Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமுர்த்தி பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க ஏற்பாடு

Featured Replies

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு வறிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு முற்பணமாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து செல்வதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருப்பதால் நாளாந்தம் வருமானம் பெற்று தமது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வந்த பல குடும்பங்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் அவர்கள் தமது அத்தியாவசிய தேவைகளை குறைந்தளவேனும் நிவர்த்திசெய்து கொள்வதற்கான முன்னேற்பாடாக சமுர்த்தி பெறும் பயனாளிகளுக்கு முன்னேற்பாடாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதுடன் அதற்கான அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பித்துள்ளேன்.

அத்துடன் குறித்த கொடுப்பனவை கொரோனா வைரஸின் தாக்கம் முழுமையாக அகன்ற பின்னர் அதை அவர்களிடமிருந்து மீளப் பெறுவதா? அல்லது நிவாரணமாக வழங்குவதா என்பது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து அது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/139642

வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம் ஆரம்பம்!

In இலங்கை     March 24, 2020 12:46 pm GMT     0 Comments     1201     by : Litharsan

Peoples-Help-Plan-in-Jaffna-Corona-virus-alert-curfew-time.jpg

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் உதவித் திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “யாழ். மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச செயலர் பிரிவுகளிலும் அன்றாடம் கூலித்தொழில் செய்துவரும் வருமானம் குறைந்த குடும்பங்களின் விபரம் அந்தந்த கிராம சேவகர் ஊடாகத் திரட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போது, கோதுமை மா மாத்திரம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக இடர் முகாமைத்துவப் பிரிவுக்குக் கிடைத்துள்ளது.

இதனால் நாளை காலை முதல் பிரதேச செயலர்கள் ஊடாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவினரால் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும்” என மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Peoples-Help-Plan-in-Jaffna-Corona-virus-alert-curfew-time-2-scaled.jpg

Peoples-Help-Plan-in-Jaffna-Corona-virus-alert-curfew-time-1-scaled.jpg

சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் – பிரதமர் அலுவலகம்!

In இலங்கை     March 29, 2020 10:35 am GMT     0 Comments     1966     by : Benitlas

சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அரச அலுவலர்களுக்கான வருடாந்த விழா முற்பணத்தை வழங்கவும், இருபத்தி மூன்று இலட்சம் சமூர்த்திக் குடும்பங்களுக்கு ஆரம்பக் கொடுப்பனவாக 5000 ரூபாவையும், அங்கவீனர் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளாத, காத்திருப்புப் பட்டியலில் உள்ள அங்கவீனர்களுக்கும் ஏற்புடைய கொடுப்பனவை வழங்கவும் ஜனாதிபதி மற்றும் பிரதம அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளது.

அத்துடன் ஓய்வூதிய, முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுவோருக்கு ஏற்புடைய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதியின் கீழ் ஓய்வுபெற்றோர் மற்றும் முதியோரின் வீடுகளுக்கே அனுப்பிவைக்கும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 3ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கும் செயலணியின் பங்களிப்பு வழங்கப்படும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/சமூர்த்தி-பயனாளிகளுக்கு/

  • கருத்துக்கள உறவுகள்

சமுர்த்திக் கடன்: அம்பலத்துக்கு வந்த கோத்தபாயவின் திருகுதாளம்

z_p12-Gotabaya.jpg

கொரோனா நிவாரணமாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா கடன் மற்றும் உலர் உணவுப் பொருள் விநியோகத்தில் அரசு மேற்கொண்ட திருகுதாளம் அம்பலமாகியுள்ளது. சமுர்த்திப் பயனாளிகளுக்க வழங்கப்படவுள்ளதாகச் சொல்லப்படும் 10 ஆயிரம் ரூபா கடன் தொகைக்குள்ளேயே அவர்களுக்கான உலர் உணவுப் பொதி விநியோகமும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிவாரணப் பொதியை அறிவித்திருந்தார். அதில் சமுர்த்திப் பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா இலகு கடனாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடன், சமுர்த்திப் பயனாளிகளின் கட்டாய சேமிப்பை பிணையாக வைத்தே வழங்கப்படவுள்ளது. அதிலும் 5 ஆயிரம் ரூபாவே முதல் கட்டமாக வழங்கப்படவுள்ளது. அந்தக் கடனுக்கு வட்டி அறவிடப்படமாட்டாது. 12 மாதங்களுக்குள் அதனைச் செலுத்த வேண்டும்.

இதேவேளை, சமுர்த்திப் பயனாளிகளுக்கு அங்கத்தவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆயிரத்து 500 ரூபா, 2 ஆயிரத்து 500 ரூபா, 3 ஆயிரத்து 500 ரூபா உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் பொதிகள் இலவசமாக வழங்கப்படாது என்றும், 10 ஆயிரம் ரூபா இலகு கடனில் உலர் உணவுப் பொதிக்குரிய பெறுமதி கழிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நிவாரணம் வழங்குவதாக கூறிக் கொண்டாலும் உண்மையில் சமுர்த்திப் பயனாளிகளின் பணத்தையே அவர்களுக்கு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு ஏமாற்றியுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.vanakkamlondon.com/gota-gv-29-03-2020/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.