதுவும் இல்லை தோழா :lol:

அதெல்லாம் புரியுர அளவுக்கு உங்களுகு எதுவும் இல்லை தோழா :icon_idea:

:unsure::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதல்வரின் குடும்பத் தொலைக்காட்சி என்று அப்போது சொல்லப்பட்ட சண் தொலைக்காட்சி தமிழக கியூ பிராஞ் காவல்துறையினரால் அவர்களது வழக்கமான பாணியில் அடித்து உதைத்து பெறப்பட்ட சில அப்பாவி ஈழத் தமிழர்களின் வாக்கு மூலங்களை ஒளிபரப்பியது.

இத்தொலைக்காட்சி எங்களுக்கு எதிராகவே செய்திகள் வெளியிடுகிறது. ஆனால் எங்கட சனத்தில் சிலர் இதைக் காசு கொடுத்துப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு தங்களைப்பற்றி தங்களது இனத்தைப்பற்றி என்ன சொன்னாலும் கவலைப் படுவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.