Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மட்டும் 57 பேருக்கு தொற்று; சற்றுமுன் 43 பேருக்கு உறுதியானது!

இலங்கையில் இன்று (11) இதுவரை 57 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,511 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 13 பேருக்கும், குறித்த மையத் தொடர்பினால் 39 பேருக்கும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து அழைத்து வந்த நால்வருக்கும் குவைத்தில் இருந்து அழைத்து வந்த ஒருவருக்குமாக 57 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 520 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 1,980 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/இன்று-மட்டும்-57-பேருக்கு-த/

 

  • Replies 1.1k
  • Views 268.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்று இதுவரை 94 பேருக்கு காெராேனா!

இன்று இதுவரை 94 பேருக்கு கொரோனா தொற்று. கந்தக்காட்டு மையம் -76, கந்தக்காடு மையத் தொடர்பு -18. எண்ணிக்கை 2605.

https://newuthayan.com/இன்று-இதுவரை-94-பேருக்கு-கா/

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 19 பேருக்கு தொற்று!

இலங்கையில் இன்று (14) இதுவரை 19 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,665 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 9 பேர், சேனபுர மையத்தில் 4 பேர் மற்றும் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 6 பேர் என மொத்தம் 19 பேருக்கே இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 666 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 1,988 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/இன்று-19-பேருக்கு-தொற்று/

 

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

பெண் பொலிஸுக்கு கொரோனா! பொலிஸார் 41 பேர் தனிமைப்படுத்தல்

1584557991-Police-curfew-covid-19-in-Sri-Lanka-l.jpg?189db0&189db0

 

ஹோமாகம – நுகேகொட நான்காம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் 41 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி பொலிஸ் ஏஸ்பி அலுவலகத்தை சேர்ந்த 30 பேரும், ஹோமாகம பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 11 பேரும் ஹபராதுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

https://newuthayan.com/பெண்-பொலிஸுக்கு-கொரோனா-ப/

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2728 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 676 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதுவரை 2041பேர் குணமாகியுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙகயல-தறறளர-எணணகக-மலம-உயரவ/150-253410

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மட்டும் 22 பேருக்கு தொற்று!

PicsArt_06-27-04.30.13.jpg?189db0&189db0

இலங்கையில் நேற்று (22) 22 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,752 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 21 பேர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 677 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 2,064 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/நேற்று-மட்டும்-22-பேருக்கு/

  • கருத்துக்கள உறவுகள்

ஐடிஎச்சிலிருந்து கொரோனா தொற்றாளி தப்பியோட்டம்!

20200724_064611.jpg?189db0&189db0

ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதைக்கு அடிமையான கொரோனா தொற்றாளி ஒருவர் இன்று (24) காலை தப்பிச் சென்றுள்ளார்.

திருகோணமலையை சேர்ந்த எல்சியாம் நஷீம் என்ற 41 வயதுடைய நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இவரை தேடி கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பல்வேறு பொலிஸ் மற்றும் இராணுவ குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர் குறித்து தகவலறிந்தால் அல்லது இந்நபரை கண்டால் 119 – 0718591017, 0718592290 or 0718591864. ஆகிய இயக்கங்களுக்கு அழைக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

https://newuthayan.com/ஐடிஎச்சிலிருந்து-கொரோனா/

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒருவருக்கு “வீக் கொரோனா” தொற்று!

20200728_151544-960x444.jpg?189db0&189db0

 

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் 7ம் இலக்க விடுதியின் தனிமைப்படுத்தல் அறையில் சிகிச்சை பெற்ற நிலையில் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பப்பட்ட நபருக்கே நேற்று (27) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியா்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டு அவா்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா். அவா்களுக்கு 31ம் திகதி பாிசோதனை நடத்தப்படும்.

இவ்வாறு இன்று (28) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ் போதனாசாலை பணிப்பாளர் த.சத்தியமூா்த்தி விளக்கமளித்துள்ளார். மேலும்,

“கடந்த 7ம் திகதி சவுதியில் இருந்து வந்த 208 பேருடன் தங்கியிருந்தவா் 22ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அன்றைய தினம் மாலையே 7ம் விடுதியில் உள்ள தனிமைப்படுத்தல் அறைக்கு அவர் மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு மீண்டும் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பபட்டார். மீண்டும் 25ம் திகதி சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதற்கமைய நேற்று மாலை நடத்தப்பட்ட பி.சி.ஆர் பாிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனினும் அவருக்கு தொற்று குறைந்தளவிலேயே உள்ளது. இதற்கமைய யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணா்கள் குழு கூடி இந்த விடயத்தை ஆழமாக ஆராய்ந்துள்ளது.

