Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்! கட்டுப்படுத்த முடியாது திணறும் இராணுவமும் பொலிஸாரும்!

Featured Replies

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு இன்று காலை 6 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பொது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் பெருமளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கல்முனை, சாய்ந்தமருது ,மத்திய முகாம், கல்முனை ,மருதமுனை ,சம்மாந்துறை, அக்கரைப்பற்று, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் பொருட்களை கொள்வனவு செய் அதிகளவு பொதுமக்கள் முண்டியடிப்பதை காணமுடிந்தது.

கல்முனை பொதுச் சந்தை , சதோச போன்ற இடங்களில் பெருமளவு வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்துவருகின்றனர். பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருவதோடு மக்களுக்கான சுகாதார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றா என்பதையும் அவதானித்து வருகின்றனர். பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் வீதி வீதியாக மக்களை தெளிவுபடுத்தும் அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர் .

அரசாங்கம் ஏற்கனவே அறிவுறுத்தியபடி உரிய சுகாதார முறைப்படி முகவசம் அணியாமல் வருகை தந்வர்கள் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு செய்யும் இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கப்பட்டனர்.

பொருட்கள் கொள்வனவு செய்ய கட்டுக்கடங்காமல் கூடிவரும் மக்களிடையே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், கல்முனை மாநகர சபை , கல்முனை பிராந்திய பொலிஸார் , இராணுவத்தினரும் இணைந்து மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தி வருகின்ற போதிலும் குவியும் சனக்கூட்டத்தை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.

மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்ததற்காக கூடியிருந்தவர்கள் அங்கிருந்து பொலிஸாரினால் அகற்றப்பட்டு வருகின்றனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg


https://www.ibctamil.com/srilanka/80/139599?ref=ibctamil-recommendation
  • தொடங்கியவர்

கிழக்கு மக்களுக்கு போதியளவு பாதுக்காப்பு முறைகள் தெரிவிக்கப்படவில்லையா, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லையா அல்லது மக்கள் தான் இப்பிடி பொறுப்பற்று நடக்கிறார்களா தெரியவில்ல?

நாளைக்கு ஊரடங்கு நீக்கப்படும் போது யாழ்பாணத்திலயும் இப்பிடி பொறுப்பற்ற நிலைமையை எதிர்பார்க்கலாமா?

தெற்கில மக்கள் பொறுப்புணர்வோடு செயற்படுவதா தெரியுது.

  • தொடங்கியவர்

வர்த்தக நிலையங்களில் குவியும் மக்கள்! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு பெருமளவில் மக்கள் வருகைதந்து பொருட்களை கொள்வனவு செய்தனர்.

ச.தொ.சா. விற்பனை நிலையங்கள், வங்கிகள், சுப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஏனைய முக்கியமான சில வர்த்தக நிலையங்களில் மக்கள் அணிவகுந்து நின்றதை காணக்கூடியதாக இருந்தது. எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாகனங்கள் வரிசையாக நின்றன.

கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள நகரங்களில் இந்நிலைமையே காணப்பட்டது.

பொலிஸ் ஊடரங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து நகரங்களுக்கு வருபவர்கள் சுயபாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மக்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

கட்டாயம் முக கவசம் அணியுமாறும், வரிசைகளில் நிற்கும்போது மூன்றடி இடைவெளியை பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

மேற்படி நடைமுறையை 75 வீதமானோர் கடைபிடித்திருந்தாலும் ஏனையோர் அறிவுறுத்தல்களை உரிய வகையில் பின்பற்றாமல் இருப்பதையும் நகரப்பகுதிகளில் காணக்கூடியதாக இருந்தது.

ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, நுவரெலியா, மஸ்கெலியா, பொகவந்தலாவ உட்பட நுவரெலியா மாவட்டத்திலுள்ள நகரங்களுக்கு வந்திருந்தவர்களுள் ஒருசிலர் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதுடன், முகக்கவசங்களையும் அணியவில்லை.

இதனால் ஏனையோர் பெரும் தர்மசங்கடத்துக்கு உள்ளானார்கள். மூன்றடி இடைவெளியை கூட பின்பற்றாமல் சிலர் கூட்டமாக இருப்பதையும் காணமுடிந்தது. இத்தகையவர்களுக்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், எச்சரிக்கை விடுத்ததுடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கினர்.

அதேவேளை, உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டிய மக்கள், இரு வாரத்துக்குரிய பொருட்களை ஒரேதடவையில் கொள்வனவு செய்தனர் என வர்த்தக பிரமுகர்கள் தெரிவித்தனர்.

நகரத்தின் சில இடங்களில் கைகளை கழுவுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மதியம் 2 மணியுடன் பொலிஸ் ஊடரங்குச்சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என்பதால் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவைகளே இடம்பெற்றன.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpghttps://www.ibctamil.com/srilanka/80/139609

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியில் ...சூனாவை கேட்டாலே பெட்ரோல் நிலையத்தில் முண்டியடித்து இருக்கும் பெற்றோலையெல்லாம் காலி செய்யும் கூட்டம் ..கொரானாவுக்கு என்ன பாடு படுத்தும் . இதுகளையெல்லாம் எதை சொல்லியும் திருத்த முடியாது. முண்டியடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக சென்று வாங்கினால் எல்லோருக்கும் பொருட்களும் கிடைக்கும் கொரானாவும் பரவாது .இப்போது முண்டியடித்து பொருள் வாங்குரன் என்ற பெயரில் கொரானாவை வாங்கப்போகினம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சுனாமியில் ...சூனாவை கேட்டாலே பெட்ரோல் நிலையத்தில் முண்டியடித்து இருக்கும் பெற்றோலையெல்லாம் காலி செய்யும் கூட்டம் ..கொரானாவுக்கு என்ன பாடு படுத்தும் . இதுகளையெல்லாம் எதை சொல்லியும் திருத்த முடியாது. முண்டியடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக சென்று வாங்கினால் எல்லோருக்கும் பொருட்களும் கிடைக்கும் கொரானாவும் பரவாது .இப்போது முண்டியடித்து பொருள் வாங்குரன் என்ற பெயரில் கொரானாவை வாங்கப்போகினம் 

உதெல்லாம் சிலோன்ல மட்டுமில்லை......உலகம் பூரா உதுதான் நடக்குது......இஞ்சை கடையள்ல அரிசியுமில்லை மாவுமில்லை கை கழுவுற மருந்துமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.