Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடல்களை வீதிகளில் கைவிடும் மக்கள்- ஈக்குவடோரின் நிலை இது.

Featured Replies

ஈக்குவடோரில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் வீதிகளில் கைவிடப்படும் நிலை காணப்படுவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

ஈக்குவடோரின் காயிகுயல் நகரில் வீதிகளில் உடல்கள் காணப்படுவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

ஈக்குவடோனின் அதிக சனத்தொகையை கொண்ட இந்த நகரில் பொதுச்சேவை செயல் இழக்கும் நிலையில் உள்ளது, நோயாளிகளை ஏற்றுக்கொள்வதற்கான இடம் மருத்துவமனைகளில் இல்லை,பிரதே அறைகளும், இறுதிசடங்குகள் இடம்பெறும் பகுதிகளும் நிரம்பி வழிகின்றன என சிஎன்என் தெரிவித்துள்ளது.

வேறு வழியில்லாமல் நாங்கள் இறந்தவர்களை வீடுகளிற்கு வெளியே வைக்கின்றோம் என சில குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

-guayaquil-ecuador-coronavirus-0401-exla


நாங்கள் ஐந்து நாட்களாக காத்திருக்கின்றோம் என தெரிவித்துள்ள பெர்ணான்டோ எஸ்பானா என்பவர் அதிகாரிகளை உடல்களை அகற்றுமாறு கேட்டுக்கொள்வது மிகவும் கடினமான விடயமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

நாங்கள் அதிகாரிகளை தொடர்புகொண்டுள்ளோம் அவர்கள் எங்களை காத்திருக்க சொல்கின்றனர் என குறிப்பிட்டுள்ள நபர் கமராவை வீட்டை நோக்கி திருப்புகின்றார் உள்ளே கறுப்பு பிளாஸ்டிக் பையினால் சுற்றப்பட்ட உடல் ஒன்று காணப்படுகின்றது என சிஎன்என் ரொய்ட்டர் செய்திச்சேவைகள் தெரிவித்துள்ளன.

துர்நாற்றம் தாங்க முடியாததாக உள்ளது என தெரிவித்துக்கும் எஸ்பானாவின் அயல்வீட்டவர்கள் எங்கள் வீடுகளில் சுவாசப்பிரச்சினை உள்ள முதியவர்கள் உள்ளனர் என தெரிவிக்கின்றார்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் உடலை வீதியில் கைவிட்டுச்செல்வதையும் பின்னர் பாதுகாப்பு உடையணிந்தவர்கள் அதனை வான் ஒன்றில் கொண்டு செல்வதையும் காண்பிக்கும் வீடியோக்களும் கிடைத்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

உடலொன்றை காரிலிருந்து அகற்றி கறுப்பு பையொன்றில் சுற்றுவதற்கு சிலர் முயல்வதையும் காவல்துறையினர் வந்ததும் அவர்கள் அதனை மீண்டும் காரில்கொண்டு செல்வதையும் காண்பிக்கும் வீடியோவும் கிடைத்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

மர்hச் இறுதி வாரத்தில் மாத்திரம் ஈக்குவடோர் அதிகாரிகள் 300 உடல்களை அகற்றியுள்ளனர் என சிஐஏயின் முகநூல் தெரிவித்துள்ளது.

guayaquil-ecuador-coronavirus-0402-restr


கடந்த புதன்கிழமை வழங்கிய பேட்டியில் ஈக்குவடோரின் கூட்டு இராணுவ செயலணியின் தலைவர் ஜோர்கே வட்டெ; கடந்த மூன்று நாட்களில் நாள்ஒன்றிற்கு 150 உடல்களை அகற்றியுள்ளோம் என தெரிவித்துள்ளார்

கடந்த வாரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் வீடியோவில் காயிகுயல் நகரின் மேயர் சிந்தியா விட்டேரி தேசிய அரசாங்கத்தை உதவுமாறு மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் பொது சுகாதார துறைக்கு என்ன நடக்கின்றது அவர்கள் உடல்களை எடுத்துச்செல்கின்றார்கள் இல்லை,அவர்கள் உடல்களை வீதியில் விட்டுச்செல்கின்றனர் ,அவர்கள் மருத்துவமனையின் முன்னாள் விழுந்து இறக்கின்றனர் யாரும் அவற்றை எடுக்க முயலவில்லை என தெரிவித்துள்ள அவர் இறந்தவர்களின் எண்ணிக்கை எங்களிற்கு தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/79241

https://www.cnn.com/2020/04/03/americas/guayaquil-ecuador-overwhelmed-coronavirus-intl/index.html

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.