Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொடுப்பனவு வழங்கப்படும் - அரசாங்கம் அறிவிப்பு!

Featured Replies

(ஆர்.யசி)

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த நாட்டில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சகலருக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது அவர் இவற்றை கூறினார்.

இது குறித்துஅவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் துறையினர் தமது பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு அரசாங்கத்திற்கு பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

தமக்கான நிவாரண கொடுபனவுகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே தடவையில் வழங்கும் விதத்தில் 5000 ரூபாய் கொடுப்பனவு தொகையை சமுர்த்தி அதிகாரிகள் மூலம் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நிதித்தொகை அவர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் குறிப்பாக சிறு தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்கள், தனியார் பேருந்து ஓட்டுனர்கள், வாகன சாரதிகள், சிறு வியாபர்கள், கட்டட தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், தச்சர்கள், நாட்கூலியாக வேலைசெய்யும் நபர்கள், தொழிற்சாலைகளில் வேலைசெய்பவர்கள், நாடக நிறுவனங்கள், நிகழ்வுகளுக்கு பொருட்களை வழங்குபவர்கள், சிகை அலங்கார தொழிலில் ஈடுபடுபவர்கள், பிராந்திய செய்தியாளர்கள் என அனைவரும் உள்ளடக்கப்படுவார்கள்.

தமக்கான நிதி உதவிகளை பெற்றுக்கொள்ளும் விண்ணப்பப்பத்திரம் சகல பிரதேச சபைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கிராமிய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமும் பத்திரத்தை பெற்று தமக்கான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். இதில் சமுர்த்தியில் இணைந்தவர்கள் மட்டுமல்லாது ஏனைய அனைவரும் தமக்கான கோரிக்கையை முன்வைக்க முடியும்.

இதற்கு மேலதிகமாக அடையாளம் காணப்பட்டு, காத்திருப்பு பட்டியலிலும் உள்ளடக்கப்படாதவர்கள் இருப்பினும் கிராம குழுவின் மூலம் கடைபிடிக்கப்பட்டுள்ள முதியவர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்காக இந்த 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போது கொடுப்பனவு பெற்று வரும் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ள 574,387 முதியவர்கள் தவிர்ந்த இதற்கு மேலதிகமாக, 61,615 பேருக்கு 5,000 ரூபாய் முதியோர் கொடுப்பனவை வழங்கப்படவுள்ளது. கொடுப்பனவு பெற்று வரும் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ள 109,494 விசேட தேவையுடையவர்களுக்கு மேலதிகமாக 14,195 பேருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனைவு செலுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போது கொடுப்பனவு பெற்றுவரும் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ள 38,747 சிறுநீரக நோயாளிகளுக்கு மேலதிகமாக, மேலும் 5,884 பேருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனைவு செலுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கொடுப்பனவுகள் கிராம சேவகர்களால், குறித்த பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள சகல அதிகாரிகளும் இந்த சேவைகளை முன்னெடுக்கும் போதும் முறையான சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/80021

  • தொடங்கியவர்
2 minutes ago, ampanai said:

இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நிதித்தொகை அவர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் குறிப்பாக சிறு தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்கள், தனியார் பேருந்து ஓட்டுனர்கள், வாகன சாரதிகள், சிறு வியாபர்கள், கட்டட தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், தச்சர்கள், நாட்கூலியாக வேலைசெய்யும் நபர்கள், தொழிற்சாலைகளில் வேலைசெய்பவர்கள், நாடக நிறுவனங்கள், நிகழ்வுகளுக்கு பொருட்களை வழங்குபவர்கள், சிகை அலங்கார தொழிலில் ஈடுபடுபவர்கள், பிராந்திய செய்தியாளர்கள் என அனைவரும் உள்ளடக்கப்படுவார்கள்.

பாராட்டப்பட வேண்டிய முயற்சி. சகல சிறுபான்மை மக்களையும் கூட உள்ளடக்கி இந்த உதவிகளை ஏமாற்றாமால் செய்வீர்கள் என நம்புவோம். 

சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்களின் ஆளுமைக்கும் பாராட்டுக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ampanai said:

சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்களின் ஆளுமைக்கும் பாராட்டுக்கள் 

வெற்றி பெறுவாய் என்று முன்னரே பரிசுகொடுப்பது வழமையல்ல. வெற்றி பெற்றபின் பரிசு கொடுப்பதே நடைமுறை.

  • தொடங்கியவர்
4 hours ago, Paanch said:

வெற்றி பெறுவாய் என்று முன்னரே பரிசுகொடுப்பது வழமையல்ல. வெற்றி பெற்றபின் பரிசு கொடுப்பதே நடைமுறை.

ஆனாலும்

1. இதுவரை இலங்கையில் சிறப்பாக கையாளப்படும் பரவல், தடுப்பு, சுகாதார உதவி 

2. 2. சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பொருளாதார நலன்களையும் அறிவிக்கிறார். ஆனால், நிதி அமைச்சரை காணவில்லை.

3. 3. ஒரு பெண் அமைச்சர் இலங்கையில் சிறப்பாக செயற்படுவதை ஊக்கபடுத்தல் தேவை என படுகின்றது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.