Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லாமே கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன் -பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உறக்கம் இல்லா உலகமாக இருக்கிறது உலகு. உலகப் போர் ஒன்று வந்ததுபோல் அங்கும் இங்குமாய் எங்கும் ஏக்கத்தோடு நிம்மதி இழந்த மனிதர்களாக கோரோனா என்ற கொடிய நோய் கொன்று தின்கிறது மனித வாழ்வை. கொடிய யுத்தங்களினாலும் கொடிய நோய்களினாலும் உலகம் நிம்மதி இழந்து சுழல்கிறது. மனித வாழ்வு இதில் இருந்து மீளவேண்டும்.

மனித அச்சுறுத்தலாக மாறும் இந்த கொடிய வைரசுகள் அன்று ஒரு காலம்  ரோமன் ராச்சியத்துக்குள் வந்தது. பிளாக் அபேடாமிக்( plague epidemic)541 ம் ஆண்டுக் காலப்பகுதியில்  ரோமன் ராச்சியத்தின் ஆத்மாவையே ஆட்டிப்படைத்தது.
பல்லாயிரம் மக்களின் உயிரை குடித்தபடி கொன்ஸ்டான்நோபல்( Constantinople) நகரை கொலை செய்தபடி இருந்தது.இதே போலவே இக்கொடிய தொற்று நோய்கள் காலத்திற்கு காலம் தோண்றி மனித வாழ்வை அச்சுறுத்தியபடி இருக்கிறது.
பன்றிகாய்ச்சல்,எய்ட்ஸ்,காலரா,ஹாங்காங் ஃப்ளூ,ரஷ்யன் ஃப்ளூ,ப்ளாக் டெத்,கொரோனோ,இப்படி சீரியஸ் கில்லர் ஆக சிலருக்கு வந்து பின் பலரையும் துரத்தி கொன்று விடுகின்றது.

காலம் காலமாக ஆட்டிப் படைக்கும் இந்த வைரசுக் கொல்லிகள் வீழ்ந்து விடாத மன்னர்களில் இருந்து மக்கள் வரை தின்று தீர்த்த வரலாறுகளை இந்த உலகம் கண்டிருக்கிறது.உலகப் போர் வரலாறிலே ஆயுதங்கள் கொன்று தீர்த்த மக்களை போல் யுத்தம் இன்றி கொல்லும் வைரசுகளோடு மனிதன் போராடி வெல்ல வேண்டியவனாகின்றான்.

அண்மைக் காலமாக கொரோனா என்னும் மிக கொடிய வைரஸ் என்னும் தொற்று நோய் உலகையே மிரட்டி வருகிறது. இந்த கொரோன வைரஸ் தொற்றுக்கு நோயினால் பாதிக்கப்பட்டு இதுவரை 1,00,000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000த்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். மேலும் தொடர்ந்து  அதிகரித்து வரும் இந்த வைரஸ் தாக்கத்திற்கு உலகின் பல பகுதிகளிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உலக சுகாதார அமைப்பு (WHO)இதை பெருந்தொற்று நோய் (Pandemic Disease) என்று பிரகடனப்படுத்தியுள்ளது.அதிகரித்து வரும் இந்த நோயினால் மனித வாழ்வு பெரும் துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றது.பொருளாதர ரீதியாக பெரும் பின்னடைவை உலக நாடுகள் எதிர் கொண்டு வருகின்றன.நாளுக்கு நாள் உலக சந்தைகளின் சரிவும் இதை ஒட்டி எழுகின்ற பொருளாதார மாற்றங்களும் எல்லா மனிதர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இது பொருளாதார ரீதியாக மாத்திரம் இன்றி பெரும் உளவியல் சிக்கலையும்  மனித வாழ்வில் ஏற்படுத்தி உள்ளது.தமது சொந்தங்களுக்கு உறவுகளுக்கு எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற பயதுடன் நாளாந்த வாழ்வை நினைத்து ஏக்கத்தோடு திரியும் மனித முகங்களை காணக்கூடியதாக இருக்கிறது.வேலைப்பழு மற்றும் சுகயினம் காரணமாக வேலைத்தலத்தில் ஆட்கள் பற்றாகுறை இப்படி பல சிக்கல்களை மனித சமூகம் எதிர் கொண்டு வருகின்றது.இந்த பிரச்சனைகளுக்கு மத்தியிலும் டாக்ட்டர்களும் தாதிமாரும் சுகாதார வைத்திய சோவையில் கடமை புரிபவர்கள் தங்கள் கடைமைகளை கடவுள் போல் இருந்து காப்பாற்றுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் நன்றி உணர்வோடு ஏற்றுக்கொள்கின்றனர்.

இப்படி காலம் காலமாக பரவும் கொடிய தொற்று நோய்களினால் உலகம் நிம்மதி இழந்து தவித்த வந்த வரும் துன்பவியல் காரணமாக மனிதர்கள் நின்மதி இழந்து அருகில் இருப்பவர்களை இழந்து பெரும் துயரங்களுடன் மனித வாழ்வு கடந்து போகிறது .இந்த துயர காலத்தில் இருந்து இன மத பேதம் கடந்து எல்லா மக்களையும் அரசு தமது மக்கள் போல் எண்ணி அவர்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்ய வேண்டியது அந்த அரசின் கடமையாகும்.வரு முன்பே பாதுகாக்கும் பணியையும் சரியான தகவல்களும் அந்த நாட்டு மக்களுக்கு மனித நேயத்தோடு  வழங்க வேண்டும்.அதேபோல் எல்லா துறைசார் வல்லுனர்களும் உழைக்க வேண்டும் .நாளைப்பொழுது நல்லபொழுதாகுமென்று நம்பிக்கை வைத்தபடி எல்லாமே கடந்து செல்லும் என்ற நம்பிக்கையோடு நாம் இன்று பயணிப்போம்.


பா.உதயன் /Oslo/14-03-20

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.