Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ்: மூடப்பட்ட எவரெஸ்ட்; உலகெங்கும் ரத்தாகும் நிகழ்வுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என அம்மாநில சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புதின் நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் அவர்கள் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வரும் திங்கள் முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படுகின்றன. இதனால் ஒரு பத்து லட்சத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

அமெரிக்காவின் ஏழு மாநிலங்களில் பள்ளிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் 36 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் மேட்ரிட்டில் மட்டும் சுமார் 2000 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அபாயத்தால் உலகின் உயரமான மலையான எவரேஸ்ட் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள்

லத்தின் அமெரிக்க நாடுகளில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தங்கள் நாட்டிற்கு வரும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.

அனைத்து ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, சீனா, இரான், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமானங்களை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அர்ஜெண்டினா தெரிவித்துள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசியாவிலிருந்து வரும் விமானங்களை கால வரையறை இல்லாமல் நிறுத்தி வைப்பதாக பெரு தெரிவித்துள்ளது.

மார்ச் 26ஆம் தேதி வரை ஐரோப்பிவிலிருந்து வரும், செல்லும் நேரடி விமானங்களை ரத்து செய்துள்ளது.

வெனிசுவேலாவும் ஒரு மாத காலத்திற்கு அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.

உலகை பெரிதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 4614-ஐ எட்டியுள்ளது.

118 நாடுகளில் பரவியுள்ள கொரோனா தொற்று, உலக அளவில் இதுவரை 1,25, 288 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சீனா அதிகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இத்தாலியும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இத்தாலியில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது, கடந்த 24 மணிநேரத்தில் 188 பேர் இறந்துள்ளதாக இத்தாலி தெரிவித்துள்ளது. இதனால் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது.

கொரோனாவால் உலகப்போருக்கு பிந்தைய மிகப்பெரிய நெருக்கடியை இத்தாலி எதிர்கொண்டுள்ளது.

வெறிச்சோடிய இத்தாலி சாலைகள்படத்தின் காப்புரிமை Vittorio Zunino Celotto/Getty Images Image caption வெறிச்சோடிய இத்தாலி சாலைகள்

இந்நிலையில், சீனாவில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படுபவர்கள் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) எட்டு பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டதாக சீனா கூறுகிறது.

சீனாவில் இதுவரை குறைந்தது மூவாயிரம் உயிரிழந்துள்ள நிலையில் ஹாங்காங்கில் தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துளளது.

கொரோனா பாதிப்பை சமாளிக்க ஐ.எஸ் குழுவினர் அறிவுரை

கொரோனா வைரஸ்படத்தின் காப்புரிமை Getty Images

ஐ எஸ் குழுவினர் நடத்தும் நாளிதழில் நோய் தொற்றில் இருந்த தப்பிக்க மத ரீதியான சில வழிமுறைகளையும் பாதுகாப்பு சோசனைகளையும் வெளியிட்டுள்ளனர். கொரோனா தொற்று என பெயரை குறிப்பிடாமல் இந்த பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.

  • உடல்நிலை சரி இல்லாதவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
  • நோய் தொற்று இருக்கும் இடத்திற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்
  • இருமல் மற்றும் கொட்டாவியின் போதும் வாயை மூடிக்கொள்ள வேண்டும்
  • சாப்பிடும் முன்பும், தண்ணீர் குடிக்கும் முன்பும் கை கழுவ வேண்டும்.

மேலும் தங்கள் ஆதரவாளர்களை கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து, இறைவனிடம் அடைக்கலம் தேடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் ஆசிய பங்குச்சந்தைகள் பல கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

ஜப்பானில் நிக்கி குறியீட்டு எண் இன்று 8.5 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது.

ஹாங்காங்கில் ஹாங் செங் 5.8 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், சீனாவின் பங்குசந்தையும் 3.3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'

இதேபோல் இந்தியாவின் பங்குசந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. காலை பங்கு வர்த்தகம் துவங்கியவுடன் நிப்டி சுமார் 10% வீழ்ச்சியை கண்டதால் 45 நிமிடங்களுக்கு தற்காலிகமாக வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

Source: Ministry of Health & Family Welfare

முன்னதாக, இன்று கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ்படத்தின் காப்புரிமை Getty Images

ட்ரூடோவின் மனைவி சோஃபி க்ரிகோரியா ட்ரூடோ தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக கனேடிய பிரதமரின் செய்தி தொடர்பு அலுவலக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து ட்ரூடோவும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள் என செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லை என்பதால் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படாது. எனினும் அவர் பிரதமர் அலுவலகம் வரமாட்டார் என்றும் வீட்டில் இருந்தே பணிகளை தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டததையொட்டி செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ''நான் மீண்டு வருவேன்'' என ட்ரூடோ மனைவி சோஃபி தெரிவித்துள்ளார்.

ரத்தான விளையாட்டு போட்டிகள்

உலகின் மிக முக்கிய அருங்காட்சியகங்கள் மற்றும் கலைகாட்சிகூடங்கள் பெரும்பாலும் முடங்கியுள்ளன.

சிங்கப்பூர் (கோப்புப்படம்)படத்தின் காப்புரிமை AFP

நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்கள் நோய் தொற்று பரவாமல் தடுக்க மார்ச் மாதம் இறுதி வரை மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் உலகெங்கிலும் பல நாடுகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன; அதேபோல், கலாசார மற்றும் கலை தொடர்பான நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் பெரும் விளையாட்டு போட்டிகள், நிகழ்வுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

https://www.bbc.com/tamil/global-51867324

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.