குறித்த நபா் வைத்தியசாலையில் தங்கியிருந்த காலப்பகுதியில் வேறு யாருடனும் நேரடியாக தொடா்புகளை பேணினாரா? என்பதை ஆராய்ந்துள்ளோம். இதற்கமைய குறித்த நபா் தங்கியிருந்த விடுதியிலும், தனிமைப்படுத்தல் விடுதியிலும் பணியாற்றிய 4 உத்தியோகஸ்த்தா்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான குறைந்தளவு சந்தர்ப்பம் உள்ளதென்ற அடிப்படையில் அவர்கள் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கான பாிசோதனைகள் எதிா்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் பாதுகாப்பு அங்கிகள், முகக்கவசங்கள் பயன்படுத்தப்பட்டே குறித்த நபா் பரிசோதிக்கப்பட்டுள்ளாா். இதேபோல் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வந்தவா் என்ற அடிப்படையில் கையுறை, முக கவசம் அணிந்துள்ளதுடன், சமூக இடைவெளியினையும் பேணியிருக்கின்றனா்.

ஆகவே யாழ்.போதனா வைத்திசாலையில் உள்ள மற்றவா்களுக்கோ, ஊழியா்களுக்கோ தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் இந்த நோய் பரவும் வேகம் தீவிரமானது என்பதால் நாம் மிக அவதானமாக உள்ளோம்” – என்றார்.

https://newuthayan.com/யாழில்-ஒருவருக்கு-வீக்-க/

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தொற்று உறுதியானவருக்கு கொழும்பில் தொற்று இல்லெயன்று முடிவு!

74284680-negative-rubber-stamp-grunge-design-with-dust-scratches-effects-can-be-easily-removed-for-a-clean-cr-960x568.jpg?189db0&189db0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ம் இலக்க விடுதியில் கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்பட்ட நபருக்கு கொழும்பில் மீளவும் இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் யாழ் போதனாசாலை 7ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த நபருக்கு மீளவும் இரண்டு தடவைகள் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அந்த இரண்டு தடவைகளும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/யாழில்-தொற்று-உறுதியானவர/

 

 
 

 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 72 மணி நேரத்தில் 89 புதியகொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டனர்

COVID-19-500.png

 

இலங்கையில் கடந்த 72 மணி நேரத்தில் 89 புதியகொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஆயிரத்து 197 பேர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் 42 பேர் வெளிநாட்டினர் என்பதுடன், ஆயிரத்து 155 பேர் இலங்கையர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்குமாறும் அவர் பொது மக்களிடம் கேட் டுக்கொண்டுள்ளார்.

மேலும் பாடசாலை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதால், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சுகாதார உத்தரவுகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு கற்பிப்பது அவசியமாகும் என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார்.

 

http://www.ilakku.org/இலங்கையில்-72-மணி-நேரத்தில/

  • 3 weeks later...

“பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்” - இராணுவத் தளபதி எச்சரிக்கை

 

சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங் காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும் என்று இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் சமூகத்தினுள் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பெரும்பாலானவர்கள் தொற்றுக்குள்ளாகின்றனர்.

எனினும் சமூகத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உற்சவங்கள் நடத்தப்படும்போதும் பொறுப்பற்று செயற்படுவதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தனிமைப்படுத்தல் நிலையங்களாக உள்ள ஹோட்டல்களிலுள்ள ஊழியர்களும் சுகாதார பாதுகாப்புடன் பொறுப்பாக செயற்பட வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.

இதன் போது கருத்து தெரிவித்த தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா கட்டுப்படுத்தலில் இலங்கை சிறந்த மட்டத்திலுள்ளது. மக்களின் ஒத்துழைப்பினாலேயே இதனை எம்மால் பேண முடிந்தது.

இந்த நிலைமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கடந்த காலங்களில் சமூகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டார்கள் என்பதை மறக்காமல் அடிப்படை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/150839?ref=imp-news

இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை

 

 

 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (சனிக்கிழமை) கடலோடி ஒருவருக்கும், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு  கூறியுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,283ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 200 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்து நேற்று வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/இலங்கையில்-அதிகரித்து-செ/

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை மூவாயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட மூவரும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 18 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை மூவாயிரத்து 88 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்னும் 186 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் நாட்டில் 13 பேர் வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்ககையில் மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை மூவாயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது.

இன்றுமட்டும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவர்களில், பிரித்தானியா மற்றும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 12 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை மூவாயிரத்து 100 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்னும் 185 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் நாட்டில் 13 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாட்டில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை மூவாயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 12 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை மூவாயிரத்து 100 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்னும் 177 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் நாட்டில் 13 பேர் வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/நாட்டில்-மேலும்-மூவருக்-2/

 

புதிய கொரோனா தொற்றாளர்கள் 11 பேர் அடையாளம்

நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 11 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாலைத்தீவில் இருந்து வருகை தந்த 8 பேர், ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்த ஒருவர் மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தந்த கடற்படையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் களின் எண்ணிக்கை 3,298 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண மாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 185 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://thinakkural.lk/article/70772

மாத்தறை ஹோட்டலில் தங்கியிருந்த ரஸ்ய பிரஜைக்கு கொரோனா – தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை

மாத்தறையில் ஹோட்டலொன்றில் தங்கியிருந்தரஸ்ய பிரஜை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்துஅவருடன்தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.


