Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவால் சூழப்பட்ட நியூயோர்க் – நாடுகளின் பாதிப்பு எண்ணிக்கையை, தனி ஒரு மாநிலம் முந்தியது!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

US-1.jpg

கொரோனாவால் சூழப்பட்ட நியூயோர்க் – நாடுகளின் பாதிப்பு எண்ணிக்கையை, தனி ஒரு மாநிலம் முந்தியது!!!

கொரோனோ வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் தனிப்பட்ட பாதிப்புகளை அமெரிக்காவின் தனி ஒரு மாநிலமான நியூயோர்க் முந்திச் சென்றுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

கோவிட் -19 இன் பரவுகை ஆரம்பிக்கப்பட்ட பின் நேற்று வியாழக்கிழமை 10,000 பேர் புதிதாக இனம் காணப்பட்டு உள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 159,937 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்பெயினின் 153,000 பேர் மற்றும் இத்தாலியின் 143,000 பேர் என்ற எண்ணிக்கைகளை விட அதிகமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு 82,000 பேர் அளவிலேயே பாதிக்கப்பட்டதாக சீனாவின் உத்தியோகபூர்வதகவல்கள் தெரிவித்திருந்தன.

கொரோனா வைரஸ் பாதிப்புகளில் நியூயார்க் மாநிலம் உலகத்தில் முன்னிலை வகிக்கும்போது, அதன் இறப்பு எண்ணிக்கை (7,000) ஸ்பெயினையும் (15,500), இத்தாலியையும் (18,000) விட பின்தங்கியிருக்கிறது, இருப்பினும் இது சீனாவின் (3,300) உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

நியூயார்க் நகரில் ஒரு வெகுஜன புதைகுழியில் சவப்பெட்டிகளை புதைக்கும் தொழிலாளர்களின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் தொழிலாளர்கள் மேசைகளைப் பயன்படுத்தி ஒரு பெரிய குழிக்குள் இறங்குவதை ட்ரோன் கருவிகளினூடு பெறப்பட்ட காட்சிகள் வெளிக்கொணர்ந்துள்ளன.

இந்த படங்கள் ஹார்ட் தீவில் (Hart Island, off the Bronx,) எடுக்கப்பட்டுள்ளன, இது 150 ஆண்டுகளுக்கும் முன்னதாக, உறவினர்கள், குடும்பங்களினது உறுப்பினர்களின் இறுதிச் சடங்குகள் செய்யும் இடமாக ஒரு பெரிய புதைகுழியாக நகர அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/கொரோனாவால்-சூழப்பட்ட-நிய/

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி ! உலகளவில் ஒரு இலட்சத்தை கடந்தது !

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ள நிலையில், அதிக இறப்புகள் பதிவான நாடுகளாக அமெரிக்கா, இங்கிலாந்தும் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் விளங்குகின்றன.

Covid_19_us.jpg

அமெரிக்காவில் நேற்று வரை, 502,876 பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 18,747 பேர் உயிரிழந்துள்ளனர்.  நேற்றைய தினம் மாத்திரம் அமெரிக்காவில் உயிர் பலி 2,035 ஆக உள்ளது. இது அமெரிக்காவில் ஒரே நாளில் பதிவான அதி உயர் உயிரிழப்பாகும்.

இந்நிலையில் உலகளவில் இதுவரை அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள இத்தாலியில் நேற்றைய தினம் வரை 147,577 பாதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் பதிவான 570 இறப்புகளுடன் மொத்த இறப்பு எண்ணிக்கை 18,849, ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியில் நிலை முன்பைவிட முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் அதிக இறப்புகள் பதிவான நாடாக இன்றுமுதல் அமெரிக்கா விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதே வேளை அமெரிக்காவில், சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிலையம் தொற்றுநோய் குறித்து சில முக்கிய செய்திகளை வெளியிட்டுள்ளது. இதன் படி அமெரிக்காவின் இறப்பு, வெள்ளிக்கிழமை வரை 1,983 ஐ எட்டும் எனினும், எதிர்வரும் நாட்களில் வீழ்ச்சியடையும் என்று கணித்துள்ளது.

 

https://www.virakesari.lk/article/79735

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.