Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம், கேரளாவில் வவ்வால்களில் கொரோனா வைரஸ்; ஐ.சி.எம்.ஆர். ஆய்வறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழகம், கேரளாவில் வவ்வால்களில் கொரோனா வைரஸ்; ஐ.சி.எம்.ஆர். ஆய்வறிக்கை

தமிழகம், கேரளாவில் வவ்வால்களில் கொரோனா வைரஸ்; ஐ.சி.எம்.ஆர். ஆய்வறிக்கை
 
 
 
உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்துள்ளது.  இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதுவரை 377 பேர் பலியாகி உள்ளனர்.
 
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. இதனடிப்படையில் 10 மாநிலங்களில் உள்ள 2 வகையான வவ்வால் இனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
 
இதன் முடிவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வவ்வால் இனங்களில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், ஒடிசா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா வைரஸ் இல்லை என தெரிய வந்துள்ளது.
 
இதனை தொடர்ந்து, மற்ற விலங்குகளிலும் கொரோனா பாதிப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட வேண்டும் என அந்த ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.  இதற்கு முன்னதாக கேரளாவில் நிஃபா வைரஸ் தாக்கத்தின் போது வவ்வால்களில் வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களிடமிருந்து வௌவால்களுக்கு கொரோனா பரவினால் பேரழிவு என்கிறார்கள் அறிவியலாளர்கள்

மனிதர்களிடமிருந்து வௌவால்களுக்கு கொரோனா பரவுவது அபூர்வம்தான், ஆனால் அப்படிப் பரவினால் அது பயங்கர பேரழிவை ஏற்படுத்தும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

ஆகவே, உயிரியலாளர்களும் வனத்துறை தன்னார்வலர்களும் கொரோனா பரவும் இந்த காலகட்டத்தில் வௌவால்களை கையாளவேண்டாம் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

கனேடிய வனத்துறை நல கூட்டுறவு அமைப்பான CWHC. வௌவால்கள் தொடர்பான பணிகளை நிறுத்துமாறு பரிந்துரைக்க இருப்பதாக வின்னிபெக் உயிரியலாளர் Craig Willis தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றிய உயிரியலாளர்களிடமிருந்து வௌவால்களுக்கு கொரோனா பரவுவது அபூர்வம்தான், ஆனால் அப்படிப் பரவினால் அது பயங்கர பேரழிவை ஏற்படுத்தும் என்கிறார் Willis.

அப்படி ஒருவேளை பரவினால், பல மில்லியன் வௌவால்கள், கொரோனாவைப் பரப்பும் உயிரினங்களாக மாறிவிடும் என்கிறார் அவர்.

 

அப்படி நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்றாலும், ஒருவேளை அப்படி நடந்துவிட்டால் மக்கள் மீது ஏற்படும் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும்.ஏற்கனவே, கொரோனா வௌவால்களிடமிருந்துதான் பரவியது என்கிற கருத்து நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.

ஆனால், உண்மையில் அது எங்கிருந்து வந்தது என்பது யாருக்கும் தெரியாது என்று கூறும் Willis, ஒருவேளை அது வட அமெரிக்க வௌவால் இனமான சிறு பழுப்பு வௌவாலிடமிருந்து கூட இருக்கலாம் என்கிறார்.

ஏற்கனவே கையுறைகள் மாஸ்குகள் ஆகியவை குறைவாக இருக்கும் நிலையில், அவற்றை இப்போதைக்கு மக்களுக்கு பயன்படுத்துவதை விட்டு வௌவால்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவது நன்றாக இருக்காது என்கிறார் Willis.

ஆகவேதான் இப்போதைக்கு வௌவால்கள் மீதான ஆராய்ச்சிகளை தொடரவேண்டாம் என்கிறார் அவர்.

 

http://thinakkural.lk/article/38785

 

 

முன்னைய செய்திகள் வௌவால்கள் அதிகளவு வைரசுகளுடன், கொரோனா உட்பட, வாழும் ஒரு பாலூட்டி என கூறின. எல்லாம் குழப்பமாய் உள்ளது. இல்லை குழப்புகிறார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ampanai said:

முன்னைய செய்திகள் வௌவால்கள் அதிகளவு வைரசுகளுடன், கொரோனா உட்பட, வாழும் ஒரு பாலூட்டி என கூறின. எல்லாம் குழப்பமாய் உள்ளது. இல்லை குழப்புகிறார்கள். 

ஆமாம் நன்றாக குழப்புகின்றார்கள்

அவற்றுக்கு தொற்றினாலும் பாதிப்பு இருக்காது என்று நினைக்கின்றேன், அவை வைரஸை காவித்திரியாலாம் பல இடங்களுக்கு, அதுதான் விஞ்ஞானிகளின் கவலையோ?

40 minutes ago, உடையார் said:

ஆமாம் நன்றாக குழப்புகின்றார்கள்

அவற்றுக்கு தொற்றினாலும் பாதிப்பு இருக்காது என்று நினைக்கின்றேன், அவை வைரஸை காவித்திரியாலாம் பல இடங்களுக்கு, அதுதான் விஞ்ஞானிகளின் கவலையோ?

காவித்திரியலாம். ஆனால், வௌவால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவாமல் இருந்தது. தற்பொழுது பரவுவிட்டது  என்கிறார்கள் 😞 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.