மத்தல சர்வதேச விமானநிலையத்துக்கு சமீபத்தில் வந்த ரஸ்ய விமானமொன்றின் பணியாளர் ஒருவர் ஹோட்டலொன்றிலிருந்து அம்பாந்தோட்டை வைத்தியாசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபர் ஏனைய விமானப்பணியாளர்களுடன் மாத்தறையில் உள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்தார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் முதலில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர் பாதிக்கப்படவில்லை என தெரியவந்தது என தெரிவித்துள்ளனர்.
எனினும் இரண்டாவது சோதனையின் போதுஅவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து ஹோட்டல் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், ரஸ்ய பிரஜையுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://thinakkural.lk/article/71769

ரஸ்ய பயணி குறித்து கொவிட் செயலணிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை – இராணுவதளபதி

ரஸ்யாவிலிருந்து வந்த பயணிகள் எங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விபரங்களை அதிகாரிகள் கொவிட் 19 தொடர்பான செயலணிக்கு தெரிவிக்கவில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யாவிலிருந்து வந்த பயணியொருவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வழமையாக அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களில் தங்கவைக்கப்படுவது வழமை என தெரிவித்துள்ள இராணுவதளபதி எனினும் எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த நபர் மூலம் ஏனையவர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான வாய்ப்பு குறைவு என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/71873

ரஸ்ய பிரஜை குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை- பொது சுகாதார பரிசோதகர் சங்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரஸ்ய பிரஜை குறித்து அதிகாரிகள் பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு எந்த தகவலையும் வழங்கவில்லை என பொதுசுகாதா பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட ரஸ்ய பிரஜை விமானநிலையத்தின் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் பல பகுதிகளுக்கு சென்றுள்ளார் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக ரஸ்ய பிரஜை எந்த பகுதிகளுக்கு சென்றார் என்பதை கண்டுபிடித்த பின்னர் தொடர்புபட்ட நபர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்ய பிரஜை பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவரும் வரை அதிகாரிகள் எநத தகவலையும் தெரிவிக்காதது கவலையளிக்கின்றது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

http://thinakkural.lk/article/71865

இலங்கையில் கொரோனா தொற்று அபாய நிலை குறைவடையவில்லை – தொற்று நோய்ப் பிரிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனைத்  தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “புதன்கிழமை ரஷ்யாவிலிருந்து வந்த விமானத்திலுள்ள பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இவருடன் வந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குச் செல்லாமல் நேரடியாக மாத்தளை பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். சம்பவம் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றவுடன் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது பாரதூரமான விடயம் கிடையாது. எனினும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

இதில் இராஜதந்திரிகளுக்கு அவர்களது சொந்த தங்குமிடங்களிலேயே தனிமைப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து வரும் பெரும்பாலானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படுவதால் நாட்டில் வைரஸ் பரவும் அபாயம் குறைவடையவில்லை.

எனவே பொதுமக்களை அடிப்படை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/இலங்கையில்-கொரோனா-தொற்ற-23/

ரஷ்ய கொரோனா தொற்றாளியால் 37 பேர் தனிமைப்படுத்தல்!

மாத்தறை – பொல்சேன, பரமுல்ல பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றின் 23 ஊழியர்கள் உட்பட 37 பேர் இன்று (24) தனிமைப்படுத்தப்பட்டனர்.

குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய விமானப் பணியாளர் குழுவில் உள்ள பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று (23) கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய பிரஜைகள் 15 பேர் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக கடந்த 13ம் திகதி இலங்கையை வந்தடைந்துள்ளனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் குறித்த ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

அவர்கள் இன்று சீனா பயணமாக இருந்ததுடன், நேற்று முன்தினம் மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிசிஆர் பரிசோதனைக்குட்பட்டனர். இதனையடுத்தே அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று உறுதி செய்யப்பட்டது

இதனால் கொரோனா தொற்றுக்குள்ளான ரஷ்யப் பிரஜை சிகிச்சைகளுக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த ஏனையவர்கள் அம்பாந்தோட்டையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டதுடன், ஹோட்டலின் ஊழியர்கள் குழு ஹபராதுவையிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் தம்புத்தேகம, எம்பிலிப்பிட்டிய, தெனியாய, அங்குனகொலபெலஸ்ஸ மற்றும் மாலிம்பட ஆகிய பகுதிளைச் சேர்ந்தவர்களாவர். ஹோட்டல் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் தற்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ரஷ்ய பிரஜைகள் பயணித்ததாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி, மனைவி, பிள்ளைகள் இருவர் சகிதம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த தொற்றாளியுடன் இருந்த ஏனைய ரஷ்ய பிரஜைகள் இரண்டு சுப்பர் மார்கட்களுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 100 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

https://newuthayan.com/ரஷ்ய-கொரோனா-தொற்றாளியால்/

மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரப் பிரிவு

நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 12 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டாரிலிருந்து வருகை தந்த 6 பேர், உக்ரேனிலிருந்து வருகை தந்த 3 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த இருவர், அல்பீனியாவிலிருந்து வந்த ஒருவர் ஆகியோரே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 345 ஆக அதிகரித் துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண மாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது.

