Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

699 சிங்கப்பூர் குடிமக்கள் இந்தியாவிலிருந்து சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டனர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

699 சிங்கப்பூர் குடிமக்கள் இந்தியாவிலிருந்து சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டனர்!

 

indian_changiairport_corona_11042020.jpg

 

உலக அரக்கன் கொரோனாவினால், உலக நாடுகள் திடீரென எந்தவொரு நகர்வு அற்ற நிலையில் இருக்க வேண்டிய கட்டாயத்தால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இவ்வகையில் சிங்கப்பூர் குடிமக்கள் இந்தியாவில் பயணம் மேற்கண்ட போது தங்களது நாட்டிற்கு திரும்ப இயலாத நிலை உருவானது.

இந்த சிக்கலை தீர்வுக்கு கொண்டு வர, சிங்கப்பூர் வெளியூறவுத்துறை எடுத்த நடவடிக்கையால், 699 சிங்கப்பூர் குடிமக்கள் நேற்று (10-04-2020) தங்களது நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் சிங்கப்பூர் சங்கி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிங்கப்பூர் சென்ற அவர்களை சிங்கப்பூர் அரசு உடனடியாக விடுதிகளில் தனிமைப்படுத்தி கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என ஆய்வு செய்கிறது. சிங்கப்பூரில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என்பதை அறிக.

சென்ற வாரம் இதுபோன்றே நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சென்னையிலிருந்து மலேசிய நாட்டிற்கு அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://worldtamilforum.com/asia/coronavirus-singapore-citizens-india/?fbclid=IwAR3wfVGqdl4QToqn8WoeQem7FQAO5d-LRhjnh7jp0xgoDKBmRhRSJg673z4

சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்குள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானதை அடுத்து அவர்களில் ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் புதிதாக 623 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது என்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில்தான் அதிக எண்ணிக்கையிலான கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த இருவார நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது இம்மாத இறுதிக்குள் குறைந்தது10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் அலெக்ஸ்குக் தெரிவித்துள்ளதாக சிங்கப்பூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்று தெரியவந்ததை அடுத்து அத்தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளை தனிமைப்படுத்தி வருகின்றனர்.

இதுவரை 12 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கும்விடுதிகளில் மட்டும் மொத்தம் 2,689 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகிஉள்ளது.

https://www.bbc.com/tamil/live/global-52320089

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.