174 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொ டர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாவில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை குறிப் பிடத்தக்கது.

http://thinakkural.lk/article/72305

நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 360ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பதினொரு பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்தஅதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு, வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் சென்னையில் இருந்து நாடு திரும்பிய எட்டுப்பேரும், பங்களாதேஷிலிருந்து வந்த இருவரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து திரும்பிய ஒருவரும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து மூவாயிரத்து 208 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில் இன்றும் 139பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 13 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நாட்டில்-கொரோனா-தொற்று-க-4/

நாட்டில் நேற்று 06 பேர் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – சுகாதாரப் பிரிவு

நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 06 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

coronavirus.jpg

ஒமானிலிருந்து நாடுதிரும்பிய 3 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய கடலோடி ஒருவர், ஒமானிலிருந்து நாடு திரும்பிய இந்தியக் கடலோடி ஒருவர், அமெரிக்காவிலிருந்து நாடுதிரும்பிய ஒருவர் ஆகியோரே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ள மை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/75575

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ லங்காவில் மீண்டும் ஊரடங்கு! அனைத்து பாடசாலைகளும் மூட உத்தரவு!

 

இலங்கையில் பெண்ணுக்கு கொரோனா: 60 பேருக்கு சுயதனிமை

கம்பஹா, திவுலப்பிட்டியவில் 39 வயதான பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பெண், கொழும்பு  ஐடிஎச் க்கு மாற்றப்பட்டுள்ளார் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

காய்ச்சல் காரணமாக அந்தப் பெண், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்தே, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, அந்த வைத்தியசாலையைச் சேர்ந்த பணியாளர்கள் 15 பேர் மற்றும் அப்பெண் கடமையாற்றிய  நிறுவனத்தைச் சேர்ந்த 45 பேர் அடங்களாக 60 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலங்கையில்-பெண்ணுக்கு-கொரோனா-60-பேருக்கு-சுயதனிமை/150-256223

 

திவுலபிட்டிய பாடசாலை மாணவர்கள் 1500 பேர் தனிமைப்படுத்தல்

திவுலபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் சுமார் 1,500 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திவுலபிட்டி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணின் மகள் கல்வி கற்ற பாடசாலை மாணவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

school.jpg

குறித்த ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் இன்று கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்

https://thinakkural.lk/article/76984

ஆனமடுவவில் இளைஞர் ஒருவருக்கு மூன்றாவது தடவை கொரோனா- சுகாதார பரிசோதகர்கள் அதிர்ச்சி

ஆனமடுவவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மூன்றாவது தடவையாக கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனமடுவை தேனன்குரிய பகுதியைசேர்ந்த 23வயது இளைஞனே மூன்றாவது தடவையாக பாதிக்கப்பட்டுள்ளார் என பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

Screenshot_20201005-122651_Chrome.jpg
ஆகஸ்ட் 18ம்திகதி ஐக்கிய இராச்சியத்திலிருந்து வந்த இளைஞர் ஒருவர் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை அவருக்கு கொவிட் 19 பாதிப்புள்ளமை முதலில் தெரியவந்தது என பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகன தெரிவித்துள்ளார்.
வெலிக்கந்தை மருத்துவமனையிலிருந்து வெளியேறிய இளைஞர் தன்னை வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினார் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் அந்த இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பிசிஆர் சோதனையின் போது இரண்டாவது தடவை அவர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது எனஉபுல் ரோகண தெரிவித்துள்ளார்.

ph1-1-300x169.jpg
அதன் பின்னர் அந்த இளைஞர் இரணவில கொவிட் 19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தடவை அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்னர் அவரது வீட்டை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும் அவர் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்கானசூழலை ஏற்படுத்துவதற்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
சுய தனிமைப்படுத்தலில்இருந்தவேளை ஒக்டோபர் இரண்டாம் திகதி அந்தஇளைஞர் சிலாபத்தில் உள்ள கொவிட் சோதனை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் போது அவருக்கு மீண்டும் கொரோனாவைரஸ் பாதிப்புள்ளமை தெரியவந்துள்ளது.

https://thinakkural.lk/article/76971

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.